Go to full page →

போராட்டத்தின் மத்தியில் நாடுகள் கச 174

வல்லமைபொருந்திய நான்கு தூதர்களும், தேவனுடைய ஊழியக்காரர்களது நெற்றிகளில் முத்திரை போடப்படும்வரையிலும், பூமியின் வல்லமைகளைப் பிடித்துவைத்திருக்கின்றனர். உலகித்திலுள்ள நாடுகள் யுத்தத்திற்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஆனால் தூதர்களால் தடை செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுப்படுத்துகின்றன இந்த வல்லமை நீக்கப்படும்பொழுது, இக்கட்டும் வேதனையுமான ஒரு காலம் வரும்; சாவுக்கேதுவான போர் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும்; கப்பல்கள் அவைகளிலிருக்கின்ற சரக்குகள் மற்றும் மக்களோடுங்கூட மகா ஆழத்தில் புதையுண்டுபோகும்; சத்திய ஆவியைக் கொண்டிராத அனைவரும், சாத்தானின் குணத்தையுடைய ஏதுகரங்களின் தலைமையின்கீழ் ஒன்றுபடுவர்; என்றாலும், அர்மகெதோனின் மாபொரும் யுத்தத்திற்கான காலம் வரும்வரையில், அவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டிருப்பர். — 7BC 967 (1900). கச 174.3