Go to full page →

அத்தியாயம்-39 CCh 455

புலன்களைக் காத்தல் CCh 455

சாத்தான் மேற்கொள்ளா வண்னம் எல்லாப் புலன்களும் காக்கப்பட வேண்டும்; ஏனெனில் இவைகளே ஆத்துமாவுக்குச் செல்லும் வழிகள். CCh 455.1

உங்கள் மனசைக் காத்து உங்கள் ஆத்துமாவைக் கெடுக்கும் வீணான சிந்தைகளைத் தடுக்க நீங்கள் உங்கள் கண்கள், காதுகள், மற்றும் புலன்களை காக்கும் உண்மையுள்ள காவற்காரராயிருக்க வேண்டும். கிருபையின் வல்லமை மட்டுமே விரும்பும் இந்த மாபெரும் வேலையைச் செய்ய முடியும். CCh 455.2

எச்சரிப்புகளும், கண்டிப்புகளும், கடிந்துகொள்ளுதலும் கேட்கக் கூடாதபடி செய்யச் சாத்தானும் அவன் தூதர்களும் புலன்களைத் திமிர் பிடிக்கச் செய்யும்படி பலமாய் உழைத்துக் கொண்டிருப்பார்கள்; அல்லது கேட்டாலும் ஜீவிய மாறுதல் ஏற்படா வண்ணம் இருதயத்தில் கிரியை செய்ய விடார்கள். CCh 455.3