Go to full page →

களைகளிலிருந்து கோதுமையைப் பிரித்தல் TamChS 79

தேவனுடைய தண்டனைத் தீர்ப்புகளின் காலம்தான், சத்தியத்தை அறிய வாய்ப்பே இல்லாதவர்களுக்கு இரக்கத்தின் காலமாகவும் இருக்கிறது. ஆண்டவர் அவர்களை கனிவோடு நோக்குவார். அவருடைய அன்பு இருதயம் தொடப்படும்; இரட்சிக்கும் படி அவருடைய கரம் நீண்டிருக்கிறது; உள்ளே பிரேவசிக்கவிரும் பாதவர்களுக்கு கதவு அடைக்கப்படும். 39T, 97 TamChS 79.2

அவரைச் சேவிப்பவர்களுக்கும், அவரைச் சேவிக்காதவர்களுக்கும் இடையே கடுமையான ஒரு போராட்டம் சீக்கிரமே நடை பெற இருக்கிறது. அசைக்க முடியாத அனைத்தும் நிலைத்திருக்க, அசைக்கப்படக்கூடிய யாவும் சீக்கிரமே அசைக்கப்படும். 19T15, 16 TamChS 79.3

தேசங்களில் இக்கட்டும் குழப்பமும் உண்டாகிற காலங்களில், உலகத்தின் சீர்கேடான செல்வாக்குகளுக்கும் சாத்தானின சேவைக்கும் முற்றிலும் தங்களை அர்ப்பணிக்காமல், தேவனுக்குமுன் தங்கள் இருதயங்களைத் தாழ்த்தி, தங்கள் முழு இருதயத்தோடும் அவரிடம் திரும்பி, அவருடைய அங்கீகாரத்தையும் பாவ மன்னிப்பையும் பெறுகிறவர்கள் இருப்பார்கள். 21T; 269 TamChS 80.1

வேதவாக்கியங்களை வாசித்தும், அவற்றின் மெய்யான பொருளை விளங்கிக்கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள். பேராவலுடன் பரலோகத்தை நோக்கிப் பார்க்கிற ஆண்களும் பெண்களும் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். வெளிச்சத்திற்காகவும் கிருபைக்காகவும் பரிசுத்த ஆவியானவருக்காகவும் ஏங்குகிற ஆத்துமாக்கள் கண்ணீரோடும் வேண்டுதலோடும் ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். அநேகர் ராஜ்யத்தின் அருகிலேயே இருக்கிறார்கள்; தாங்கள் கூட்டிச்சேர்க்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். 3 AA, p. 109 TamChS 80.2