நீ எங்கே இருந்தாலும் நீ உடனே ஆரம்பிக்கக் கூடும். சமயங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிற தாயிருக்கின்றன. உன் வீட்டிலும் உன் அயலகத்திலும் செய்யப்பட வேண்டிய வேலைக்கு நீ உத்திர வாதியாய் இருக்கிறபடியினால் அதை எடுத்துச் செய். அதைச் செய்யும் படிக்கு மற்றவர்கள் உன்னை ஏவும் வரைக்கும் நீ காத்திராதே. உனக்காக தமது ஜீவனைக் கொடுத்தவருக்கு உன் சொந்தத்தில் நீ உத்திரவாதியாய் இருக்கிறதை நினைத்துக் கொண்டு தெய்வ பயத்தில் தாமதமின்றி முன்னேறிப் போ. அவருடைய ஊழியத்தில் உன்னுள் இயன்ற மட்டும் செய்கிறதிற்கு கிறிஸ்து உன்னைப் பிரத்தியேகமாய் அளித்த அழைப்பை நீ கேட்டாற்போல நடந்து கொள். வேறெவரெல்லாம் ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்று நீ பார்க்க வேண்டாம் LST 174.2