Go to full page →

ஆயிரக்கணக்கானோர் ஓரே நாளில் மனமாற்றமடைவர் கச 153

பதினோராம் மணி நேரத்திலே, ஆயிரக்கணக்கானோர் சத்தியத்தைக் கேட்டு ஏற்றுக்கொள்வர்… சத்தியத்திற்கான இந்த மனமாற்றங்கள் சபையை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மிகுந்த வேகத்தில் நடைபெறும், அதனால் தேவனுடைய நாமம் மகிமைப்படும். — 2SM 16 (1890). கச 153.6

பதினோராம் மணி நேரத்திலே சத்தியத்தைக் கேட்டு, தேவ ஆவியானவருடைய அசைவாடுதல்களைக் கண்டு, ஒரே நாளில் சத்தியத்திற்காக மனம் மாறுகின்ற ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். — EGW’ 88 755 (1890). பெந்தெகொஸ்தே நாளிலே சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட பின்பு, எப்படி ஜனங்கள் மனமாற்றம் அடைந்தார்களோ அதேபோல, ஒரே நாளில் அநேகர் மனம் மாறப்போகின்ற காலம் வந்துகொண்டிருக்கின்றது. — Ev 692 (1905). கச 153.7