Go to full page →

குற்றங்காண்போரை சந்திப்பது எப்படி? கச 67

விசுவாசத்திலிருந்து விலகிப்போனவர்கள், நமது கூட்டங்களுக்கு வருகை தந்து, நாம் செய்யும்படி தேவன் நமக்கு நியமித்த வேலைகளை செய்யாதபடிக்கு நம் கவனத்தை திசைதிருப்புவார்கள். உங்கள் காதுகளை சத்தியத்திலிருந்து கட்டுக்கதைகளுக்குத் திருப்ப நீங்கள் அனுமதிக்கக்கூடாது. உங்களது ஊழியத்திற்கு எதிராகக் கண்டன வார்த்தைகளைப் பேசுகின்றவர்களை, மனமாற்றமடையச் செய்வதற்கான முயற்சியை நிறுத்தவேண்டாம். ஆனால், எதிர்ப்பவர்களின் மனங்களைச் சென்றடையத்தக்கதான வார்த்தைகளை, தேவதூதர்கள் உங்களது உதடுகளில் கொடுப்பார்கள் என்றும், இயேசு கிறிஸ்துவின் ஆவியால் நீங்கள் ஏவப்பட்டிருக்கின்றீர்கள் என்றும் காணப்படும் விதத்தில் அது இருக்கட்டும். இந்த மனிதர்கள் தொடர்ந்து தங்களது வழியையே விடாது வற்புறுத்திக்கொண்டே இருந்தால், சபைக்கூடுகையிலுள்ள விவேகமுள்ள மனதுடையவர்கள், உங்களது காரியம் உயர்ந்த தரமானதாக இருக்கின்றது என்று புரிந்துகொள்வார்கள். எனவே, உங்கள் மூலமாய் இயேசு கிறிஸ்து பேசுகின்றார் என்று விளங்கும் விதத்தில் பேசுங்கள். 9T 148, 149 (1909). கச 67.2