இப்போது கல்வியறிவில்லாதவர் மத்தியிலும்கூட அநேகர் கர்த்தருடைய வார்த்தைகளை அறிவிக்கின்றனர் பரலோகத்திலிருந்து வருகின்ற தூதை முன்சென்று அறிவிக்கத்தக்கதாக, சிறுபிள்ளைகள் ஆவியானவரால் தூண்டப்படுவர். மனிதனுடைய இயந்திர சாதனங்கள், அவனது கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் ஜாக்கிரதையான வழிமுறைகளையெல்லாம் புறம்பே தள்ளிவிட்டு, ஆவியானவரின் தூண்டுதல்களுக்கு இணங்குகின்ற அனைவர்மீதும் ஆவியானவர் ஊற்றப்படுவார். அப்போது அவர்கள், அவரது வல்லமையின் பராக்கிரமத்துடன் சத்தியத்தை அறிவிப்பார்கள். — Ev 700 (1895). கச 149.5
சத்தியத்தை அதன் எளிமையில் இயேசு வழங்கியதைப்போல, மனிதர்கள் இன்னமும் வழங்காமலிருக்கின்றதை பரலோக அறிவுஜீவிகள் காணும்பொழுது, தேவனுடைய ஆவியினால் சாதாரண சிறுபிள்ளைகள் அசைக்கப்பட்டு, இக்காலத்திற்குரிய சத்தியத்தை அறிவித்துக்கொண்டு முன்செல்வார்கள். — SW 66 (1895). கச 150.1