தமது ஜனங்கள் வித்தியாசமான வேலைகளை எடுத்துச் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஜீவியத்தின் பெரும் பாதைகளிலும் பக்க வழிகளிலும் உள்ளவர்கள் சுவேஷ செய்தியைக் கேட்க வேண்டும். இக்காலத்திற்குரிய சத்தியத்தில் இன்னும் பூரண நிச்ச்சயமற்றிருக்கும் தங்கள் அயலகத்தினரின் வீடுகளில் சபை அங்கத்தினர் சுவேஷ ஊழியஞ் செய்யவேண்டும். LST 167.2
அந்தகாரத்திலும் தப்பிதமான மார்க்கத்திலும் மிருக்கிற ஜனங்களிடத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் போய் ஆண்டவருக்காக ஞானமாயும் ஊக்கமாயும் உழைக்கவேண்டுமென்று தேவன் அழைக்கிறார். இவ்வழைப்புக்குச் செவி கொடுக்கிறதாய் இருந்தால் தற்தியாகம் அவசியம். இடையூறுகள் நீங்கவேண்டுமென்று அநேகர் காத்திருக்கும் போதே ஆத்துமாக்கள் நம்பிக்கை யில்லாதவர்களாயும் , இவ்வுலகத்தில் தேவனற்ற வர்களையும் சாகிறார்கள். LST 167.3