Go to full page →

ஒரு ஆத்துமாவையாவது ஆதாயஞ்செய்திட ஊழியஞ்செய்வீர்களாக!, ஜனவரி 21 Mar 41

“உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?” - லூக்கா 15:4 Mar 41.1

ஒரு ஆத்துமாவின் மனந்திரும்புதலிற்காக அனைத்து வழிமுறைகளையும் இயலும் அளவிற்கு வலிந்து பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துவிற்கு ஒரு ஆத்துமா ஆதாயப்படுத்தும் பொழுது, ஆதாயஞ்செய்பவரைச் சுற்றிலும் பரலோகத்தின் வெளிச்சம் பளிச்சிடும்; மேலும், இவ்வெளிச்சம் தீயொழுக்கமாகிய இருளை ஊடுருவிச் சென்று, அநேக ஆத்துமாக்களை இரட்சிக்கும். காணமற்போன ஒரு ஆட்டைக் காப்பாற்றுவதற்காக, கிறிஸ்து தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு வருவாரானால், நாம் அதைவிடக் குறைவாகச் செய்துவிட்டு, நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நம்மை நாமே நிரூபித்துக்காட்ட முடியுமா? கிறிஸ்து ஊழியஞ்செய்ததுபோன்று ஊழியஞ்செய்வதையும், அவர் தியாகஞ்செய்தது போன்று தியாகஞ் செய்வதையும், நாம் செய்யாமல் அலட்சியஞ் செய்வோமானால், அது பரிசுத்த நல்லெண்ணத்திற்கு எதிரான ஒரு மறுதலித்தலாக இருக்காதா? தேவனுக்கு எதிரான ஒரு நிந்தனையாக இருக்காதா? Mar 41.2

உலகம் முழுவதிலும் ஒரு அபாய அறிவிப்பை முழக்குங்கள். ஆண்டவரின் வருகையின் நாளானது மிகவும் சமீபம் என்றும், மிகவும் துரிதமாக வந்துகொண்டிருக்கிறது என்றும் மக்களுக்குச் சொல்லுங்கள். ஒருவரையும் விட்டுவிடாதபடி அனைவருக்கும் எச்சரிப்பைக் கொடுங்கள். தவறுகளிலே நிலைத்திருக்கும், இரங்கத்தக்க நிலையிலிருக்கும் அந்த ஆத்துமாக்கள் இடத்திலே நாமும் இருந்திருக்கலாம்; நாகரீகமற்ற - முரட்டுத்தன்மை வாய்ந்த மக்கள் மத்தியிலே வைக்கப்பட்டிருக்கலாம். சத்தியத்தின்படி நோக்கிப் பார்ப்பின் மற்றவர்களைவிட நாம் அதிகமான செய்திகளைப் பெற்றிருக்கிறோம். அதே சத்தியங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து வழங்குவதற்கு நாம் கடனாளிகளாகவும் இருக்கிறோம். Mar 41.3

நமக்கு இழப்பதற்கு நேரமில்லை; முடிவு வெகு சமீபம்; சத்தியத்தைச் சொல்வதற்கு இடம்விட்டு இடம் செல்லும் வழிகள் வலதுபுறத்திலும், இடதுபுறத்திலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்துகளால் சூழப்பட்டு, அடைக்கப்பட்டுவிடும். தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு ஊழியஞ்செய்வதற்குச் சாதகமாக இருக்கின்ற நிலைமாறி, ஊழியஞ் செய்யாதபடிக்கு அவர்கள் வழிகள் அனைத்திலும் தடங்கல்கள் வைக்கப்படும். நமது ஊழியத்தை நேர்மையான விதத்தில் நாம் நோக்கிப்பார்த்து, முனைந்து போராட்டத்தில் ஈடுபடத்தக்கதாக, எவ்வளவு சீக்கிரத்தில் முன்னேறவேண்டுமோ, அவ்வளவு சீக்கிரமாக முன்னேற வேண்டும். தேவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தின்படி, பதுங்கி இருந்துகொண்டு, தீவிரமிக்க ஆற்றலோடு இருளின் சக்திகள் வேலைசெய்து கொண்டிருக்கிறதை நான் அறிவேன். எப்படி ஓநாய் தனக்கான இரையை பிடிக்கின்றதோ, அதைப்போன்று. இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறவர்களை நோக்கி, சாத்தான் தந்திரமான சூழ்ச்சி நடைபோட்டு, முன்னேறிக் கொண்டிருக்கிறான்; இப்பொழுது நாம் கொடுக்கத்தக்கதான எச்சரிப்புகள் நமக்கு உண்டு. நாம் செய்ய வேண்டியதான வேலையும் நமக்கு உண்டு; ஆனால், சீக்கிரத்தில் நாம் கற்பனைசெய்யும் அளவிற்கு மேலாக, ஊழியஞ் செய்வது மிகவும் கடினமானதாக மாறிவிடும். தேவனே, எங்கள் தலைவரான இயேசுவின் மீது, எங்களது கண்களைப் பதித்தவர்களாக பொறுமையோடும், விடாமுயற்சியோடும் வெற்றியைப் பெறுவதற்காக முன்னேறிச் செல்ல, வெளிச்சத்தின் வழியிலே எங்களை நாங்கள் வைத்துக்கொள்ள உதவிசெய்யும். Mar 42.1

இந்த பூமிக்குரிய - பாவத்தின் எல்லைக்குட்பட்ட வாழ்க்கையாக நமது வாழ்வு இருந்தபோதிலும், செய்யும் சேவையிலே மிக மேலான மகிழ்ச்சியும், உயர்வான கல்வியும் இருக்கிறது. எதிர்காலத்து நிலைமையிலே பாவம் நிறைந்த மானுடத்தின் குறைபாடுகளால், தடைசெய்யப்படாமல், சேவைசெய்வதிலே நம்முடைய உன்னத மகிழ்ச்சியும், நமது உயர்தரமான கல்வியும் காணப்படும்.⋆ Mar 42.2

வாக்குத்தத்த வசனம்: Mar 42.3

“கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.” - சங்கீதம் 115:14. Mar 42.4