Go to full page →

இயற்கை நிலையின் தன்மைக்கு அப்பாற்ப்பட்ட தோற்றங்கள்!, ஜூலை 21 Mar 403

“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.” — லூக்கா 21:11. Mar 403.1

இறுதி நேரத்தை நாம் நெருங்கும்பொழுது, அஞ்ஞான வல்லமையின் வெளிப்படையான அணிவகுப்பு மேலும் மேலும் அதிகமாக இருக்கும், அஞ்ஞான தெய்வங்கள் அவைகளின் வல்லமையை முனைப்பான முறையில் உலகின் பட்டணங்களிலே வெளிப்படுத்திக் காட்டும். இந்தச் சித்தரிப்பானது ஏற்கெனவே நடைபெற ஆரம்பித்துவிட்டது. Mar 403.2

எருசலேமின்மீது நியாயத்தீர்ப்புகள் (தண்டனைகள்) கொடுக்கப்படுவதைக்குறித்து மீட்பரின் தீர்க்கதரிசனத்திற்கு இன்னமுங்கூட ஒரு நிறைவேறுதல் இருக்கிறது. அந்தப் பயங்கர பேரழிவானது இனி நிகழவிருக்கும் அழிவுடன் ஒப்பிடப்படும் பொழுது, அது ஒரு மங்கிப்போன நிழல்போலவே காட்சியளிக்கும். தெரிந்தெடுக்கப்பட்ட பட்டணத்தின் முடிவுபற்றிய காரியத்தில் (எருசலேமின் அழிவைப்பற்றி) தேவனுடைய இரக்கத்தைத் தள்ளிப் போட்டு, அவரது கற்பனையை காலின்கீழ்போட்டு, மிதித்துப் போட்ட இந்த உலகத்தின் அழிவை நாம் காணலாம். Mar 403.3

பேரிடர், அழிவு ஆகிய தீமைகளை முன்னறிவிக்கக்கூடிய அடையாளங்களும் அற்புதங்களும் காணப்பட்டன. நடு இரவிலே இயற்கைக்கு மாறான ஒளி ஆலயத்தின்மீதும், பலிபீடத்தின்மீதும் காணப்பட்டது. மாலை மயங்கும் வேளைகளில், மேகங்களிலே இரதங்களும் யுத்தத்தில் ஈடுபடும் மனிதரும் சண்டைசெய்வதற்காக கூடிவருவது போன்ற காட்சிகள் காணப்பட்டன. Mar 403.4

கடந்த வெள்ளிக்கிழமையில் காலையிலே (ஆகஸ்டு 24, 1906) நான் விழிப்பதற்குச் சற்றுமுன்னர், அதிகமாக மனதில் பதிவை ஏற்படுத்தக்கூடிய காட்சி ஒன்று எனக்குமுன் தோன்றிற்று; நான் தூக்கத்தினின்று விழிப்பதுபோன்று தெரிந்தது; ஆனால், நான் எனது வீட்டில் இல்லை; சன்னல்கள் வழியாக பயங்கரமான நெருப்புப் பிழம்பு ஒன்றைக் காணமுடிந்தது. வீடுகளின்மீது பெரிய நெருப்புப் பந்துகள் விழுந்துகொண்டிருந்தன. அந்த நெருப்புப் பந்துகளிலிருந்து நெருப்பை உமிழும் கூர்மையான அம்புகள் எல்லத்திசைகளுக்கும் பறந்து சென்றன. எங்கெல்லாம் நெருப்பு பற்றியெரிந்தது என்ற காரியத்தைத் தீர்மானிப்பது மிகவும் கடினம். அநேக இடங்கள் அழிந்துவிட்டன; மக்கள் மத்தியிலே காணப்பட்ட பயங்கரத்தை விவரிக்கவே முடியாது. Mar 403.5

இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையுள்ள பயத்தை உருவாக்கும் காட்சிகள் வெகு சீக்கிரத்தில் வானங்களில் வெளிப்படும். பிசாசுகளின் அற்புதஞ்செய்யும் வல்லமைக்கு அவை அடையாளங்களாக இருக்கும். அவர்களைக் கண்ணியில் அகப்படுத்தவும், பரலோக அரசாங்கத்திற்கு விரோதமான கடைசி யுத்தத்திலே சாத்தானோடு இணைந்துகொள்ளத்தக்கதாக அவர்களை வற்புறுத்தும்படியும், பிசாசுகளின் ஆவிகள் இந்த பூமியின் இராஜாக்களிடத்திற்கும் உலகம் முழுவதற்கும் செல்கின்றன. இத்தகைய செயல்துணைகளின் மூலம் ஆளுநர்களும், குடிமக்களும் ஒன்றுபோல ஏமாற்றப் படுவார்கள். சிலர் தாங்களே கிறிஸ்து என்று மாய்மாலமாகக்கூறி , உலக இரட்சகருக்குமாத்திரமே சொந்தமான பெயருக்கும் தொழுகைக்கும் உரிமைகொண்டாடுவார்கள். அவர்கள் அதிசயமான குணமாக்கும் அற்புதங்களைச்செய்து, பரலோகத்தினின்று தங்களுக்கு வெளிப்படுத்துதல் வந்ததாகச் சொல்லுவார்கள். அவைகளோ வேத வாக்கியங்களின் சாட்சிக்கு முரண்பாடாக அமைந்திருக்கும்.⋆ Mar 404.1

வாக்குத்தத்த வசனம்: Mar 404.2

“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்; வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” - ஏசாயா30:21. Mar 404.3