Go to full page →

பிதாவின் அன்பு LST 23

விசுவாசம் இப்பொழுது என் உள்ளத்தை ஆட்கொண்டது. தேவன் பேரில் சொல்லி முடியாத அன்பு எனக்கு உண்டானதாகவும் என் பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்பதற்கு அவருடைய ஆவியின் சாட்சியை நான் அடைந்து கொண்டதாகவும் உணர்ந்தேன். பிதாவானவரைக் குறித்த என் அபிப்ராயமும் மாறிற்று. இயேசுவின் அன்பின் சரிதையைச் சொல்ல நன் வெகுவாய் வாஞ்சித்தேன், ஆனால் எவரோடும் சாதாரண சம்பாஷனை வைத்துக் கொள்ள எனக்கு மனமில்லாதிருந்தது. தேவனைப் பற்றிய அன்பினாலும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தினாலும் என் இருதயம் அவ்வளவாய் நிறைந்திருந்தபடியால், தியானிப்பதற்கும் ஜெபிப்பதற்குமே நான் பிரியப்பட்டேன். LST 23.2