Go to full page →

நியாயத்தீர்ப்பு நாளை நினைவிற்கொண்டு வாழ்தல் கச 52

நமது பட்டணங்களிலே மக்கள் வேலை காரியமாக இங்கும் அங்கும் விரைவாக சென்றுகொண்டிருப்பதை நான் காணும்போது, நம்மீது சீக்கிரமே வரவிருக்கின்ற தேவனுடைய நாளைக் குறித்து எப்பொழுதாவது அவர்கள் சிந்திக்கின்றனரா இல்லையா என்று என்னுடைய மனதில் கேள்வி கேட்டிருக்கின்றேன். சீக்கிரத்தில் நம்மீது வர இருக்கின்ற அந்த மாபெரும் நாளை குறிப்பில் வைத்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். - 1SAT 25 (1886). கச 52.3

நியாயத்தீர்ப்பின் அந்த நாளைக் குறிப்பில் வைக்காமல் நம் வாழ்க்கையை வாழ இயலாது. நீண்ட காலமாக அது தாமதித்தாலும், அது தற்போது மிகவும் இருகில், வாசற்படியருகில், மிகவும் தீவிரித்து வருகின்றது. தலைமைத் தூதனின் எக்காளம் அதிசீக்கிரத்தில் உயிரோடிருப்பவர்களைத் திடுக்கிடவும் மரித்தோரை எழுப்பவும் செய்யும். - CG 560, 561 (1892). கச 53.1