Go to full page →

போர் சீக்கிரம் முடியப் போகிறது LST 124

சாத்தான் பரலோக பிரகாரங்களில் உண்டாக்கின பெரும் போர் சீக்கிரம் நித்திய முடிவை அடையப் போகிறது.சீக்கிரத்தில் பூமியின் குடிகளெல்லாம் பரலோக ஆளுகைக்காகவோ அல்லது அதற்கு விரோதமாகவோ கட்சிபிரிவினை யாய் நிற்பார்கள் . முன் ஒருபோதும் இல்லாத விதமாய் இப்பொழுது சாத்தான் அஜாக்கிரதையான ஒவ்வொரு ஆத்துமாவையும் மோசம் செய்து அழிப்பதற்கு வல்லமையாய் சர்ப்பனை செய்கிறான் . ஜனங்கள் தங்கள் முன்னிருக்கும் பெரிய முடிவுக்காயத்தமாகும் படி நாம் அவர்களை எழுப்பிவிடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அழிவின் கரை ஓரமாய் நிற்போரை நாம் எச்சரிக்க வேண்டும் . சாத்தானுடைய பொய்களை எதிர்த்து அவனுடைய அரண்களை நிக்கிரகம் செய்வதில் தேவனுடைய ஜனங்கள் தங்கள் பலத்தை எல்லாம் உபயோகிக்க வேண்டும். இவ்விஸ்தார உலகில் செவி கொடுக்க கூடிய மனுமக்கள் யாவருக்கும் பெரும் போரின் ஜெயத்துக்கான நெறி முறைகளை நாம் தெளிவாக்க வேண்டும். ஆத்துமாவின் நித்திய நியாயம் அந்நெறிமுறைகளின் மீதே சார்ந்து நிற்கிறது . நீங்கள் தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்படியாதிருக்கும் அம்மகா மார்க்க துரோகங்களைப் பின்பற்றுகிறீர்களா? அல்லது நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டேன் என்று சொன்ன தேவா குமாரனைப் பின்பற்றுகிறீர்களா? என்னும் கேள்வியை தூரத்திலும் சமீபத்திலுமுள்ள ஜனங்களுக்கு உணர்த்த வேண்டும். ----7T 141 LST 124.3