Go to full page →

கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படுபவர்கள் TamChS 318

அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள் வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படும் உண்மையுள்ள மனுஷராக இருங்கள். 4 RH, Jan. 24, 1893 TamChS 318.3

தேவ ஊழியர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட வேண்டும்; அவருடைய முன்னேற்பாட்டின்படி வழிதிறக்கும் போது, செயல்படுவதற்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். அவர்கள் தாமதம் செய்தால், அவர்களைத் தோற்கடிக்க சாத்தானுக்கு நேரம் கொடுப்பதாக அந்தத் தாமதம் இருக்கிறது. 5 PP, 423 TamChS 318.4

கற்பனையைக் கைக்கொள்ளுகிற அவருடைய மக்கள் அவருக்குச் சேவை செய்ய எப்போதும் ஆயத்தமாக நிற்கவேண்டும். 68T, 247 TamChS 318.5

மெய்யாகவே கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், பிறருடைய நலன்களுக்காக வேலைசெய்கிறார்கள். உள்ளூரிலும் வெளியூரிலும் தேவனுடைய நோக்கத்தைச் செயல்படுத்துவதில் சந்தோஷமடைகிறார்கள். ஜெபக்கூட்டத்தில் மற்றவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள்; அவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள்: அவர்களால் தாக்கம் ஏற்படும். ஊழியர்கள் சென்று வேலைசெய்ய முடியாத இடங்களில் தாங்கள் சென்று ஊழியம் செய்ய முயலுவார்கள். சுயத்தை உயர்த்த அவர்கள் முயலுவதில்லை; மாபெரும் பணியைச் செய்கிறோமேன்று அதற்கான புகழைத் தேடுவதில்லை. மாறாக, கிறிஸ்து தங்களுக்காக அதிகம் செய்திருப்பதால் சிறிய வேலைகளையும், தேவைப்பட்டால் பெரிய பணியையும் தாழ்மையாகவும் சாந்தமாகவும் உண்மையாகவும் செய்வார்கள். 1RH, Sept. 6, 1881 TamChS 318.6