Go to full page →

உபத்திரவம் அவசியம் TamChS 209

உபத்திரவத்தால் அவர்கள் சிதறப்பட்டபோது, நற்செய்தி ஊழிய வைராக்கியத்தோடு அவர்கள் சென்றார்கள். தங்கள் ஊழியப்பணி குறித்த பொறுப்பை உணர்ந்திருந்தார்கள். நலிந்துகொண் டிருக்கிற ஓர் உலகத்திற்கான ஜீவ அப்பம் தங்களுடைய கரங்களில் இருந்ததை அறிந்திருந்தார்கள்; தேவையில் உள்ள அனைவருக்கும் இந்த அப்பத்தைப் பிட்டுக்கொடுக்க கிறிஸ்துவின் அன்பால் நெருக்கி ஏவப்பட்டார்கள். 1 AA, 106 TamChS 209.3

சோதிக்கிற சத்தியத்தை கவனிக்கவேண்டும்; அலட்சியம் செய்யப்படுகிற அந்தச் சத்தியமானது விவாதத்தின் பொருளாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்பது தேவதிட்டம். மக்களுடைய சிந்தைககளில் தூண்டுதல் உண்டாகவேண்டும். ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு நிந்தையும், ஒவ்வொரு அவதூறும் நம் மனதில் கேள்வியை எழுப்பவேண்டும்; இவை மூலம் நம்மை நித்திரையிலிருந்து விழிக்கச்செய்வதற்கு தேவன் முயற்சி செய்கிறார். 25T, 453 TamChS 210.1