Go to full page →

நித்தியமான பாதுகாப்பு!, டிசம்பர் 30 Mar 727

“அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் இராஜாவாக இருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்” -சகரியா 14:9. Mar 727.1

மீட்பின் மாபெரும் திட்டத்தின் விளைவாக, இவ்வுலகம் மீண்டும் தேவனுக்கு உகந்த நிலைக்கு முழுவதுமாகக் கொண்டுவரப்படும். பாவத்தினால் இழந்தவை அனைத்தும் திரும்பிப்பெறப்படும். மனிதன் மட்டுமல்ல, இந்தப் பூமியுங்கூட மீட்கப்பட்டு, கீழ்படிந்து நடப்பவர்களின் நித்திய வாசஸ்தலமாக அமையும். ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த பூமியைச் சிந்தங்கொண்டாட சாத்தான் போராடியிருக்கிறான்; ஆனால், சிருஷ்டிப்பின்பொழுது, ஆண்டவர் கொண்டிருந்த அநாதி நோக்கம் தற்போது நிறைவேறும். “உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” - தானி 7:18. Mar 727.2

“சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக” - சங்கீதம் 113:3; “அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்”; “கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்” - சகரியா 14:9; “அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள்” - சங்கீதம் 111:7,8. சாத்தான் வெறுத்து, அழிக்க வகைதேடிய பரிசுத்தக் கற்வனைகள், பாவமற்ற அண்டசராசரம் அனைத்திலும் மேன்மைப்படுத்தப்படும். Mar 727.3

கிறிஸ்துவின் மீட்பின் கிரியைமூலம் தேவனின் அரசாங்கம் நியாயமானது என்று நிரூபிக்கப்படுகிறது. சர்வ வல்லவர், அன்பின் தேவனாக அறியப்படுவார். சாத்தானின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடிகொடுக்கப்பட்டு, அவனது இயல்பின் தன்மைகள் தோலுரித்துக் காட்டப்பட்டது. இனி ஒருபோதும் எதிர்ப்போ, கிளர்ச்சியோ எழாது. இந்த அண்டசராசரத்திற்குள், பாவம் இனி ஒரு பொழுதும் முழையமுடியாது. மறுதலித்தலிலும், வழிவிலகுதலிலுமிருந்து அனைவரும், நித்தியகாலமும் பாதுகாப்பாக இருப்பார்கள். அன்பின் தற்தியாகத்தினால், பூலோகத்தின், பரலோகத்தின் குடிமக்கள் தங்கள் சிருஷ்டிகரோடு, பிரிக்கமுடியாத ஐக்கியத்தில் பிணைக்கப்படுவார்கள். Mar 727.4

பாவம் பெருகிய இடத்தில், தேவனுடைய கிருபை மிகவும் அதிகமாகப் பெருகிற்று. சாத்தான் தன்னுடையது என்று வாதிட்ட இப்பூமி கிரயஞ்செலுத்தி மீட்கப்படுவதுமட்டுமின்றி, உயர்த்தவும் படும். பாவத்தின் சாபத்தால், தேவனுடைய மகத்துவமான சிருஷ்டிப்பில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த நம் சிறு உலகம், அண்டசராசரங்களிலுமுள்ள அனைத்து உலகங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு மேன்மையடையும். தேவகுமாரன் மானிடனாக வாசித்த இந்த இடத்தில், மகிமையின் இராஜா வாழ்ந்து, பாடுபட்டு, மரித்த இவ்விடத்தில், அவர் வாசம்பண்ணுவார். அவர்கள் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்கள் தேவனாயிருப்பார்.” சதாகலங்களிலும் மீட்கப்பட்டவர்கள் கர்த்தரின் வெளிச்சத்தில் நடக்கும்பொழுது, தேவன் நம்மோடிருக்கிறார், அவரது சொல்லிமுடியாத ஈவாகிய இம்மானுவேலிற்காக தேவனைத் துதிப்பார்கள்.⋆ Mar 728.1

வாக்குத்தத்த வசனம்: Mar 728.2

“...கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்...” - சகரியா 14:9. Mar 728.3