Go to full page →

ஜூன் Mar 303

வரப்போகும் சம்பவங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது!, ஜூன் 1 Mar 303

“கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” - ஆமோஸ் 3:7. Mar 303.1

தவணையின் கால முடிவிற்கும் இக்கட்டுக்காலத்திற்கான ஆயுத்தவேளைக்கும் தொடர்புடைய சம்பவங்கள் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவைகள் ஒருபோதும் வெளியாக்கப்படாவிட்டால், திரளான மக்களுக்கு இந்த முக்கியமான சத்தியத்தைக்குறித்து எந்தவிதமான விளக்கமும் கிடைக்காது. இரட்சிப்பிற்கேற்ற ஞானவான்களாக்கக்கூடிய ஒவ்வொரு எண்ணப் பதிவையும் எடுத்துக்கொண்டுபோய்விடத்தக்கதாக, சாத்தான் விழிப்போடு கவனித்துக்கொண்டிருக்கின்றான். இக்கட்டுக் காலமானது, அவர்கள் ஆயத்தமற்று இருப்பதைக் கண்டுபிடிக்கும். Mar 303.2

இந்த உலகம் சரித்திரத்தின் முடிவை நெருங்கிக்கொண்டு இருக்கும்பொழுது, கடைசி நாட்கள் சம்பந்தப்பட்ட தீர்க்க தரிசனங்கள், அவைகள் நாம் படிக்கவேண்டுமென்று வேண்டுதல் விடுக்கின்றன. புதிய ஏற்பாட்டில் உள்ள வேதவாக்கியங்களின் கடைசிப் புத்தகம் நாம் அவசியமாகப் படித்து விளங்கிக்கொள்ள வேண்டிய சத்தியங்களால் நிறைந்திருக்கிறது. Mar 303.3

வெளிப்படுத்தின விசேஷத்தில் பக்திவிநயமான தூதுகள் அவைகளின் ஒழுங்கின்படியே கொடுக்கப்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்திலுள்ள இந்தத் தூதுகள், தேவனுடைய மக்களின் மனதிலே முதல் இடத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும்... Mar 303.4

அருமையான நேரம் துரிதமாகக் கடந்துசென்றுகொண்டிருக்கிறது. விழுந்துபோன மக்களுக்காக தேவன் அனுப்பியுள்ள தூதுகளைக் கூறியறிவிக்கவேண்டியதற்கான நேரம், அநேகரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் அபாயத்தில் இருக்கிறது. நித்தியத்தின் மெய்யான காரியங்களோடு சம்பந்தப்பட்டவைகளைப் படிப்பதில் ஈடுபடவேண்டிய மனங்களின் கவனங்கள், வேறுவழியாகத் திருப்பப்படுவதைப் பார்த்து, சாத்தான் மகிழ்ச்சியடைகின்றான். Mar 303.5

கிறிஸ்துவின் சாட்சி-மிகவும் பக்திவிநயமான தன்மையுள்ள ஒரு சாட்சி, அது இந்த உலகத்திற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும்.வெளிப்படுத்தின புத்தகம் முழுவதிலும் மிகவும் அருமையான மேன்மைப்படுத்தக்கூடிய வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன; மேலும், மிகவும் அச்சந்தரக்கூடிய--பக்திவிநயமான-முக்கியத்துவம் வாய்ந்த-எச்சரிப்புகளும் இருக்கின்றன. சத்தியத்தைப்பற்றி அறிவு தங்களுக்கு இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிற மக்கள், கிறிஸ்துவினால் யோவானுக்குக் கொடுக்கப்பட்ட சாட்சியை வாசிக்கமாட்டார்களா? இங்கு யூகத்தின் அடிப்படையில் செய்யப்படும் வேலை கிடையாது. அறிவியல் ஏமாற்றங்களும் இல்லை. நமது நிகழ்கால, வருங்கால, நல்வாழ்வு சம்பந்தப்பட்ட சத்தியங்கள் இங்கு இருக்கின்றன; கோதுமைக்கு பதர் என்னவாக இருக்கின்றது? Mar 304.1

வேதவாக்கியங்களை ஆழ்ந்து படிக்கின்ற மாணவர்களாக இருப்பவர்கள், சத்தியத்தின்மீதுள்ள அன்பினால் பெற்றுக் கொண்டவர்கள், இந்த உலகத்தையே சிறைப்படுத்திக்கொள்ளப்போகும் வலுவான ஏமாற்றத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். வேதாகம் சாட்சியினால், ஏமாற்றுக்காரனை அவனது மாறுவேடத்திலும் கண்டுபிடித்துவிடுவார்கள். அனைவருக்கும் அந்த சோதனை நேரம் வரும். சோதனையினால் சலிக்கப்படும்போது, மெய்யான கிறிஸ்தவன் வெளியரங்கமாகக் காட்டப்படுவான். தங்களது புலன்களின் ஆதாரத்திற்கு, தங்களை ஒப்புக்கொடுக்காத அளவிற்கு, தேவனுடைய மக்கள் அவரது வார்த்தையில் உறுதியாக நிலைத்திருக்கிறார்களா? இத்தகைய நெருக்கடி மிகுந்த நேரத்தில் “வேதாகமம், வேதாகமம் மட்டுமே” என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பார்களா?⋆ Mar 304.2

வாக்குத்தத்த வசனம்: Mar 304.3

“உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாகயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.” - ஏசாயா 60:20. Mar 304.4