இச்சை அடக்கமின்மைக்கு வேய் எதுவென்று கண்டுபிடிக்கும் பொருட்டு நாம் மதுசாரம் அல்லது புகையிலை உபயோகத்தை விட ஆழமாய்ப் போக வேண்டும். சோம்பல், நோக்கமின்மை, அல்லது கேட்ட சகவாசங்கள் இவைகள் முதற் காரணமாய் இருக்கலாம். கண்டிப்பான இச்சை அடக்கமுள்ள குடும்பங்கள் என்கின்றவர்களின் மத்தியில் அது அடிக்கடி காணப்படுகிறது. ஜீரண ஒழுங்கை கெடுக்கிற எதுவும், தகாத மனவெழுச்சியை உண்டாக்குகிற எதுவும், அல்லது சரீர மனோ சக்திகளின் நிதானத்தைக் கெடுத்து எவ்விதத்திலும் சரீரத்தை பலட்சியப் படுத்துகிற எதுவும் மனம் சரீரத்தை அடக்கியாளும் தன்மையைப் பலவீனப்படுத்தி அவ்விதம் இச்சை அட்க்கமின்மைக்கு வழியுண்டாக்குகிறது. ---- Ed. 202-3. LST 179.3