Go to full page →

மனநிறைவு வழங்கக்கூடிய பதில்கள்!, நவம்பர் 9 Mar 625

“பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” - ஏசாயா 55:9. Mar 625.1

நம்முடைய திட்டங்கள் எப்பொழுதும் ஆண்டவருடைய திட்டங்களாயிருப்பதில்லை... Mar 625.2

நாம் நம்மைப் புரிந்துகொண்டிருக்கிறதைக்காட்டிலும் அதிகமாக நம்மைப்புரிந்துவைத்திருக்கிற ஆண்டவர், நம்மேல் வைத்திருக்கிற அக்கறையான அன்பு, மற்றும் ஆர்வத்தின் காரணமாக, நம்முடைய சொந்த பேராவல்களை திருப்திசெய்யத்தக்கதாக, சுயநலத்தோடு நாம் நாடுவதை அவர் அனுமதிக்க மறுக்கிறார். தேவன் நமக்காக வைத்திருக்கிற திட்டங்கள் நிறைவேறும்பொருட்டு, நம்முடைய திட்டங்கள் அநேக சமயங்களில் தோல்வியடைந்திருக்கின்றன... Mar 625.3

இங்கே நம்மை வருத்தப்படுத்தின-ஏமாற்றின-இரகசியங்கள் அனைத்தும் வரப்போகிற வாழ்க்கையிலே தெளிவாக்கப்படும். பதில்வராத ஜெபங்களாக ஏமாற்றமடைந்த நம்பிக்கைகளாகத் தோன்றினவைகளெல்லாம், மிகப் பெரிய ஆசீர்வாதங்களாக நமக்கு அமைந்ததை அங்கே நாம் பார்ப்போம். Mar 625.4

தேவனுடைய இரகசியங்களைப் புரிந்துகொள்ளத்தக்கதாக, ஆவிக்குரிய வளர்ச்சிகளில் போதுமான அளவிற்கு இப்பொழுது நாம் முயற்சிசெய்து முன்னேறவில்லை; எனவே, பரலோகக் குடும்பத்திற்குள் நாம் பிரவேசிக்கும்பொழுது, இந்த இரகசியங்களெல்லாம் நமக்குமுன் திறந்து காட்டப்படும்... Mar 625.5

இப்போது நமக்கு வெளியாக்கப்பட்டிருக்கிற தேவ இரகசியங்களை நாம் மேன்மையாக நினைத்து, அவைகளை நாம் திரட்டிக்கொள்ளவில்லை; எனவே இப்பொழுது தேவன் அமைதி காக்கின்ற அநேக காரியங்களைக் குறித்து ஏராளமான விளக்கங்கள் பின்னர் வெளிப்படுத்தப்படும். தெய்வீக திட்டத்தின் வழிமுறைகள் தெளிவாகக் காட்டப்படும்; கிருபையின் இரகசியங்கள் கிறிஸ்துவின் மூலமாகத் திறந்துகாட்டப்படும்; இப்பொழுது நம் அறிவிற்கு எட்டாதது, புரிந்துக்கொள்ளக் கடினமாயிருப்பது எல்லாம் விளக்கப்படும். தடுத்து நிறுத்திவைக்கப்பட்ட அனைத்துக் காரியங்களிளுமுள்ள ஞானமும், அனைத்திலும் பங்களிக்கப்பட்ட கிருபையின் இரக்கமும் விளக்கமுடியாததுபோல் தோற்றமளித்த அனைத்தையும், அதின் விளக்கமாகச் சொல்லக்கூடாதிருந்தது எல்லாம், ஒரு ஒழுங்கு முறையிலே நடந்தேறியதைக் காண்போம். சாத்தியமானது அதின் தெளிவற்ற நிலையிலிருந்து விடுபட்டு, ஒரேயொரு தனிப்பட்ட வரியிலே மனதிற்குத் திறந்துகாட்டப்படும். அதின் வெளிச்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைத்திருக்கும். உள்ளம் ஆனந்தத்தால் பாடும். என்றுமாக போராட்டங்கள் முடிவை அடையும்; கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். Mar 625.6

தேவனுடைய வழிநடத்துதல்களினால் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அனைத்தும், வரப்போகின்ற உலகத்திலே தெளிவாக்காப்படும். புரிந்துகொள்ளக் கடினமாயிருந்தவைகள் அதின் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளும். கிருபையின் இரகசியங்கள் நம்முன் திறந்துவைக்கப்படும். எல்லைக்குட்பட்ட நமது மனங்களுக்கு குழப்பமும், காப்பாற்றப்படாத வாக்குறுதிகளுமாகத் தோன்றியவைகளெல்லாம், மிகவும் பூரணமாக, நமது நன்மைக்கேதுவாக இசைந்து செயல்பட்டது என்பதை நாம் காண்போம். மிகவும் சோதனையாகத் தோன்றிய அனுபவங்கள் எல்லாம் எல்லையற்ற அன்பாகிய அவர் கட்டளையிட்டவைகள்தான் என்கிறதை நாம் அறிவோம். சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே அவருடைய அன்பு மாற்றிக்கொடுத்திருக்கிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளும்பொழுது, சொல்லி முடியாத-மகிமைநிறைந்த-மகிழ்ச்சியால் நாம் களிகூருவோம்.⋆ Mar 626.1

வாக்குத்தத்த வசனம்: Mar 626.2

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” - உபாகமம் 29:29. Mar 626.3