Go to full page →

சாத்தானுக்கு வேலைசெய்ய நேரம் செலவிடாதீர்!, பிப்ரவரி 24 Mar 109

“இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிற படியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்...” --- 2 பேதுரு 3:11,12. Mar 109.1

தங்கள் ஆத்துமாக்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது எது? நீதியின் எதிரியுடன் பங்கு கொண்டு, நம்மையறியாமலேயே அவனது வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோமா அல்லது கிறிஸ்துவுடன் பிணைக்கப்பட்டு, அவரது பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும்... Mar 109.2

ஒரு சகோதரன் இன்னொரு சகோதரானிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தி சத்தியத்தை விசுவாசிக்கிறோமென்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியிலே முரண்பாடான காரியங்களை விதைக்கும் வேலையில் யாரானாலும்-எந்த ஒருவரானாலும் அவனது கூட்டாளிகளாவதில் சாத்தான் மகிழ்ச்சியடைவான். கிறிஸ்துவின் வழியில் நடந்து செயல்படாமல், ஆனால் கிறிஸ்துவின் நண்பர்கள் எனக் கூறுபவர்கள்மூலமாக, சாத்தான் தனது நோக்கத்தை வெற்றிகராமாக நிறைவேற்றிக்கொள்கிறான்... Mar 109.3

கர்த்தரின் வருகைக்கான ஆயத்த நாள் இதுவே. நம்பிக்கை இல்லாமல் பேசுவதற்கோ, சாத்தானின் வேலையை செய்துகொண்டு இருப்பதற்கோ நமக்கு நேரமில்லை. வெறுப்பு, பொறாமை, வேற்றுமை ஆகிய விதைகளை விதைத்து, மற்றவர்களின் விசுவாசத்தையும் நிலைகுலையச் செய்யாதபடிக்கு, ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; ஏனெனில், தேவன் நமது வார்த்தைகளைக் கேட்டு, ஆம், இல்லை என்று நாம் கூறும் அழுத்தமான பதிலினால் நம்மை நியாயந்தீர்க்காமல், நமது செயல்களின் கனியைக்கொண்டு நியாயந்தீர்க்கிறார்... Mar 109.4

தேவ ஊழியர்கள் தங்கள் நெற்றிகளில் முத்திரிக்கப்படும் வரை, பூமியின் நான்கு காற்றுகளும் பிடிக்கப்பட்டிருக்கிறது; பின்பு பூமியின் சக்திகள், தங்கள் படைகளை கடைசிடயான மாபெரும் யுத்தத்திற்கு ஆயத்தப்படுத்தும். மீதமுள்ள-கிருபையின் சிறிதளவே இருக்கும் காலத்தை, நாம் எவ்வளவு கவனமாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்! நம்மை நாமே எவ்வளவு உண்மையுடன் சோதித்து ஆராய வேண்டும்!... Mar 109.5

கீழ்ப்படிதலுள்ள ஆவியும், சுத்தமான இருதயமும் சிந்தனையுமே அவசியமாயிருக்கிறது. ஆச்சரியப்படவைக்கத்தக்க தாலந்து, திறமை அல்லது அறிவு ஆகியவைகளைக்காட்டிலும் இது அதிக மதிப்புள்ளது. “கர்த்தர் இப்படியாக் கூறுகிறார்” என்று கீழ்ப்படியப் பழக்குவிக்கப்பட்ட சாதாரண மனம், திறமைகள் இருந்தும் அவைகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்களைக் காட்டிலும், தேவனுடைய வேலையைச் செய்ய அதிகத் தகுதுயுள்ளது... மனிதர்கள், தங்கள் உலக அறிவைக்குறித்து மேன்மை பாரட்டலாம்; ஆனால், விழியும், சத்தியமும், ஜீவனுமாகிய கிறிஸ்து எனப்பட்ட மெய்யான தேவனைக்குறித்து அறிவு இல்லாவிடில், அவர்கள் வருந்தத்தக்க அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களது அறிவும் அவர்களோடுசேர்ந்து அழிந்துபோம். இவ்வுலக அறிவு சக்தி கொண்டதுதான்; ஆனால், வார்த்தையாகிய கிறிஸ்துவைக்குறித்த அறிவு மனிதனின் மனதை மாற்றத்தக்க வல்லமையுடையதும் அழிவில்லாத்துமாக இருக்கிறது.⋆ Mar 110.1

வாக்குத்தத்த வசனம்: Mar 110.2

“...தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி...” - அப்போஸ்தலர் 5:32. Mar 110.3