Go to full page →

தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களை விசேஷமாக ஆராய்தல் கச 9

தேவனுடைய வார்த்தையை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து படிக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. முக்கியமாக தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்கள், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கண்டிப்பாக கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும்… தேவனிடமிருந்து தானியேல் பெற்ற வெளிச்சம், முக்கியமாக இந்தக் கடைசி நாட்களுக்காகவே கொடுக்கப்பட்டது. - TM 112, 113 (1896). கச 9.4

தானியேல் பன்னிரெண்டாம் அதிகாரத்தை நாம் வாசித்து ஆராய்ந்து பார்ப்போமாக. அது, முடிவுகாலத்திற்கு முன்பாக நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு எச்சரிப்பாக இருக்கிறது. - 15 MR 228 (1903). கச 9.5

புதிய ஏற்பாடு வேதவாக்கியங்களின் கடைசி புத்தகம், நாம் கட்டாயமாகப் புரிந்துகொள்ள வேண்டிய சத்தியம் நிறைந்ததாக இருக்கின்றது. - COL 133 (1900). கச 9.6

வெளிப்படுத்தல் புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றில், இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் விரைவில் நிறைவேற இருக்கின்றன. இந்த தீர்க்கதரிசன புத்தகம், தேவனுடைய ஜனங்களால் இப்பொழுது ஜாக்கிரதையாக ஆராயப்பட்டு, தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அது சத்தியத்தை மூடிமறைக்கவில்லை; மாறாக, எதிர் காலத்தில் என்ன நிகழும் என்பதை நமக்குக் கூறி, தெளிவாக முன்னெச்சரிக்கிறது. - INL 96 (1903). கச 9.7

வெளிப்படுத்தின விசேஷத்திலே, அவற்றின் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கின்ற பக்திவிநயமாக தூதுகள், தேவனுடைய ஜனங்களின் மனங்களிலே முதலிடத்தைப் பிடித்திருக்கவேண்டும். - 8T 302 (1904). கச 9.8