Go to full page →

மதவெறியும் பயனற்ற மரபுகளும் TamChS 57

மிகுந்த வல்லமையோடு அறிவிக்கப்படவேண்டிய மூன்றாம் தூதனின் செய்தியை அறிவிக்கவிடாமல் மனிதர்களைத் தடுப்பதற் காக, வஞ்சகமும் தந்திரமுமான சகல வல்லமையோடும் சாத்தான் இப்போது செயல்படுகிறான். ஆண்டவர் தம் மக்களை ஆசீர்வதித்து, சாத்தானுடைய வஞ்சகங்களைப் பகுத்தறியும்படி அவர்களை ஆயத்தப்படுத்துவதை அவன் காணும்போது, தனக்கென ஆத்துமாக்களைச் சேர்க்கும்படிக்கு ஒருபக்கத்தில் மதவெறியையும் மறுபக்கத்தில் பயனற்ற மரபுகளையும் கொண்டுவந்து, தந்திரமிக்க தன் வல்லமையால் அவன் செயல்படுவான். எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டிய காலம் இது. சாத்தான் நம் மத்தியில் எடுத்துவைக்கும் முதல் அடியை கவனமாகப் பாருங்கள். 1RH, Jan 24, 1893 TamChS 57.2

ஒழுக்கம்பற்றிய உணர்வே இல்லாதவர்கள் நம் சபையில் இருக்கிறார்கள். பகட்டாகக் காட்சியளித்தும், உலகத்தில் விளக்குகளாகப் பிரகாசிக்க முடியாத ஏராளமான மதவெறியர்கள் இருக் கிறார்கள். 2RH, Mar 24, 1891 TamChS 58.1