Go to full page →

பூமியின் மாபெரும் மனிதர்களுக்குமுன் சாட்சியளித்தல்!, செப்டம்பர் 2 Mar 489

“அவர்களுக்கும் புறஜாதியினருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.” - மத்தேயு 10:18. Mar 489.1

உலகின் அதிபதிகளுக்கு முன்பாக சாட்சிசொல்லும்படி, தேவ மக்கள் கொண்டுபோகப்படுகிற காலம் வெகுதூரத்திலில்லை. நாம் உலக சரித்திரத்தின் ஆபத்துகளை நோக்கி, எத்தனை வேகமாக அடியெடுத்துவைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறதை இருபதில் ஒருவர்கூட உணரவில்லை. ...மாயையான-அற்பமான-காரியங்களுக்கும், முக்கியமில்லாத காரியங்களுக்கும் நம் மனதைச் செலுத்த இனி நமக்கு நேரமில்லை. Mar 489.2

உங்களைப் பகைக்கிறவர்கள் கொடுக்கும் அறிக்கைகளின் மூலமாக, இராஜாக்களும் அதிபதிகளும் மாபெரும் மனிதர்களும் உங்களைக்குறித்துக் கேள்விப்படுவார்கள். உங்கள் விசுவாசமும், குணங்களும் தவறாக எடுத்துக்காட்டப்படும்; ஆனால், தவறாகக் குற்றஞ்சாட்டப்படுகிறவர்கள் தங்களுக்காகப் பதில்பேசும்படி, அவ்வாறு குற்றப்படுத்தினவர்களுக்கு முன்பாக ஒரு சந்தர்ப்பத்தைபெற்று நிற்பார்கள். இவ்வுலகின் அதிபதிகளுக்கு முன்பாக, சத்திய ஒளியைப் பிரதிபலிக்கும்படிக்கு பெரிய பாக்கியத்தை அவர்கள் பெறுவார்கள். நீங்கள் வேத வார்த்தைகளை ஆராய்ந்திருப்பீர்களானால், உங்கள் நம்பிக்கையைக்குறித்து, உங்களை விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் பயத்தோடும், சாந்தமுள்ள ஆவியோடும் பதில்சொல்ல ஆயத்தமாயிருப்பீர்களானால், உங்கள் எதிராளி உங்கள் ஞானத்தை அறிந்து எதிர்த்துப்பேச முடியாது. Mar 489.3

அப்படிபட்ட மேலான வல்லமையை-ஞானத்தை-வேத வாக்கியங்களை ஆராய்வதின்மூலம் முயன்று பெற்றுக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் இப்பொழுது உங்களுக்குமுன் இருக்கிறது; ஆனால், நீங்கள் சோம்பலினால், சத்தியச் சுரங்கத்தை ஆழமாகத் தோண்டிப்பார்க்கத் தவறுவீர்களானால், நம்மீது வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிற னெருக்கடியைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கமுடியாது. ஆ! ஒவ்வொரு வினாடியும் பொன்போன்றிருக்கிறதை நீங்கள் தெளிவாக உணர்ந்தால் நலமாயிருக்கும். தேவனுடைய வாயிலிருந்து பிறக்கிற ஒவ்வொரு வார்த்தையினாலும், நீங்கள் பிழைத்துக்கொண்டிருப்பீர்களானால், ஆயத்தமில்லாதவர்களாகக் காணப்படமாட்டீர்கள். Mar 489.4

சத்தியத்திற்கு சாட்சிபகரும்படி எப்படிப்பட்ட இடத்திற்கு அழைக்கப்படுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. அநேகர் சட்டசபைகளிலே நிற்கவேண்டியதிருக்கும். சிலர் இராஜாக்களுக்கு முன்பாகவும், உலகின் மேதைகளுக்கு முன்பாகவும், தங்கள் விசுவாசத்தைக்குறித்துப் பதில் கூற வேண்டியதிருக்கும். சத்தியத்தைக்குறித்த மேலோட்டமான அறிவைமாத்திரம் பெற்றிருக்கிறவர்கள், வேதவாக்கியங்களைத் தெளிவாக விவரித்து, தங்கள் விசுவாசத்திற்கான திட்டமான காரணங்களை எடுத்துக்கூற முடியாது. அவர்கள் குழப்பமடைவார்கள். வெட்கப்படாத ஊழியக்கார்ராயிருக்க அவர்களால் முடியாது. பரிசுத்தமான இடத்திலேதான் பிரசங்கிக்கப்போவதில்லை என்று நினைத்துவிட வேண்டாம். தேவன் உங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது.⋆ Mar 490.1

வாக்குத்தத்த வசனம்: Mar 490.2

“உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று” கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 39:18. Mar 490.3