Go to full page →

இறுதிப் போராட்டத்திற்கான சாத்தானின் முயற்சி!, பிப்ரவரி 25 Mar 111

“பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக் கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்” - 1 யோவான் 2:18. Mar 111.1

சத்துருவானவன் சபைக்கு எதிராக தனது கடைசி போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்திகொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதையே பலர் நம்ப முடியாதபடி, அவன் தன்னைத்தான் மறைத்துகொண்டிருக்கிறான். வியப்புறச்செய்யும் அவனது செயல்களையும் வல்லமையையும் குறித்து மற்றவர்களை நம்பச்செய்வதுகூட முடியாத காரியமாக இருக்கிறது... Mar 111.2

மனிதன் சாத்தானின் அடிமையாகவும், இயற்கையாகவே அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுகிறவனாகவும், அவனது கட்டளையின்படி செய்கிறவனாகவும் இருக்கின்றான். பயன்விளைவிக்கக்கூடிய அளவிற்கு, தீவிரமாக பிசாசிற்கு எதிர்ப்புக்காட்டத்தக்க வல்லமையை மனிதன் கொண்டிருக்கவில்லை. விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து அவனுள் வாசஞ்செய்வதால் மட்டுமே, மனிதன் இத்தகைய பயங்கரமான எதிரியை துணிவுடன் எதிர்க்கமுடியும். மற்ற தற்காப்பு வழிகள் அனைத்துமே முற்றிலும் வீண். கிறிஸ்துவின் மூலமாக , மட்டுமே சாத்தானின் வல்லமை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய அதிமுக்கியமான உண்மை இதுவே. சாத்தான் ஒவ்வொரு கணமும் எவனை விழுங்கலாமென்று பூமியில் முன்னும்பின்னும், மேலும் கீழும், சுறுசுறுப்பாக சுற்றித்திரிந்துகொண்டிருக்கிறான்: ஆனால், விசுவாசமும் ஊக்கமான ஜெபமும் மட்டுமே, அவனது பலமான முயற்சிகளைத் தோல்வியடையச்செய்யும்... Mar 111.3

பூமியின் மேல் வந்துகொண்டிருக்கிற பெரிய அழிவிலே தேவனுடைய மீதமான மக்களை ஈடுபடுத்தத்தக்கதாக, சாத்தான் எதிர்பார்த்து நம்பிக்கையோடிருக்கிறான். கிறிஸ்துவின் வருகை அருகில் நெருங்க நெருங்க, அவன் தேவ மக்களை விழத்தள்ளும் தனது முயற்ச்சிகளில் அதிக தீர்மானத்தோடும் உறுதியோடும் இருப்பான். சகோதரர்களும் சகோதரிகளும் தங்களுக்கு புதிய வெளிச்சங்களும், சில புதிய வெளிப்படுத்தல்களும் கிடைத்ததாகக் கூறிக்கொள்வர்; ஆனால், அவைகளின் குணமோ பழைய விசுவாசத்தை கலங்கடிப்பதுதான். அவர்களது மூல உபதேசங்கள் தேவ வார்த்தையோடு ஒத்துப்போவதில்லை; ஆனாலும், ஆத்துமாக்கள் வஞ்சிக்கப்படுவார்கள் தவறான செய்திகள் பரப்பப்பட்டு, அந்தகண்ணியில் சிலர் விழுவார்கள்... எல்லாவகைத் தவறுகளுக்கும் எதிராக எச்சரிக்கையோடு விழித்திருப்பது நம்மால் கூடாத காரியம்; ஏனெனில், சாத்தான் மனிதர்களை சத்தியத்தினின்று இழுத்துக்கொள்ள, தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறான்... Mar 111.4

சிலர் திடமான குணம் இல்லாதிருக்கிறார்கள். நாம் வேண்டுகிற உருவத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடிய மெழுகு உருண்டையைப்போல அவர்கள் இருக்கிறார்கள்... இத்தகைய பெலவீனம், தயக்கம், இயலாமை ஆகியவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான கிறிஸ்தவனின் குணாதிசயங்களை எத்தகைய மோசமான சூழ் நிலையும் உருமாற்றவோ, மங்கச்செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. மனிதன் ஆவிக்குறிய வாழ்க்கையில் முதுகெழும்பு உடையவனாகவும், முகஸ்துதிக்கு மயங்காத-விலைக்கு வாங்கப்படக்கூடாத-அஞ்சாத-உறுதியுள்ள-நேர்மை உடையவனாகவும் இருக்கவேண்டும்... Mar 112.1

சாத்தானால் கட்த்தமுடியாத வரம்புகளை தேவன் வைத்திருக்கிறார். நமது பரிசுத்தமான விசுவாசமே அந்தத் தடையரண் ஆகும். நம்மை நாம் விசுவாசத்திற்க்குள் கட்டிக்கொள்ளும்பொழுது, வல்லவராகிய தேவனுக்குள் பாதுகாப்பாக இருப்போம்.⋆ Mar 112.2

வாக்குத்தத்த வசனம்: Mar 112.3

” நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்: உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்...” - எரோமியா 1:8. Mar 112.4