இயேசு அக்கினி சுவாலைகளினால் மூட்ப்பட்டவராய் மேகத்தோடு கீழே இறங்கினபோது அவருடைய வெள்ளி எக்காளம் தொனித்தது. நித்திரை செய்யும் பரிசுத்தவான்களின் கல்லறைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு, தமது கண்களையும் கரங்களையும் வானத்துக்கு நேராக உயர்த்தி, “எழும்புங்கள்! எழும்புங்கள்! எழும்புங்கள்!! எழும்புங்கள்!!! மண்ணிலே நித்திரை செய்கிறவர்களே, விழித்தெழும்புங்கள்” என்று சத்தமிட்டுக் கூறினார் அவர். அப்போது பலத்த பூமியதிர்ச்சி யுண்டாயிற்று. கல்லறைகள் திறவுண்டன, மரித்தோர் சாவமையை அணிந்து வெளியே வந்தார்கள். 14400 பெரும் மரணத்தினால் பிரிக்கப்பட்டுப் போயிருந்த தங்கள் நண்பர்களைக் கண்டதும் “அல்லேலுயா!” என்று ஆர்ப்பரித்தார்கள்; அந்த சமயத்தில் நாங்கள் மறு ரூபமடைந்து ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திப்பதற்கு அவர்களுடன் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டோம். LST 33.2