Go to full page →

நாடகத்தின் கடைசிக் கட்டம் TamChS 72

இந்தச் செய்தியானது இன்றைக்குபோல வேறு என்றைக்குமே இவ்வளவு ஆற்றலுடையதாக இருக்கவில்லை. தேவனுடைய கோரிக்கைகளை உலகம் மேலும்மேலும் அபத்தமாக்கிவருகிறது. அக்கிரமம் செய்ய மனிதர்கள் துணிகரம் கொண்டிருக்கிறார்கள். உலகமக்களுடைய துன்மார்க்கமானது அக்கிரமத்தின் பாத்திரத்தை நிறைத்துவிட்டது. அழிவுக்காரனை தன் இஷ்டப்படி செயல்பட தேவன் அனுமதிக்கிற அளவுக்கு பூமியின் நிலைமை சென்றுவிட்டது. தேவனுடைய கற்பனைகளுக்குப் பதிலாக மனிதர்களுடைய சட்டத்தைப் புகுத்துவதும், வேதாகம ஓய்வு நாளுக்கு பதிலாக மனித அதிகாரத்தால் ஞாயிறு ஆசரிப்பை உயர்த்துவதும்தான் நாடகத்தின் கடைசிக்கட்டமாக இருக்கும். இந்த மாற்றம் உலகம் முழுவதிலும் காணப்படும்போது, தேவன் தம்மை வெளிப்படுத்துவார். பூமி பயங்கரமாக நடுங்கத்தக்க அவர் தம் மகத்துவத்தோடு எழுந்தருளுவார். உலகமக்களை அவர்களுடைய அக்கிரமத்தின் நிமித்தம் தண்டிக்கும்படி அவர் தம் இடத்திலிருந்து புறப்படுவார்; அப்போது, சிந்தப்பட்ட இரத்தத்தை பூமி வெளிப்படுத்திக்காட்டும், கொல்லப்பட்டவர்களை அதன்பிறகும் அது மறைக்காது. 27T, 141 TamChS 72.1