Go to full page →

சாத்தான் கிறிஸ்துவைப்போன்று தோற்றமளித்தல் கச 118

உலகம் முழுவதையும் தனது அற்புதம் செய்யும் வல்லமையால் வஞ்சிக்க சத்துரு ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றான். ஆதலால் அவன் இயேசு கிறிஸ்துவைப்போல் தோற்றமளிப்பதற்கு, ஒளியின் தூதர்களுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான். - 2SM 96 (1894). கச 118.2

மனிதர்கள் தற்பொழுது, வெகு சுலபமாகத் தவறாக வழிநடத்தப்படுவார்களென்றால், சாத்தான் கிறிஸ்துவைப்போல் தோற்றத்தைத்தரித்துக்கொண்டு, அற்புதங்களை செய்யும்போது, அவர்கள் எவ்வாறு நிலைநிற்பார்கள்? தான்தான் கிறிஸ்து என்று கூறிக்கொண்டு, கிறிஸ்துவைப் போன்று பாவனை செய்பவனாய், கிறிஸ்துவின் கிரியைகளை அனைவரும் பார்க்ககூடிய விதத்தில் தவறாக வெளிப்படுத்திக் காட்டும் காரியங்களினால் யார் அசையாமல் நிற்கக்கூடும்? — 2SM 394 (1897). கச 118.3

கிறிஸ்துவின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு சாத்தானே களத்தில் இறங்குவான். அவன் தன்னால் முடிந்த அளவு எல்லாவற்றையும் தவறாக எடுத்துக்கூறுவான். தவறாக அர்த்தப்படுத்துவான், இழிவாக திரித்துக் கூறுவான். — TM 411 (1898). கச 118.4

கீழிருந்து வரும் ஒரு வல்லமை, நாடகத்தின் மாபெரும் இறுதிக் காட்சிகளை அரங்கேற்ற செயல்பட்டு வருகின்றது. அக்காட்சிகளில் சாத்தான் கிறிஸ்துவைப்போல் வருவான். மேலும் இரகசிய சங்கங்களில் தங்களை ஒன்றாக இணைத்துக்கொண்டிருப்பவர்கள் மூலம், அநீதியின் எல்லா வஞ்சகங்களோடும் கிரியை செய்வான். — 8T28 (1904). கச 118.5