Go to full page →

எதிர்காலப் பிரதிபலன் TamChS 354

நித்திய வாழ்க்கை TamChS 354.3

உதவி தேவைப்படும் இடங்களில் உதவி செய்வதற்கு ஊக்கமானதும் சிந்தனைமிக்கதுமான முயற்சிகளை எடுப்பதன்மூலம் மெய்யான கிறிஸ்தவர் தன் தேவன் மேலும், தன் சகமனிதர் மேலும் அன்புகாட்டுகிறார். வாழ்நாள் முழுவதையும் அவர் சேவையில் செலவிடலாம்; ஆனால், கிறிஸ்து தம் சம்பத்துகளைச் சேர்க்கவரும் போது, அவர் செலவிட்டதை மீண்டும் பெற்றுக்கொள்வார். 39T, 56 TamChS 354.4

வரவேற்கும் அருமையான வீடு TamChS 354.5

நித்தியத்தின் வாசலில் நின்று, கிறிஸ்துவோடு ஒத்துழைத்து, அவர் நிமித்தமாக அதை ஒரு சிலாக்கியமாகவும் கனமாகவும் கருதியவர்களுக்குக் கொடுக்கப்படும் அன்பான வரவேற்பைக் கேளுங்கள். உயர்த்தப்பட்ட இரட்சகரிடம் தங்களை வழி நடத்தியவர்களை மீட்கப்பட்டவர்கள் அங்கே வரவேற்பார்கள். தேவனுடைய ஜீவனை மனிதர்கள் அடைவதற்காக மரித்தவரைத் துதிக்கும் துதியில் இவர்களும் சேர்ந்துகொள்வார்கள். போராட்டம் முடியும். சகல சோதனைகளும் சச்சரவுகளும் முடிவுக்கு வரும். மீட்கப்பட்டவர்கள் தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் நிற்கும் போது, வெற்றியின் பாடல்கள் பரலோகம் முழுவதையும் நிரப்பும். அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் துதிக்கு பாத்திரராயிருக்கிறார். அவர் நம்மை தேவனுக்காக மீட்டுக்கொண்டார்’ என்கிற சந்தோஷக் கீதத்தை அனைவரும் பாடுவார்கள். 1MH, 506,507 TamChS 354.6

அவர்களுடைய குணங்களில் கனிவும் சுயமறுப்பும் தயாளமும் இருந்ததென்று பதிவேடு காண்பித்தால், “நல்லது, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்கிற வார்த்தைகளையும், ஆனந்த பாக்கியமான நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். 23T, 525 TamChS 355.1