ஆண்டவரின் தொண்டர்களாக தாங்கள் செய்யவ்னேடிய பாகத்தைக் குறித்து அவர்களுக்கு ஞானமாய்ப் போதிக்க நாம் ஒழுங்கு செய்யக் கூடுமானால் நமது சபைகளுக்கு வெகு காலமாய் அவசியம் வேண்டியிருந்த ஜீவன் கிடைக்கும். இரட்சிக்கும்படி கிறிஸ்து மரித்த அந்த ஆத்துமாவின் மேன்மை பாராட்டப்படட்டும். நமது சகோதரிகள் பொதுவாய் அதிகரித்துள்ள தங்கள் குடும்பங்களோடும் பாராட்டப்படாத சோதனைகலோடும் எப்பொழுதும் கஷ்டப்படுகிறார்கள். நமது சகோதரிகளை அவர்களுடைய அதைரியத்தி னின்றும் எழுந்திருக்கச் செய்து அவர்களும் ஆண்டவருக்கென்று ஓர் வேலை செய்யக் கூடுமென்று என்னும்படி செய்கிறதற்கு பயிற்றுவிக்கக் படக்கூடிய ஸ்த்ரீகளுக்காக நான் வெகுவாய் வாஞ்சித்தேன். இது அவர்களுடைய சொந்த ஜீவியன்களிலே சூரியப் பிரகாசக் கதிர்களை கொண்டுவருவதுடன் மற்றவர்களுடைய ஜீவியங்களிலும் அவைகள் பிரதி பிம்பிக்கச் செய்யும். இம்மகத்தான வேலையில் சேருகிற அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பார். LST 170.2