Go to full page →

நம்முடைய மனநிலைகள் மாற்றப்படமாட்டாது கச 216

பரலோகத்தில் நீங்கள் ஒரு பரிசுத்தவானாயிருக்க வேண்டுமானால், பூமியிலே முதலாவது நீங்கள் ஒரு பரிசுத்தவானாயிருக்க வேண்டும். இந்த வாழ்க்கையில் நீங்கள் பேணிவைத்திருக்கின்ற குணத்தின் பண்புகள், மரணத்தாலோ அல்லது உயிர்தெழுதலாலோ மாற்றப்படமாட்டாது, நீங்கள் உங்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வெளிப்படுத்திக்காண்பித்த அதே மனநிலையோடுதான், கல்லறையிலிருந்து வெளியே வருவீர்கள். கிறிஸ்து தமது வருகையில் உங்களுடைய எந்தக் குணத்தையும் மாற்றப்போவது இல்லை. குணத்தில் மாற்றம் செய்யப்படும் வேலை இப்போதே செய்யப்படவேண்டும். நம்முடைய அனுதின வாழ்க்கைதான் தமது நித்தியத்தைத் தீர்மானிக்கின்றது. குணங்களிலிருக்கின்ற குறைபாடுகளைக்குறித்து மனந்திரும்பி, அவைகள் கிறிஸ்துவின் கிருபையினாலே ஜெயிக்கவேண்டும். மேலோக நாட்டின் வாசஸ்தலங்களில் வாழ தகுதியடையும்படிக்கு, அதற்கு ஒத்திசைவான ஒரு குணம் இந்தக் கிருபையின் காலகட்டத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். — 13MR 82 (1891). கச 216.4