Go to full page →

மெய்யான பற்று TamChS 309

வேலையில் நெருக்கடி ஏற்படும்போது, அலட்சியத்தோடு அக்கறையில்லாமல் இருப்பதை ஆண்டவர் அருவருக்கிறார். நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கிறமாபெரும் போராட்டத்தின் இறுதிக்கட்ட நிகழ்வுகளை விவரிக்கமுடியாத ஆவலோடு சர்வலோகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. நித்திய உலகின் எல்லையை தேவ மக்கள் நெருங்கிவிட்டனர். ஆகவே, அவர்கள் பரலோக தேவனுக்கு உண்மையாய் இருப்பதைக்காட்டிலும் முக்கியமானது வேறு என்ன இருக்கமுடியும்? யுகம் நெடுகிலும் தேவனுடைய பக்கம் ஒழுக்கவீரர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். யோசேப்பு, எலியா, தானியேல் போன்றோர் தாங்கள் அவருடைய விசேஷித்த ஜனங்கெளென்று சொல்ல வெட்கப்படவில்லை. அவருக்காகச் செயல்படுகிறவர்களுடைய பிரயாசங்களில் அவருடைய விசேஷித்த ஆசீர்வாதமும் இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் தங்கள் கடமையின் பாதையிலிருந்து விலகாமல், தேவ வல்லமையுடன், ‘கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?’ என்று விசாரிப்பார்கள். யாத்32:26.அத்தோடு நிற்காமல், தேவமக்களின் பக்கம் நிற்கத் தெரிந்துகொண்ட யாவரும் முன்வந்து, ராஜாதிராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமானவருக்குத் தங்கள் பற்றை முற்றிலுமாக வெளிப்படுத்தக்கடவர்கள்’ என்று கேட்டுக்கொள்வார்கள். தங்கள் சித்தத்தையும் திட்டங்களையும் தேவபிரமாணத்திற்குக் கீழ்ப்படுத்துகிறவர்கள் அவர்களே. அவர்மேலுள்ள அன்பினால் தங்கள் ஜீவனையும் பிரியமாக எண்ணுவதில்லை. வார்த்தையின் ஒளியைப் பெற்று, அதைத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் உலகிற்குப் பிரகாசிக்கச் செய்வதே அவர்கள் பணி. தேவனிடம் மெய்ப் பற்றுவைப்பதே அவர்கள் குறிக்கோளாயிருக்கிறது. 2PK, 148 TamChS 309.2