Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    18 - போராடின் இரவு வேளை

    யாக்கோபு பதான் அராமை விட்டு தெய்வீக வழிநடத்துதலுக் குக்கீழ்ப்படிந்தே புறப்பட்டிருந்தபோதும், இருபது வருடங்களுக்கு முன் தான் தப்பியோடி வந்த பாதையை கண்டுபிடிப்பதில் தடுமாறி னான். தன் தகப்பனை ஏமாற்றிய பாவம் எப்போதும் அவன் முன் இருந்தது. நீண்ட காலமாக தன் நாட்டைவிட்டு வெளியே தள்ளப் பட்டிருந்ததற்கு அந்தப் பாவத்தின் நேரடியான விளைவே காரணம் என்பதை அறிந்து, குற்றப்படுத்தும் மனசாட்சியின் கடிந்து கொள்ளுதல்கள் அவன் பயணத்தை மிகவும் வருத்தமுள்ளதாக்க, இந்தக் காரியங்களைக் குறித்து இரவும் பகலும் சிந்திக்கலானான். தன்னுடைய சொந்த நாட்டின் மலைகள் வெகு தூரத்தில் அவனுக்கு தென் பட்டபோது, முற்பிதாவின் இருதயம் ஆழமாக அசைக்கப்பட்டது. கடந்த காலம் முழுவதும் தெளிவாக அவன் முன் எழுந்தது. அவ னுடைய பாவத்தைக்குறித்த தெளிவோடு, தேவதயவும் தெய்வீக உதவியையும் நடத்துதலையுங்குறித்த வாக்குத்தத்தங்களும் அவனுடைய நினைவிற்கு வந்தது.PPTam 226.1

    தன் பயணத்தின் முடிவை நெருங்கினபோது, ஏசாவைக் குறித்த நினைவுகள் அச்சம் நிறைந்த கலக்கத்தை அவனுக்குள் உண்டு பண்ணின . யாக்கோபு ஓடிப்போன பிறகு, தானே தகப்பனுடைய சொத்து அனைத்திற்கும் ஒரே சுதந்தர வாளி என்று ஏசா கருதியிருந்தான். யாக்கோபு திரும்பி வருகிறான் என்ற செய்தி, தன்னுடைய சுதந்தரத்தை உரிமை பாராட்ட அவன் வருகிறான் என்ற ஒரு பயத்தை அவனில் எழுப்பக்கூடும். ஏசாவால் இப்பொ ழுது தன் சகோதரனுக்கு மாபெரும் கெடுதி செய்யமுடியும். அப் படிக்கூடுமானால், பழிவாங்க வேண்டும் என்கிற விருப்பத்தினால் மாத்திரமல்ல, அநேக்காலமாக தன்னுடையது என்று அவன் பார்த்திருந்த சொத்துக்களை எந்தத் தொந்தரவும் இன்றி காத்துக் கொள்ளுவதற்காகவும் அவனுக்கு விரோதமாக கொடுமை செய்ய உந்தப்படுவான்.PPTam 226.2

    ஆண்டவர் யாக்கோபுக்கு மீண்டும் தெய்வீக கவனிப்பைக் குறித்த அடையாளத்தைக் கொடுத்தார். கிலேயாத்திலிருந்து தென் புறமாக அவன் பிரயாணித்தபோது, அவனுடைய கூட்டத்தோடு முன்னேறிய இரண்டு தூதர் சேனைகள், அவர்களைப் பாதுகாப் பதற்கென்று முன்பும் பின்புமாய் அவனை சூழ்ந்திருந்தது போலக் காணப்பட்டது. வெகுகாலத்திற்கு முன் கண்ட பெத்தேலின் தரிச னத்தை யாக்கோபு நினைவு கூர்ந்தான். கானானிலிருந்து ஓடிய போது நம்பிக்கையையும் தைரியத்தையும் கொண்டுவந்த தெய்வீக தூதுவர்களே, தான் திரும்பி வரும்போதும் தனக்குப் பாதுகாவ லர்களாக இருக்கிறார்கள் என்ற சான்றினால் அவனுடைய பார மடைந்த இருதயம் இலகுவடைந்தது. அவன் இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். மக்னாயீம் என்பதற்கு இரண்டு சேனை அல்லது முகாம்கள் என்று பொருள்.PPTam 227.1

    என்றாலும், தன்னுடைய சொந்தப் பாதுகாப்பைப் பெற தான் ஏதாகிலும் செய்ய வேண்டும் என்று யாக்கோபு உணர்ந்தான். எனவே தன்னுடைய சகோதரனுக்கு சமரச வாழ்த்துதல்களைச் சொல்லும் தூதுவர்களை அவன் அனுப்பினான். ஏசாவை குறிப்பிடவேண்டிய மிகச் சரியான வார்த்தைகளை அவர்களுக்குப் போதித்தான். பிறப்பிற்கு முன்பாகவே மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த நினைவு கசப்பான காரணமாக இருந்து விடாதபடிக்கு என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் அனுப்பப்படுவதாக யாக்கோபு தன் ஊழியக்காரர்களிடம் கூறி னான். அவன் முன்பாகக் கொண்டுவரப்படும் போது, தங்களுடைய எஜமானை உம்முடைய தாசனாகிய யாக்கோபு என்று குறிப்பிட வேண்டும் என்றான். ஆதரவின்றி திரிந்தவன், தன் தகப்பனுடைய சுதந்தரவீதத்தில் உரிமை கோரும்படியாக திரும்பி வருகிறான் என்கிற பயத்தை அப்புறப்படுத்தும்படியாக தன்னுடைய செய்தியில், எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக் காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண் களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும் படி ஆட்களை அனுப்பினேன் என்று குறிப்பிட யாக்கோபு கவனமாயிருந்தான்.PPTam 227.2

    ஆனால் ஏசா நானூறு பேர்களோடு வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தியோடு வேலைக்காரர்கள் திரும்பி வந்தனர். நட்பின் செய்திக்கு எந்தவித பதிலும் திருப்பி அனுப்பப்படவில்லை. அவன் பழிவாங்கவே வருகிறான் என்பது நிச்சயம் என்று தோன்றியது. பாளையம் முழுவதையும் பயம் பற்றிக்கொண்டது. யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டான்.PPTam 228.1

    அவன் திரும்பிப் போக முடியாது, முன்னேறிச் செல்லவும் பயந்தான். ஆயுதம் இல்லாத பாதுகாப்பற்ற அவனுடைய கூட்டம் விரோதியை சந்திப்பதற்கு முற்றிலும் ஆயத்தமில்லாதிருந்தது. ஒன்று தாக்கப்பட்டாலும் மற்றொன்று தப்பிப்பதற்கான சந்தர்ப் பத்தைப் பெறும் என்று, அவன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தான். தன்னுடைய பெரிய மந்தையிலிருந்து தராளமான பரிசுகளை நட்பின் செய்தியோடு ஏசாவிற்கு அனுப்பினான். தன் சகோதரனுக்குச் செய்த தவறை நிவிர்த்தி செய்யவும் பயமுறுத்தின ஆபத்தை தவிர்க்கவும் தன்னுடைய வல்லமைக்குள் இருந்த அனைத்தையும் அவன் செய்தான். பின்னர் தாழ்மையுடனும் மன வருத்தத்துடனும் தெய்வீக பாதுகாப்பிற்காக மன்றாடினான். உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்பு வியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன் என்றான்.PPTam 228.2

    அவர்கள் இப்போது யாக்போக்கு ஆற்றை அடைந்திருந்தார்கள். இரவு வந்தபோது, யாக்கோபு தன் குடும்பத்தை அக்கறைப் படுத்தி, அவன் தனியாக பின்தங்கியிருந்தான். அந்த இரவை ஜெபத்தில் செலவிட அவன் தீர்மானித்திருந்தான். தேவனோடு தனிமையில் இருக்க அவன் விரும்பினான். தேவன் ஏசாவின் இரு தயத்தை மென்மையாக்கக்கூடும். அவரில் மாத்திரமே முற்பிதாவின் ஒரே நம்பிக்கை இருந்தது.PPTam 228.3

    தனிமையான மலைப்பாங்கில் தான் வனவிலங்குகள் தங்கியிருக்கும்; அங்கேதான் கொள்ளையர் கொலைகாரரின் பதுங்குமிட மும் இருக்கும். தனிமையும் பாதுகாப்புமற்றவனாக, ஆழ்ந்த துயரத்தில், யாக்கோபு நிலத்தின் மீது பணிந்து குனிந்தான். அது நடு இரவாயிருந்தது. அவனுடைய வாழ்க்கையை பிரியமாக்கியிருந்த அனைத்தும், ஆபத்திற்கும் மரணத்திற்கும் வெளியாக்கப்பட்டதாக அவனுக்குத் தூரத்திலிருந்தன. குற்றமற்றவர்களின் மேல் ஆபத்தைக் கொண்டு வந்தது தன்னுடைய சொந்த பாவமே என்கிற நினைவு மற்ற அனைத்தைவிடவும் அவனுக்கு மிகக் கசப்பான ஒன்றாக இருந்தது. ஊக்கமான அழுகையோடும் கண்ணீரோடும் அவன் தேவனுக்கு முன்பாக தன் ஜெபத்தை ஏறெடுத்தான். திடீ ரென்று ஒரு பலமான கரம் அவன் மேல் வைக்கப்பட்டது. ஒரு சத் துரு தன்னுடைய பிராணனை வாங்கத் தேடுவதாக நினைத்து, தாக்குகிறவனின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சித்தான். அந்த இருளில் வெற்றிபெறும்படியாக இருவரும் போராடினார்கள். ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை. ஆனாலும் யாக்கோபு தன்னுடைய முழுபலத்தையும் பிரயோகித்தான், ஒரு நொடியாகிலும் தன் முயற்சியில் தளராதிருந்தான். அவன் இவ்வாறு தன் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தபோது, அவனுடைய குற்றத் தைக்குறித்த உணர்வு அவன் ஆத்துமாவை நெருக்கியது. தேவனிட மிருந்து அவனை அடைக்கும்படியாக அவனுடைய பாவங்கள் அவன் முன் எழுந்தன. ஆனால் தன்னுடைய முடிவின் பயங்கரமான எல்லையில் அவன் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்தான். அவனுடைய முழு இருதயமும் அவருடைய இரக்கத்திற்காக மன்றாடியது. அந்த அந்நியன் தன்னுடைய விரலை யாக்கோ பின் தொடையின் மேல் வைக்க, அவன் உடனடியாக முடவனாக பொழுது விடியும் வரையிலும் அந்த போராட்டம் தொடர்ந்தது. தன்னுடைய எதிரியின் குணத்தை முற்பிதா இப்போது கண்டு கொண்டான். பரலோகத் தூதுவனுடன் தான் போராடிக்கொண்டிருந்த தையும், அதனால் தான் ஏறக்குறைய மனித பலத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய பலம் தனக்கு வெற்றியைத் தரவில்லை என்பதையும் அவன் அறிந்தான். அவர் தம்மையாக்கோபுக்கு வெளிப்படுத்தின உடன்படிக்கையின் தூதனான கிறிஸ்துவே . முற்பிதா இப்போது முடமாகி, துல்லியமான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். என்றாலும், அவன் தன் பிடியை தளர்த்தமாட்டான். மனந் திருந்தி உடைந்தவனாக, ஒரு ஆசீர்வாதத்திற்காக மன்றாடின வனாக, தூதனைப் பற்றிக்கொண்டு அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான் (ஓசியா 124). தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட தென்கிற நிச்சயம் அவனுக்குக் கண்டிப்பாக வேண்டும். சரீர வலி அவனுடய மனதை இந்த நோக்கத்திலிருந்து திசைதிருப்பப் போது மானதாக இல்லை. இந்தத் தீர்மானம் பலமடைந்தது. அவனுடைய விசுவாசம் கடைசிவரையிலும் மிகவும் ஊக்கமும் பிடிவாதமானது மாயிருந்தது. தூதனானவர் தன்னை விடுவிக்க முயன்று : நான் போகட்டும், பொழுது விடிகிறது என்று வலியுறுத்தினார். யாக்கோபோ : நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்றான். இதுமாத்திரம் பெருமையான, துணிகரமான நம்பிக்கையாக இருந்திருக்குமென்றால், யாக்கோபு உடனடியாக அழிக்கப்பட்டிருப்பான். ஆனால் அவனுடையது, தன்னுடைய தகுதியின்மையை அறிக்கையிட்டு, அதே நேரம் உடன்படிக்கையைக் காக்கிற தேவனுடைய உண்மையை நம்பின் ஒருவனுடையதாக இருந்தது.PPTam 229.1

    அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான் ஓசியா 124. மனத்தாழ்மையினாலும் மனவருத்தத்தினாலும் சுய அர்ப்பணிப்பினாலும் அந்த பாவமுள்ள, தவறு செய்யும் மனிதன், பரலோகத்தின் மகத்துவமானவரை மேற்கொண்டான். தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மேல் நடுங்கும் தன்னுடைய பிடிப்பை வைத்திருந்தான். நித்திய அன்பானவரின் இருதயத்தால் பாவியி னுடைய மன்றாட்டைவிட்டு திரும்ப முடியாது.PPTam 230.1

    மோசடியினால் சேஷ்ட புத்திரபாகத்தைப் பெற்றுக்கொண்ட யாக்கோபின் பாவத்திற்கு நடத்தின் தவறு இப்போது அவன் முன் தெளிவாக வைக்கப்பட்டது. அவன் தேவனுடைய வாக்குத்தத் தங்களை நம்பியிராது, அவர் தம்முடைய சொந்த நேரத்திலும் வழியிலும் நடத்தியிருக்கக்கூடியதை தன் சொந்த முயற்சியினால் நடப் பிக்க தேடினான். அவன் மன்னிக்கப்பட்டான் என்பதன் சான்றாக, அவனுடைய பெயர், பாவத்தை நினைவுபடுத்தின் ஒன்றிலிருந்து வெற்றியின் நினைவுச்சின்னத்திற்கு மாற்றப்பட்டது . உன் பேர் இனி யாக்கோபு (எத்தன்) என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப் படும், தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.PPTam 230.2

    யாக்கோபினுடைய ஆத்துமா எந்த ஆசீர்வாதத்திற்காக ஏங்கியிருந்ததோ அதை அவன் பெற்றுக்கொண்டான். ஆள்மாறாட்டம் செய்து வஞ்சித்த அவனுடைய பாவம் மன்னிக்கப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் நெருக்கடி கடந்து சென்றது. சந்தேகமும், குழப்பமும், குற்றத்தைக்குறித்த வருத்தமும் அவனுடைய வாழ்க் கையை கசப்பாக்கியிருந்தன. இப்போது அனைத்தும் மாற்றப்பட்டன் . தேவனோடு ஒப்புரவானதின் சமாதானம் இனிமையாயிருந்தது. யாக்கோபுதன் சகோதரனை சந்திக்க அதன்பின்பு பயப்படவில்லை. அவனுடைய பாவங்களை மன்னித்த தேவன், அவனுடைய தாழ் மையையும் மனவருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி ஏசாவின் இருதயத்தையும் அசைக்க முடியும்.PPTam 230.3

    யாக்கோபு தூதனோடு போராடிக்கொண்டிருந்தபோது, மற்றொரு பரலோகத்தூதன் ஏசாவிடம் அனுப்பப்பட்டான். ஒரு சொப் பனத்தில் தன் சகோதரன் இருபது வருடங்களாக தனது தகப்பன் வீட்டிலிருந்து தள்ளப்பட்டிருந்ததை ஏசா கண்டான், அவனுடைய தாய் மரித்துப்போனதினால் அவன் படும் வேதனையை அவன் கண்டான்; தேவனுடைய சேனைகளால் அவன் சூழப்பட்டதை அவன் கண்டான். யாக்கோபுடைய பிதாவின் தகப்பன் அவனோடு இருப்பதினால் அவனுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்ற கட்டளையோடு இந்த சொப்பனம் ஏசாவால் அவனுடைய வீரர்களுக்குச் சொல்லப்பட்டது.PPTam 231.1

    வனாந்தர அதிபதி தன் படைவீரர்களை நடத்தினவனாகவும், யாக்கோபுதன் மனைவிகள் பிள்ளைகளோடும், அவர்களோடிருந்த மேய்ப்பர்கள் வேலைக்காரிகள், அதைத் தொடர்ந்த மிக நீண்ட மந்தைகள் மாடுகளோடும் வர, இரண்டு கூட்டங்களும் கடைசியாக ஒருவரையொருவர் சந்தித்தனர். தன் கோலிலே சாய்ந்தவனாக முற்பிதா போர்வீரர்களின் படையைச் சந்திக்க முன் சென்றான். அவன் சரீரம் வெளுத்தவனாக, சமீபத்தில் நடந்த போராட்டத்தினால் முடமாகி, மெதுவாகவும் வலியோடும் ஒவ்வொரு அடியிலும் குந்தி நடந்தான். என்றபோதும், அவனுடைய முகம் மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் பிரகாசித்தது.PPTam 231.2

    வேதனையோடிருந்த முடவனைக் கண்டதும், ஏசா எதிர் கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ் செய்தான், இருவரும் அழுதார்கள். இந்தக் காட்சியை பார்த்ததினால் ஏசாவின் முரட்டுத்தனமான வீரர்களின் இருதயங்களும் தொடப்பட்டன. அவன் தன்னுடைய சொப்பனத்தை அவர்களுக்குச் சொல்லியிருந்தபோதும், தங்களுடைய தலைவனிடம் வந்திருந்த இந்த மாற்றத்தினுடைய காரணத்தை அவர்கள் சொல்லக்கூடாதிருந்தார்கள். முற்பிதாவின் பெலவீனத்தை அவர்கள் கண்டிருந்தபோதும், இந்த நிலையே அவ னுடைய பெலமாக இருந்தது என்கிறதை அவர்கள் நினைக்கா திருந்தார்கள்.PPTam 231.3

    யாப்போக்கின் அருகில் வேதனையான அவனுடைய இர வில், தனக்கு முன் அழிவு இருப்பதாகத் தோன்றியிருந்தபோது, மனிதனுடைய உதவி எவ்வளவு வீண் என்பதும், மனித வல்லமையின் மீது வைக்கும் அனைத்து நம்பிக்கையும் எவ்வளவு ஆதாரமற்றது என்பதும் யாக்கோபிற்குக் கற்பிக்கப்பட்டது. தன்னுடைய ஒரே உதவி, தான் யாருக்கு விரோதமாக மிகவும் வருந்தத்தக்க பாவத்தைச் செய்திருந்தானோ அவரிடமிருந்து மாத்திரமே வர வேண்டும் என்பதை அவன் கண்டான். உதவியற்றவனும் தகுதி யற்றவனுமாக, மனந்திரும்பின் பாவிக்கான தேவனுடைய கிருபையின் வாக்குத்தத்தங்களுக்காக மன்றாடினான். தேவன் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார் என்கிற வாக்குத்தத்தமே அவனுடைய நிச்சயமாக இருந்தது. அவருடைய வார்த்தைகள் பொய்யா கிறதைப் பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்து போகக்கூடும். இதுதான் அந்த பயங்கரமான போராட்டத்தில் அவனைத் தாங்கியிருந்தது .PPTam 232.1

    அந்த இராத்திரியில் யாக்கோபு பெற்ற அனுபவம், கிறிஸ்து வினுடைய இரண்டாம் வருகைக்குச் சற்று முன்பு தேவனுடைய ஐனங்கள் கடக்க வேண்டியதிருக்கிற போராட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. எரேமியா தீர்க்கதரிசி பரிசுத்த தரிசனத்தில் இந்த காலத்தைப் பார்த்தவனாக . தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம், திகிலுண்டு, சமாதானமில்லை .... முகங்களெல்லாம் மாறி வெளுத் திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம், ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான் (எரே. 30:5-7) என்று கூறினான்.PPTam 232.2

    மனிதனுக்காக கிறிஸ்து செய்கிற மத்தியஸ்த ஊழியத்தை அவர் நிறுத்தும் போது இந்த இக்கட்டுக்காலம் துவங்கும். அப் போது ஒவ்வொரு ஆத்துமாவின் வழக்கும் தீர்மானிக்கப்பட்டிருந்து, பாவத்திலிருந்து சுத்திகரிக்க எந்த பாவ நிவாரண இரத்தமும் இல்லாதிருக்கும். தேவனுக்கு முன்பு, மனிதனுக்காகப் பரிந்து பேசு கிறவர் என்னும் தமது தகுதியிலிருந்து இயேசு வெளியேறும்போது, அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்த மாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 2211) என்கிற பவித்திரமான அறிவிப்பு சொல்லப் படும். அப்போது கட்டுப்படுத்தும் தேவனுடைய ஆவி பூமியிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும். யாக்கோபு தன்னுடைய கோப முற்ற சகோதரனால் மரணத்தைக்குறித்து பயமுறுத்தப்பட்டதைப் போல, தேவனுடைய ஜனங்கள் அவர்களை அழிக்கத் தேடுகிற துன்மார்க்கரால் வரும் ஆபத்தில் இருப்பார்கள். முற்பிதா ஏசாவின் கையிலிருந்து விடுவிக்கப்படும்படி இராமுழுவதும் போராடினது போல், நீதிமான்கள் தங்களைச் சுற்றியிருக்கிற தங்கள் சத்துருக் களிடமிருந்து விடுவிக்கப்படும்படி இரவும் பகலும் தேவனை நோக்கி கதறுவார்கள்.PPTam 232.3

    அவனுடைய பாவத்தினிமித்தம் அவனை அழிக்க தனக்கிருக் கும் உரிமையைக் கோரி, சாத்தான் யாக்கோபை தூதர்கள் முன்பாக குற்றப்படுத்தினான். அவனுக்குவிரோதமாகப்படையெடுக்கும்படி ஏசாவின் இருதயத்தை அவன் அசைத்தான். முற்பிதாவினுடைய போராட்டமான நீண்ட இரவின்போது அவன் மீது குற்ற உணர்வை திணிக்கவும், அவனைச்சோர்வடையச் செய்து தேவன் மேலிருக்கும் அவனுடைய பற்றை முறிக்கவும் அவனுடைய குற்றத்தைக்குறித்த உணர்வை அவன்மேல் திணிக்கவும் சாத்தான் முயன்றான். துயரத்தில் யாக்கோபு தூதனைப் பற்றிக்கொண்டு கண்ணீரோடு விண்ணப்பம் செய்தபோது, அவனுடைய விசுவாசத்தைச் சோதிக் கும்படியாக பரலோகத் தூதுவரும் அவனுடைய பாவத்தை அவனுக்கு நினைப்பூட்டி அவனிடமிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் யாக்கோபு விடுவதாக இல்லை. தேவன் இரக்கமுள்ளவ ரென்று அறிந்து, தன்னை அவருடைய இரக்கத்திற்கு ஒப்புக்கொடுத் தான். தன்னுடைய பாவத்திற்கான மனவருத்தத்தை குறிப்பிட்டு காண்பித்து, விடுலைக்காக மன்றாடினான். தன்னுடைய வாழ்க் கையை அவன் திரும்பிப்பார்த்தபோது, ஏறக்குறைய முற்றிலும் நம்பிக்கையின்மைக்குத் தள்ளப்பட்டான். என்றாலும் தூதனைப் பற்றிக் கொண்டு, ஊக்கமான வேதனையான அழுகை யோடு, மேற்கொள்ளும் வரை தன்னுடைய மன்றாட்டை வலியுறுத் தினான். அப்படிப்பட்ட அனுபவமே கடைசிப் போராட்டத்தில் தேவனுடைய பிள்ளைகளின் அனுபவமாயிருக்கும். அவர்களுடைய விசுவாசத்தையும், அவர்களுடைய விடாப்பிடிவாதமான உறுதியையும் அவர்களை விடுவிக்கும் அவருடைய வல்லமையின் மேல் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கையையும் தேவன் சோதிப் பார். அவர்களுடைய வழக்கு நம்பிக்கையற்றதென்றும் அவர் களுடைய பாவங்கள் மன்னிப்பைப் பெறக் கூடாத அளவு மிகப்பெரியது என்றும் சொல்லி, சாத்தான் அவர்களை பயமுறுத்த முயலுவான். தங்களுடைய குறைகளைக் குறித்த ஆழமான உணர்வு அவர்களுக்கு இருக்கும். தங்கள் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது, அவர்களுடைய நம்பிக்கை மூழ்கி விடும். ஆனாலும் தேவனுடைய இரக்கங்களின் மேன்மையையும், தங்களுடைய சொந்த மெய்யான மனவருத்தத்தையும் நினைவுகூர்ந்தவர்களாக, உதவியற்றவர்களுக்கும் மனந்திரும்பின் பாவிகளுக்கும் கிறிஸ்துவின் மூலமாக கொடுக்கப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களுக்காக அவர்கள் மன்றாடுவார்கள். அவர்களுடைய ஜெபங்கள் உடனடியாக பதிலளிக்கப்படாததினால் அவர் களுடைய விசுவாசம் ஒழிந்து போகாது. யாக்கோபு தூதனைப் பற்றிக்கொண்டதைப்போல அவர்கள் தேவனுடைய பலத்தைப் பற்றிக்கொள்ளுவார்கள். அவர்களுடைய வார்த்தைகள் : நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்பதாக இருக்கும்.PPTam 233.1

    சேஷ்ட புத்திரபாகத்தை வஞ்சனையினால் பெற்றுக்கொண்ட தன் பாவத்தைக் குறித்து யாக்கோபு முன்னதாகவே மனம் வருந்தியிராதிருந்தால், தேவன் அவனுடைய ஜெபத்தை கேட்டு இரக்கமாக அவனுடைய வாழ்க்கையை காத்திருக்கமாட்டார். அதைப் போலவே இக்கட்டுக்காலத்திலும், பயத்தாலும் வேதனையாலும் வாதிக்கப்படும் போது, அறிக்கை செய்யப்படாத பாவங்களை தேவனுடைய மக்கள் தங்கள் முன்காண்பார்களானால் அவர்களும் மேற்கொள்ளப்படுவார்கள். விரக்தி அவர்களுடைய விசுவாசத்தை தறித்துப்போட, விடுதலைக்காக தேவனிடம் மன்றாடும் நம்பிக்கையை அவர்கள் பெற முடியாது, அதற்கு மாறாக, தங்களுடைய தகுதியின்மையைக் குறித்த ஒரு ஆழமான உணர்வு அவர்களுக்கு இருக்கும்போதே, எல்லா மறைமுகமான தவறுகளையும் விட்டுவிடுவார்கள்; அவர்களுடைய பாவங்கள் கிறிஸ்துவின் நிவாரணம் செய்கிற இரத்தத்தினால் அழிக்கப் பட்டிருக்கும், அவைகளை அவர்கள் நினைவிற்குக் கொண்டு வரக்கூடாதிருப்பார்கள்.PPTam 234.1

    வாழ்க்கையின் சிறிய காரியங்களில் உண்மையற்றிருப்பதை தேவன் பார்க்கமாட்டார் என்று நம்பும்படி சாத்தான் அநேகரை நடத்துகிறான். ஆனால் யாக்கோபுடன் இடைப்பட்ட விதத்தில் தேவன்PPTam 234.2

    எவ்விதத்திலும் தீமையை அங்கிகரிக்கவோ அல்லது சகித் துக்கொள்ள வோ மாட்டார் என்கிறதைக் காண்பித்தார். தங்களுடைய பாவங்களுக்குக் காரணம் சொல்ல முயற்சித்தோ, அல்லது பாவங்களை மறைத்தோ, அவைகள் மன்னிக்கப்படாமலும் அறிக்கை பண்ணப்படாமலும் பரலோகப் புத்தகங்களிலே தங்கியிருக்கும்படி அனுமதிக்கிற அனைவரும் சாத்தானால் மேற்கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய தொழில் எவ்வளவு உன்னதமும், அவர்களுடைய தகுதி எவ்வளவு கனமுள்ளதாகவும் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய பார்வையில் அவர்களுடைய வழி அவ்வளவு வேதனையுள்ளதாயிருக்கிறது. மாபெரும் எதிராளியினுடைய வெற்றியும் அவ்வளவு அதிக உறுதியோடு இருக்கும்.PPTam 234.3

    பாவத்திற்குக் கொடுக்கப்பட்டு, என்றாலும் உண்மையான மனந்திரும்புதலோடு தம்மிடம் திரும்பினவர்களை தேவன் புறம்பே தள்ள மாட்டார் என்பதற்கு யாக்கோபின் சரித்திரம் உறுதி யளிக்கிறது. தன்னுடைய சுய பலத்தோடு போராடி சம்பாதிக்க முடியாதிருந்த வெற்றியை, சுயத்தை சரணடையச் செய்வதினாலும், உறுதியான விசுவாசத்தினாலும் யாக்கோபு அடைந்தான். இவ் வாறாக, தான் ஏங்கியிருந்த ஆசீர்வாதங்களை தெய்வீகவல்லமையும் கிருபையும் மாத்திரமே தனக்குத் தர முடியும் என்கிறதை தேவன் தமது ஊழியக்காரனுக்குக் கற்றுக்கொடுத்தார். அவ்வாறே கடைசி நாட்களில் வாழும் அனைவரிடமும் இருக்கும். ஆபத்துகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, விரக்தி அவர்கள் ஆத்துமாக்களை பிடித்துக்கொள்ளும்போது, பாவநிவாரணத்தின் தகுதிகளையே அவர்கள் முழுவதுமாக நம்பியிருக்கவேண்டும். நம்மால் நாம் எதையும் செய்யக்கூடாது. நம்முடைய உதவியற்ற தகுதியற்ற நிலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்ச கரின் தகுதியை நாம் நம்ப வேண்டும். இதைச் செய்யும் போது ஒரு வரும் ஒருபோதும் அழியமாட்டார்கள். நம்முடைய தவறுகளைக் குறித்த நீண்ட இருண்ட அட்டவணை நித்தியமானவரின் கண்முன் இருக்கிறது. நம்முடைய விவரப்பட்டியல் முழுமையானதாயிருக் கிறது. நம்முடைய குற்றங்கள் எதுவும் மறக்கப்படவில்லை . ஆனால் தம்முடைய முற்கால ஊழியக்காரர்களுடைய கூக்குரலை கவனித்துக் கேட்டவர் நம்முடையவிசுவாசமுள்ள ஜெபங்களையும் கேட்டு, மீறுதல்களை மன்னிக்கிறார். அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்று வார்.PPTam 235.1

    யாக்கோபு விடாப்பிடிவாதமாக, தீர்மானமாக இருந்ததினிமித் தம் மேற்கொண்டான். அவனுடைய அனுபவம், பிடிவாதமான ஜெபத்தின் வல்லமைக்கு சாட்சி பகருகிறது. பிடிவாதமான ஜெபத் தின் பாடத்தையும், விட்டுக்கொடுக்காத விசுவாசத்தின் பாடத்தையும் கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இதுவே. கிறிஸ்துவின் சபைக் காவது அல்லது தனிப்பட்ட கிறிஸ்தவனுக்காவது கிடைத்த மா பெரும் வெற்றிகள் அவனது திறமையினாலோ அல்லது படிப்பி னாலோ, செல்வத்தினாலோ அல்லது மனித தயவினாலோ அவ னுக்குக் கிடைத்தவைகள் அல்ல. அவனுடைய ஊக்கமான வேதனை நிறைந்த விசுவாசம் வல்லமையானவரின் பலத்த கரத்தை பற்றிக்கொள்ள, தேவனோடு அவன் பேசிக்கொண்டிருந்ததினால் கிடைத்த வெற்றிகளே.PPTam 235.2

    தங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் விட்டுவிட்டு, தேவ னுடைய ஆசீர்வாதங்களுக்காக ஊக்கமாகத் தேட சித்தமாயிருக் கிறவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளுவார்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, அவனைப்போல் ஊக்க மாகவும் பிடிவாதமாகவும் இருக்கிற அனைவரும், அவன் வெற்றி கொண்டதைப்போலவே வெற்றிக்கொள்ளுவார்கள். தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமை யுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 18:7, 8.PPTam 236.1