Go to full page →

26—வெற்றியின் நிச்சயம் TamChS 336

தெய்வீக அச்சாரம் TamChS 336

தேவையான கருவிகளை நாம் தேவனிடம் ஒப்படைத்தால், அவர் பணியைச் செய்துமுடிப்பார். 19T, 107 TamChS 336.1

முழுமனதோடு செய்கிற சேவையை தேவன் ஏற்றுக்கொள்வார்; குறைகளை அவர் நிறைவாக்குவார். 2 MH, 150 TamChS 336.2

தான் பிரயோஜனமாக எதையும் செய்யவில்லையென நீதிமான் நினைத்தாலும் நீதியின் ஒவ்வொரு செயலும் நிலையான புகழைப் பெறும். 32T; 683 TamChS 336.3

நீங்கள் மெய்யாகவே உங்களை அர்ப்பணித்திருந்தால், உங்களைக் கருவியாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கொண்டுசெல்வார்; அவர்களையும் வாய்க்கால்களாகப் பயன் படுத்தி, இருளில் தடுமாறிக்கொண்டிருக்கிற அநேகருக்கு வெளிச்சம் கொடுக்கச் செய்வார். 47T, 63 TamChS 336.4

சீக்கிரத்தில் மகிமையான வெற்றியைப் சத்தியம் பெறப்போகி றது. இப்போது தேவனோடு உடன்வேலையாட்களாக இருக்கத் தீர்மானிப்பவர்களும் அதோடுசேர்ந்து வெற்றியடைவார்கள். 19T, 135 TamChS 336.5

எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல், சேவைக்கென ஆண்டவரிடம் தன்னை முழுவதும் அர்ப்பணிக்கிற ஒவ்வொருவருக்கும் எண்ணி முடியாத விளைவுகளைப் பெறுவதற்கான வல்லமை கொடுக்கப்படுகிறது. 27T, 30 TamChS 337.1

சகமனிதர்களுடைய இரட்சிப்புக்காக நாம் கருத்தோடு பிரயாசப்படும்போது, நம்முடைய ஒவ்வொரு முயற்சியையும் தேவன் அமோக வெற்றியடையச் செய்வார். 39T, 86 TamChS 337.2

தம் மகத்தான திட்டத்தில் தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு வைத்திருக்கிறார். தேவையில்லாத தாலந்துகள் அருளப்படுவதில்லை. தாலந்து மிகச்சிறியதாக இருக்கலாம். ஆனால் அதற்கு தேவன் ஒரு இடம் வைத்திருக்கிறார். அதை உண்மையோடு பயன் படுத்தினால், செய்யும்படி தேவன் திட்டமிட்டிருந்த பணியைச் செய்து முடிக்கும். 49T, 37 TamChS 337.3

தாழ்மைமிக்க ஊழியர்கள் கிறிஸ்துவோடு ஒத்துழைத்து, பூமியின் கடையாந்தரங்கள்மட்டும் இனிய அதிர்வலைகளைக் கேட்கச்செய்யலாம்; நித்திய காலம் முழுவதிலும் கேட்கக்கூடிய இன்னிசை மெட்டுகளை அமைக்கலாம். 5MH, 159 TamChS 337.4

எந்த வகை பணியாக இருந்தாலும், எதேச்சையாலோ விபத்தாலோ விதியாலோ மெய்யான வெற்றி கிடைப்பதில்லை. தேவனுடைய வழிநடத்துதல்கள் மூலமாக விசுவாசம், விவேகம், நல்லொழுக்கம், விடாமுயற்சி ஆகியவற்றின் பிரதிபலனாக வெற்றி கிடைக்கிறது. அருமையான பண்புகளும், உயர்ந்தபட்ச தார்மீக ஸ்திரத்தன்மையும் எதேச்சையாக உண்டாகுபவை அல்ல. தேவன் வாய்ப்புகளைத் தருகிறார்; அவை பயன்படுத்தப்படும் விதத்தை வைத்து, வெற்றி அமைகிறது. 6PK, 486 TamChS 337.5

உள்ளூர் களத்திலோ அப்பாலுள்ள பகுதிகளிலோ ஊழியத்தில் கால்வைக்கும்படி உணர்த்தப்படுகிறவர்கள் ஆண்டவருடைய நாமத்தால் முன்செல்ல வேண்டும். கிருபைக்கும் பெலத்திற்கும் அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தால், அவர்கள் வெற்றிபெறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய பணி சிறியதாக இருக்கலாம், ஆனால், ஆண்டவருடைய திட்டங்களை அவர்கள் பின்பற்றினால், அது விருத்தியடையும். தேவன் ஜீவிக்கிறார். சுயத்தைத் தியாகம் செய்கிற ஊழியர் யாராக இருந்தாலும், அவர் எங்கிருந்தாலும் அவருக்காக தேவன் கிரியை செய்வார். 1SW, Apr. 9, 1903 TamChS 337.6