Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    19 - கானானுக்குத் திரும்பிச்செல்தல்

    பர்தானைக் கடந்து இவ்வாறாக, யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான். ஆதி 33:18. இவ்வாறாக, தேவன் தன்னை சமாதானத்துடன் தன்னுடைய சொந்த தேசத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று பெத்தேலில் முற்பிதா செய்த ஜெபம் பதிலளிக் கப்பட்டது. கொஞ்ச காலம் அவன் சீகேம் பள்ளத்தாக்கில் குடியிருந்தான். இங்கேதான் நூறு வருடங்களுக்கும் முன்பாக ஆபிர காம் தன்னுடைய முதல் கூடாரத்தைப் போட்டு, வாக்குத்தத்த நாட்டிலே தன் முதல் பலிபீடத்தை எழுப்பினான். இங்கே யாக்கோபு, தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்ப னாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல் எல் லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான் (ஆதி. 331920) தேவன், இஸ்ரவேலின் தேவன் (என்று அதற்குப் பொருள்). ஆபிரகாமைப் போலவே யாக்கோபும் தன் கூடாரத்தின் பக்கத்தில் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் அமைத்து, தன் குடும்ப நபர்களை காலை மாலை பலிக்கு அழைத்திருந்தான். இங்கே அவன் ஒரு கிணற்றையும் வெட்டினாள். பதினேழு நூற்றாண்டுகள் கழித்து இந்த இடத்தில் தான் யாக்கோபின் குமாரனும் இரட்சகருமானவர் அமர்ந்து, மதிய வெப்பநேரத்தில் ஓய்வெடுத்து, தன்னிடம் ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றைக் குறித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். யோவான் 4:14.PPTam 237.1

    யாக்கோபும் அவன் குமாரரும் சீகேமில் தங்கியிருந்தது, கொடுமையிலும் இரத்தஞ்சிந்துதலிலும் முடிவடைந்தது. அந்த வீட்டின் ஒரே மகள், அவமானத்திற்கும் வருத்தத்திற்கும் உட்படுத்தப் பட்டாள்; இரண்டு சகோதரர்கள் கொலை குற்றத்தில் தங்களை ஈடுபடுத்தினார்கள்; ஒரு அவசரமான வாலிபனின் ஒழுங்கற்ற செயலினால், அந்தப் பட்டணம் முழுவதும் அழிவிற்கும் படு கொலைக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டு இவ்வாறு தேவபக்தியற்றவர்களோடு தோழமை கொள்ளத் துணிந்த யாக்கோபின் மகளுடைய செயல் தான் இந்த பயங்கரமான விளைவை கொண்டுவந்ததன் துவக்கமாயிருந்தது. தேவனுக்குப் பயப்படாதவர்களிடமிருந்து இன்பத்தைத் தேடுகிறவன், சாத்தானுடைய களத்தில் தன்னை வைத்து, அவ னுடைய சோதனைகளை வரவேற்கிறான்.PPTam 238.1

    சிமியோன் மற்றும் லேவியினுடைய துரோகம் நிறைந்த கொடுமை, காரணமில்லாததல்ல. இருப்பினும், சீகேமியர்களோடு நடந்து கொண்ட விதத்தில் அவர்கள் மோசமான பாவத்தைச் செய்திருந்தார்கள். யாக்கோபிடமிருந்து கவனமாக தங்களுடைய நோக்கங்களை மறைத்திருந்தனர். அவர்களுடைய பழிச்செயல் அவனை கொடிய பயத்தினால் நிரப்பியது. தன்னுடைய குமாரர் களின் வஞ்சகத்தாலும் கொடுமையாலும் மனம் நொந்தவனாக அவன் : இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கொடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள், நான் கொஞ்சஜனமுள்ளவன், அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்ப மும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். என்றபோதும், அவர்களுடைய கொடூரமான செயலை அவன் எவ்வளவு வருத்தத்தோடும் அருவருப்போடும் கருதினான் என்பது, ஐம்பது வருடங்களுக்குப்பின்பு எகிப்து தேசத்தில் அவன் தன்னுடைய மரணப்படுக்கையிலிருந்தபோது கூறிய வார்த் தைகளினால் காட்டப்படுகிறது. சிமியோனும், லேவியும் ஏக சகோ தரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன் படாதே, என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே, அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே . உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்க மும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். ஆதி 49:5-7.PPTam 238.2

    மிக ஆழ்ந்த தாழ்மைக்கான காரணம் இருக்கிறதை யாக்கோபு உணர்ந்தான். அவன் குமாரர்களின் குணத்தில் கொடுமையும் பொய்யும் வெளிக்காட்டப்பட்டது. அவர்களுடைய கூடாரத்தில் பொய் தேவர்கள் இருந்தார்கள். அவன் வீட்டிலே தானும் விக்கிரக ஆராதனை ஓரளவுக்கு நிலைகொண்டிருந்தது. அவர்களுடைய செய்கைக்குத்தக்கதாக ஆண்டவர் அவர்களை நடத்துவார் என்றால், சுற்றிலுமிருக்கிற தேசங்கள் பழிவாங்கும் படி அவர் அவர்களை விட்டுவிட மாட்டாரா?PPTam 239.1

    யாக்கோபு இவ்விதமாக வருத்தத்தினாலும் பிரச்சனையினாலும் கூனியிருக்க, ஆண்டவர் தென்புறமாக பெத்தேலுக்குப் பிர யாணம் போகும்படியாக அவனை நடத்தினார். இந்த இடத்தைக் குறித்த நினைவு தூதர்களையும், தேவனுடைய இரக்கத்தின் வாக் குத்தத்தங்களையும் முற்பிதாவுக்கு ஞாபகப்படுத்தின தோடு, அவன் அங்கு செய்த கர்த்தர்தாம் என் தேவனாயிருப்பார் என்ற பொருத்தனையையும் நினைவுப்படுத்தியது. அந்த பரிசுத்த இடத்திற்குப் போகும் முன்பாக தன்னுடைய வீட்டார் விக்கிரக ஆராதனையின் எல்லா அசுசியிலிருந்தும் விடுபட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். எனவே பாளயத்திலிருந்த அனைவருக்கும் உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள், எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்று கட்டளை கொடுத்தான்.PPTam 239.2

    தகப்பனுடைய கூடாரத்தைவிட்டு தனித்துத் திரிகிறவனாக தன் ஜீவனுக்காக ஓடும்போது, தேவன் எவ்விதமாக இராத்தரிசனத்தில் தனக்கு காணப்பட்டார் என்பதைக் குறித்த பெத்தேலுக்கு தான் முதல் முறையாக சென்ற கதையை யாக்கோபு ஆழ்ந்த உணர்வு களோடு திரும்பக் கூறினான். ஆண்டவர் ஆச்சரியமாக தன்னோடு நடந்து கொண்டதை அவன் திரும்பிப்பார்த்தபோது, அவனுடைய சொந்த மனம் இளகினது. அவன் பிள்ளைகளும் அடக்கியாளும் வல்லமையினால் தொடப்பட்டார்கள். பெத்தேலுக்கு வரும்போது, அனைவரும் இணைந்து தேவனை தொழுது கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தும்படி அவன் மிகவும் பொருத்தமான ஒரு வழியைத் தெரிந்து கொண்டான். அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.PPTam 239.3

    தேசத்தின் குடிகள் மேல் தேவனாலே ஒரு பயங்கரம் உண்டாயிற்று. அதினிமித்தம் சீகேமின் படுகொலைக்கு பழிவாங்கும் படி அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை . பிரயாணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பெத்தேலைச் சென்றடைந்தார்கள். இங்கே ஆண்டவர் யாக்கோபிற்கு மீண்டும் தரிசனமாகி, உடன் படிக்கையின் வாக்குத்தத்தத்தை அவனோடு புதுப்பித்தார். யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றுணை நிறுத்தினான்.PPTam 240.1

    பெத்தேலில் தன்னுடைய தகப்பன் குடும்பத்தில் அதிக காலம் மதிப்புள்ள நபராக இருந்த மெசொப்பொத்தோமியாவிலிருந்து கானான் தேசன் வரைக்கும் தன் எஜமானிக்கு துணையாக வந்த ரெபேக்காளின் தாதி தெபோராளிற்காக புலம்பினான். இந்த வயதான பெண்மணி தன்னோடு இருந்தது, யாக்கோபை அவனுடைய இளமைகாலத்தோடு கட்டியிருந்த, அதிலும் விசேஷமாக, அவன் மேல் மிகவும் அதிகமான இளகிய அன்பு வைத்திருந்த அவன் தாயோடு கட்டின மதிப்புமிக்க கட்டாக இருந்தது. தெபோ ராள் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளோடு புதைக்கப்பட்டாள். அவள் கல்லறைக்கு மேலிருந்த கர்வாலி மரம், அழுகையின் கர்வாலி என்று அழைக்கப்பட்டது. அவளுடைய உண்மையான சேவையின் நினைவு கூருதலும், இந்த வீட்டு நண்பரைக்குறித்து புலம்பின் வார்த்தைகளும் தேவனுடைய வார்த்தையில் பாதுகாக்கப்பட தகுதியுள்ளதாக இருந்தது என்பது கவனிக்கப்படாமல் போகக்கூடாது.PPTam 240.2

    பெத்தேலிலிருந்து எபிரோன் இரண்டு நாள் பிரயாண தூரத் திலிருந்தது. ஆனால் ராகேலுடைய மரணம் மாபெரும் வருத்தத்தை யாக்கோபிற்கு உண்டாக்கியது. அவளுக்காக அவன் இரண்டு முறை ஏழு வருடங்கள் சேவை செய்திருந்தான். அவள் மேல் அவனுக்கிருந்த அன்பு, அதை இலகுவாக்கியிருந்தது. அந்த அன்பு எவ்வளவு ஆழமும் நீடித்ததுமாயிருந்தது என்பது, வெகுகாலம் கழிந்து எகிப்திலே யாக்கோபு தன் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, யோசேப்பு தன் தகப்பனைப் பார்க்க வந்திருந்த சமயத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையை திரும்பிப்பார்த்த வயதான முற்பிதா, நான் பதானை விட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும் போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள், அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் பண்ணினேன் (48:7) என்று கூறினதிலிருந்து தெரிகிறது. நீண்டதும் தொல்லைகள் நிறைந்ததுமாயிருந்த அந்த குடும்ப சரித்திரத்தில், ராகேலின் இழப்பு மாத்திரமே நினைவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டது.PPTam 240.3

    தன்னுடைய மரணத்திற்கு முன்னதாக ராகேல் இரண்டாவது குமாரனைப் பெற்றெடுத்தாள். தன் ஜீவன் பிரிந்து கொண்டிருக்க, அந்த குழந்தைக்கு பெனொனி வருத்தத்தின் மகன் என்று அவள் பெயரிட்டாள். அவன் தகப்பன் அவனை பென்யமீன் என் வலது கரத்தின் மகன் அல்லது என் பெலத்தின் மகன் என்று அழைத்தான். ராகேல் மரித்த இடத்திலே அடக்கம்பண்ணப்பட்டு, அவளுடைய நினைவை நிலைநிறுத்தும்படியாக ஒரு தூண் அங்கே எழுப்பப்பட்டது.PPTam 241.1

    எப்பிராத்தாவிற்குப் போகும் வழியில், முதல் மகனான ரூப னுக்கு சேஷ்ட புத்திர பாகத்தின் கனத்தையும் வாய்ப்புகளையும் மறுக்கிற மற்றொரு இருண்ட குற்றம் யாக்கோபின் குடும்பத்திற்கு களங்கத்தை உண்டு பண்ணினது.PPTam 241.2

    கடைசியாக, யாக்கோபு தன் பிரயாணத்தின் முடிவிற்கு வந் தான். யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குதன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான், அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர். இங்கே அவன் தன் தகப்பனுடைய முடிவு காலங்களில் தங்கியிருந்தான். குருடும் பெலவீனமுமாகியிருந்த ஈசாக்கிற்கு, அதிக காலம் தன்னைவிட்டுச் சென்றிருந்த இந்த மகனுடைய தயவான கவனிப்பு, மனைவியை இழந்து தனி மையான வருடங்களில் ஆறுதலாயிருந்தது.PPTam 241.3

    யாக்கோபும் ஏசாவும் தங்கள் தகப்பனுடைய மரணப்படுக் கையில் சந்தித்தார்கள். ஒரு காலத்தில் மூத்த சகோதரன் பழிவாங் குவதற்கான சந்தர்ப்பமாக இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியிருந்தான். ஆனால் அவனுடைய உணர்வுகள் இப்போது வெகு வாக மாறியிருந்தன. யாக்கோபு சேஷ்ட புத்திரபாகத்தின் ஆவிக் குரிய ஆசீர்வாதங்களால் திருப்தியடைந்து, ஏசா தேடின அல்லது மதித்திருந்த ஒரே சுதந்திரமான தன் தகப்பனுடைய செல்வத்தை, மூத்த சகோதரனுக்குக் விட்டுவிட்டிருந்தான். அதன் பின்பு அவர்கள் பொறாமையினாலோவெறுப்பினாலோமனம் வேறுபட்டிருக்க வில்லை . என்றாலும், அவர்கள் பிரிந்தார்கள். ஏசா சேயீர் மலைக் குப் பிரிந்து போனான். ஆசீர்வாதத்தில் ஐசுவரியமான தேவன், யாக்கோபிற்கு அவன் தேடின் மேலான நன்மையோடு கூட உலக செல்வத்தையும் கொடுத்திருந்தார். அந்த இரண்டு குமாரர்களின் செல்வம், அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று, அவர்களுடைய மந்தைகளினிமித்தமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. இந்தப் பிரிவு யாக்கோபைக் குறித்த தெய்வீக நோக்கத்திற்கு ஒத்ததாக இருந்தது. மத விசுவாசத்தில் இந்த சகோதரர்கள் மிக அதிகமாக வேறுபட்டிருந்ததால் அவர்கள் பிரிந்து வசிப்பது நன்மையாக இருந்தது .PPTam 241.4

    ஏசாவும் யாக்கோபும் ஒரேவிதமாக தேவனை அறியும் அறி வில் போதிக்கப்பட்டிருந்தார்கள். அவருடைய கற்பனைகளின்படி நடக்கவும், அவருடைய தயவைப் பெறவும் இருவரும் சுதந்திரராக இருந்தார்கள் ஆனால் அதைச் செய்யும்படி இருவரும் தெரிந்து கொள்ளவில்லை. இரண்டு சகோதரர்களும் வெவ்வேறு பாதை களில் நடந்தார்கள். அவர்களுடைய பாதைகள் அதிக அதிக விசா லமாக விரிவாக தொடர்ந்து பிரியும்.PPTam 242.1

    இரட்சிப்பின் ஆசீர்வாதங்களிலிருந்து ஏசா வெளியே அடைக் கப்பட்டது தேவன் நியாயமின்றி தெரிந்து கொண்டது அல்ல. கிறிஸ்துவின் மூலமாக வரும் கிருபையின் ஈவுகள் அனைவருக்கும் இலவசமாக இருக்கிறது. யாராகிலும் அழிய வேண்டியதிருந்தால், அது அவர்களுடைய சொந்த தெரிந்துகொள்ளுதலின்படியே இருக்கும். கிறிஸ்துவின் மேலிருக்கும் விசுவாசத்தினால் தம்முடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதையே ஒவ்வொரு ஆத்துமாவும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்படும் நிபந்தனையாக தேவன் தமது வார்த்தைகளில் வைத்திருக்கிறார். தேவன் தமது பிரமாணங்களுக்கு இசைவாக இருக்கிற குணத்தை தெரிந்தெடுக்கிறார். எவராயினும் அவர் எதிர்பார்க்கிற இந்தத் தரத்தை எட்டும்போது, மகிமையின் இராஜ்யத்திற்குள் நுழைவைப் பெறுவார்கள். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாத வனோஜீவனைக்காண்பதில்லையோவான் 3:36, பரலோகத்திலிருக் கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த் தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்தேயு 7:21) என்று கிறிஸ்துதாமே சொல்லியிருக்கிறார். வெளிப்படுத்துதலில் ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர் களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் (வெளி 22:14) என்கிறார். மனிதனுடைய இறுதி இரட்சிப்பைப் பொருத்தவரைவேதவார்த்தைகளினால் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிற ஒரே தேர்வு இதுதான்.PPTam 242.2

    தன்னுடைய இரட்சிப்பு நிறைவேற்பயத்தோடும் நடுக்கத்தோ டும் பிரயாசப்படுகிற ஒவ்வொரு ஆத்துமாவும் தேர்ந்தெடுக்கப்படு கிறது. சர்வாயுதவர்க்கத்தைத் தரித்து கொண்டு விசுவசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுகிறவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஜெபத்திலே விழித்திருந்து, வேதவாக்கியங்களை ஆராய்ந்து, சே பாதனைக்கு விலகி ஓடுகிறவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். தொடர்ச் சியாக விசுவாசித்து, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிகிறவன் தேர்ந்தெடுக்கப்படு கிறான். மீட்பின் ஏற்பாடு அனைவருக்கும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. அதன் நிபந்தனைகளோடு இணைந்து போகிறவர்களால் மீட்பின் விளைவுகள் மகிழ்ச்சியாக அனுபவிக்கப்படும். ஏசா உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அலட்சியம் பண்ணினான். அவன் ஆவிக்குரிய நன்மைகளுக்கு மேலாக தற்காலிக நன்மைகளை மதிப்பிட்டான். அவன் எதை வாஞ்சித்தானோ, அதைப் பெற்றுக்கொண்டான். அவனுடைய சொந்த விருப்பமான தெரிந்து கொள்ளுதலின்படி தேவனுடைய மக்களிடமிருந்து அவன் பிரிக் கப்பட்டான். யாக்கோபு விசுவாசத்தின் சுதந்திரவீதத்தைத் தெரிந்து கொண்டான். அதை தந்திரத்தினாலும் துரோகத்தினாலும் பொய்யினாலும் அடைய முயற்சித்தான். ஆனால், அவன் பாவம், அதற்கான திருத்தத்தை செய்யும்படி, தேவன் அனுமதித்தார். என்ற போதும், தன்னுடைய பின் நாட்களில் தான் அனுபவித்த எல்லா கசப்பான அனுபவங்களிலும் யாக்கோபு தன்னுடைய நோக்கத்திலிருந்து திசைதிரும்பவோ, அல்லது தன்னுடைய தெரிந்து கொள்ளு தலை விட்டுவிடவோ இல்லை. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி மனித திறமைகளுக்கும் ஞானத்திற்கும் திரும்புவது, தேவனுக்கு விரோதமாக தான் செய்யும் யுத்தம் என்பதை கற்றுக் கொண்டான். யாப்போக்கின் அருகே, அந்த போராட்டமான இரவி லிருந்து, யாக்கோபு வேறுபட்டவனாக வெளியே வந்தான். சுயநம்பிக்கை வேரோடு பிடுங்கப்பட்டது. அப்போதிருந்து, இள வயதிலிருந்த தந்திரங்கள் அவனிடம் காணப்படவில்லை . தந்திரங்களும் வஞ்சகங்களும் இருந்த இடத்தில் அவனுடைய வாழ்க்கை எளிமையாலும் சாத்தியத்தாலும் குறிக்கப்பட்டது. சர்வவல்ல வருடைய கரங்களை முழுமையாகச் சார்ந்து இருக்கும் பாடத்தை அவன்கற்றுக்கொண்டான். சோதனைகளிலும் உபத்திரவங்களிலும் தேவனுடைய சித்தத்திற்கு தாழ்மையாக பணிந்தான்.PPTam 243.1

    குணத்தின் கீழ்த்தரமான தனிமங்கள் அழிக்கப்பட்டன. யாக்கோபிலே ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் விசுவாசம் மங்காமல் காணப்படும் வரைக்கும் மெய்யான பொன் சுத்திகரிக்கப்பட்டது.PPTam 244.1

    யாக்கோபின் பாவமும், அதனால் பின்தொடர்ந்த சம்பவங்களும், அவனுடைய குமாரர்களுடைய குணத்திலும் வாழ்க்கையிலும் கசப்பான கனியை வெளிப்படுத்துகிற ஒரு தீமையான செல் வாக்கை ஏற்படுத்துவதில் தவறவில்லை. இந்த குமாரர்கள் வாலி பத்தையடைந்த அடைந்தபோது, மிகவும் தீவிரமான தவறுகளை விருத்தி செய்து கொண்டார்கள். வீட்டிலே பலதார மணங்களின் விளைவுகள் வெளிக்காட்டப்பட்டது. இந்த பயங்கரமான தீமை, அன்பின் ஊற்றை வற்றச் செய்கிறது. அதன் செல்வாக்கு மிகவும் பரிசுத்தமான பற்றுகளை பெலவீனப்படுத்துகிறது. அநேக தாய் மார்களின் பொறாமை குடும்ப உறவுகளை கசப்பாக்க, பிள்ளைகள் சண்டை போடுகிறவர்களாகவும், கட்டுப்பாட்டில் பொறுமை இழந்தவர்களாகவும் வளர, தகப்பனுடைய வாழ்க்கை வருத்தத் தாலும் வேதனையாலும் இருண்டு போனது.PPTam 244.2

    ஆனால் குணத்திலே மிகவும் வேறுபட்டிருந்த ஒருவன் ராகே லின் மூத்த குமாரன் யோசேப்பு, மனம் மற்றும் இருதயத்தினுடைய உள்ளான அழகை பிரதிபலிக்கிறதாக காணப்படும் மிகவும் அபூர்வமான தனிப்பட்ட அழகைக் கொண்டிருந்தான். தூய்மையான சுறுசுறுப்பான மகிழ்ச்சியான இந்த வாலிபன், சன்மார்க்க உண்மைக்கும் உறுதிக்குங்கூட சான்று கொடுத்தான். அவன் தன் தகப்பனுடைய அறிவுரைகளுக்கு செவிகொடுத்திருந்து, தேவனுக் குக் கீழ்ப்படிவதை நேசித்திருந்தான். மென்மையும் நேர்மையும் உண்மையுமான, பின்நாட்களில் எகிப்திலே இவனைவேறுபடுத்திக் காண்பித்த குணங்கள் ஏற்கனவே அவனுடைய அனுதின் வாழ்க்கையில் வெளிக்காட்டப்பட்டிருந்தன. அவனுடைய தாய் மரித்திருந்ததால், அவனுடைய பாவங்கள் அவனுடைய தகப்ப னோடு மிக நெருக்கமாக இருந்தது. யாக்கோபினுடைய இருதயம் அவனுடைய வயதான காலத்தில் பிறந்த இந்தக் குழந்தையோடு கட்டப்பட்டிருந்தது. அவன் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்தான்.PPTam 244.3

    இந்தப் பாசம் கூட, பிரச்சனைக்கும் வருத்தத்திற்கும் காரண மாயிற்று. யாக்கோபுஞானமில்லாமல் யோசேப்பிற்கு முன்னுரி மையை வெளிக்காட்டியது, மற்ற குமாரரின் பொறாமையைத் தூண்டிவிட்டது. யோசேப்பு தன்னுடைய சகோதரர்களின் தீய குணங்களைக் கண்டபோது மிகவும் கலங்கினான். அவர்களை ஆட்சேபிக்க மென்மையாக முயன்றான். ஆனால் அது இன்னும் அதிக வெறுப்பையும் எதிர்ப்பையுமே தூண்டியது. அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறதை அவன் காணக்கூடா திருந்தான். தகப்பனுடைய அதிகாரம் அவர்களைச் சீர்திருத்தும் என்று நம்பி, இந்தக் காரியத்தை தகப்பன் முன் வைத்தான்.PPTam 245.1

    கடினமாயிருப்பதாலோ அல்லது உக்கிரத்தைக் காண்பிப்ப தாலோ அவர்களுடைய கோபத்தைத் தூண்டி விடக்கூடாது என்ப தில் யாக்கோபு கவனமாயிருந்தான். ஆழ்ந்த உணர்வுகளோடு தன் பிள்ளைகள் மேல் இருக்கிற அக்கறையை அவன் விவரித்து, தன்னுடைய முதிர்ந்த வயதிற்கு மதிப்பு கொடுக்கும்படியும், தன் பேரில் நிந்தனையை கொண்டுவராதிருக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாதிருப் பதினால் அவருக்கு அவமரியாதையை கொண்டுவராதிருக்கவும் மன்றாடினான். தங்களுடைய துன்மார்க்கம் அறியவந்ததினால் அவமானப்பட்டவர்களாக, அந்த வாலிபர்கள் மனம் வருந்தியது போல் காட்டினர். ஆனால், இந்த வெளிப்படுத்துதலினால் இன்னும் கசப்படைந்த தங்களுடைய உண்மையான உணர்வுகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தனர்.PPTam 245.2

    பொதுவாக உயர்ந்த கனத்தில் இருக்கிறவர்கள் உடுத்துகிற விலையுயர்ந்த அங்கி அல்லது மேலாடையை, யோசேப்பிற்கு தகப்பன் நியாயமின்றி பரிசாக அளித்தது, அவனுடைய பட்சபாதத் திற்கான மற்றொரு சான்றாக தோன்ற, மூத்த குமாரர்களைத் தாண்டி, ராகேலின் மகன் மீது அவன் சேஷ்ட புத்திரபாகத்தை வைத்துவிடுவான் என்கிற சந்தேகத்தையும் எழுப்பிற்று. அவர்களுடைய தீமை செய்யும் எண்ணம் ஒருநாள் அந்தப் பையன் தன்னுடைய சொப்பனத்தைக் குறித்து சொன்ன போது, மேலும் அதிகமானது. நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம் அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.PPTam 245.3

    நீ எங்கள் மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று அவன் சகோதரர்கள் பொறாமையான கோபத்தோடு கேட்டார்கள். கொஞ்ச காலத்தில் அதே அர்த்த முடைய மற்றொரு சொப்பனத்தையும் கண்டு அதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினான். சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். இந்த சொப்பனமும் முதல் சொப்பனத்தைப்போலவே உடனே அர்த்தப்படுத்தப்பட்டது. அங்கே இருந்த தகப்பனாரும். நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். தன்னுடைய வார்த்தைகளில் கடுமை இருந்த போதும், யோசேப்பிற்கு ஆண்டவர் எதிர்காலத்தை வெளிப்படுத்துகிறார் என்று யாக்கோபு நம்பினான்.PPTam 246.1

    அந்த வாலிபன் தன் சகோதரர்கள் முன் நின்றபோது, அவ னுடைய முகம் ஆவியின் ஏவுதலினால் பிரகாசமடைந்தது. அவனைப் போற்றுவதை அவர்கள் நிறுத்தக் கூடாதிருந்தது. என்றாலும், தங்களுடைய தீமையான வழிகளை விட்டு விட அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. கூடவே அவர்களுடைய பாவங்களைக் கடிந்து கொண்ட தூய்மையை வெறுக்கவும் செய்தார்கள். காயீனை செயல்பட தூண்டி விட்ட அதே ஆவி அவர்களுடைய இருதயங்களில் எரிந்து கொண்டிருந்தது.PPTam 246.2

    யோசேப்பின் சகோதர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு மேய்ச்சலைக் காணும்படி இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய திருந்தனர். எனவே பல வேளைகளில் அவர்கள் தொடர்ச்சியாக சில மாதங்கள் வீட்டிலே இருக்கமாட்டார்கள். இந்தச் சம்பவங்கள் நடந்த பின்னர் அவர்கள் தங்களுடைய தகப்பன் சீகேமில் விலைக்கு வாங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். சில காலம் கடந்தது. அவர்களிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை . சீகேமியர்களுக்கு அவர்கள் முதலில் செய்திருந்த கொடுமையினிமித்தம், அவர்களுடைய பாதுகாப்பைக்குறித்து தகப்பன் பயப்படத் துவங்கினான். எனவே அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுடைய நலத்தைக் குறித்த செய்திகளைக் கொண்டுவர யோசேப்பை அவன் அனுப்பினான். யோசேப்பைக் குறித்த அவர்களுடைய உண்மையான உணர்வுகளை யாக்கோபு அறிந்திருப்பானானால், அவனை தனிமையாக அவர்களிடத்தில் விட்டிருக்கமாட்டான். ஆனால், அவர்கள் இதை மிக கவனமாக மறைத்திருந்தனர்.PPTam 246.3

    மகிழ்ச்சியான இருதயத்தோடு யோசேப்பு தன் தகப்பனிட மிருந்து பிரிந்து சென்றான். அந்த வயதான மனிதனாவது, இந்த வாலிபனாவது அவர்கள் மறுபடியும் சந்திப்பதற்கு முன்பாக என்ன நடக்கப்போகிறது என்பதை சிறிதும் கற்பனை செய்திருக்கவில்லை. தன்னுடைய நீண்ட தனிமையான பிரயாணத்திற்குப்பிறகு யோசேப்பு சீகேமுக்கு வந்தான். அங்கே அவனுடைய சகோதரர் களும் அவர்களுடைய மந்தைகளும் காணப்படவில்லை. அவர்களைக் குறித்து விசாரித்தபோது, தோத்தானுக்கு வழிநடத்தப்பட்டான். ஏற்கனவே அவன் ஐம்பது மைல்களுக்கும் அதிகமாக பிரயாணித்திருக்கிறான். இப்போது இன்னும் பதினைந்து மைல்கள் அவன் முன் இருந்தது. என்றாலும், தன் தகப்பனுடைய வியா குலத்திலிருந்து அவரை விடுவிக்கும் எண்ணத்தில், தன்னுடைய தளர்வை மறந்தவனாக விரைந்து சென்றான். அவர்களுடைய தயவற்ற நடத்தையையும் மீறி, அவர்களை இன்னமும் நேசித் திருந்த அவன், தன் சகோதரர்களைச் சந்தித்தான்.PPTam 247.1

    அவனுடைய சகோதரர்கள் அவன் நெருங்கி வருகிறதைக் கண்டனர். ஆனால் அவர்களைச் சந்திக்கும்படியாக அவன் செய்த நீண்ட பிரயாணத்தையாவது அல்லது இளைப்பையாவது பசி யையாவது அவர்களுடைய உபசரிப்பிலும் அன்பிலும் அவனுக்கிருந்த உரிமையையாவது அவர்களுடைய இருதயத்தின் கசப்பை இளகச் செய்யவில்லை. தங்கள் தகப்பனுடைய அன்பின் அடையாளமான அந்த அங்கி, அவர்களை வெறியால் நிரப்பிற்று. இதோ, சொப்பனக்காரன் வருகிறான் என்று பரியாசமாகச் செ ரன்னார்கள். அதிக காலம் இரகசியமாக காத்திருந்த பொறாமையும் பழிவாங்குதலும் அவர்களை இப்போது கட்டுப்படுத்தியது. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள், அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப் போம் என்றார்கள்.PPTam 247.2

    ரூபன் இல்லாதிருந்தால் அவர்கள் தங்களுடைய நோக்கத்தை செயல்படுத்தியிருப்பார்கள். தன் சகோதரனை கொலை செய்வதில் பங்கு பெற துணியாமல், அவனை காப்பாற்றி தகப்பனிடத்திற்கு கொண்டுவரும் இரகசிய எண்ணத்தோடு, யோசேப்பு ஒரு குழியில் உயிரோடே போடப்படட்டும் என்றும், அங்கேயே சாகும்படி விட்டுவிடப்படட்டும் என்றும் ஆலோசனை கூறினான். இந்தத் திட்டத்திற்கு அனைவரையும் இணங்கச் செய்தபின் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்றும், தன்னுடைய உண்மையான நோக்கம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமோ என்றும் பயந்து, ரூபன் அந்தக் கூட்டத்தை விட்டுச் சென்றான்.PPTam 247.3

    யோசேப்பு ஆபத்தை எதிர்பாராதவனாக, தன்னுடைய நீண்ட தேடுதலின் நோக்கம் நிறைவேறியது என்கிற மகிழ்ச்சியில் வந்து சேர்ந்தான். ஆனால் எதிர்பார்த்த வாழ்த்துதலுக்குப் பதிலாக, அவன் சந்தித்த கோபமான பழிவாங்கும் பார்வைகளினால் திகி லடைந்தான். அவன் பிடிக்கப்பட்டு, அவனுடைய அங்கி அவனிட மிருந்து கழற்றப்பட்டது. நிந்தைகளும் அச்சுறுத்துதல்களும் மரண நோக்கத்தை வெளிக்காட்டியது. அவனுடைய மன்றாட்டுகள் கேட்கப்படாமல் போயிற்று. பைத்தியமாகியிருந்த அந்த மனிதரின் வல்லமைக்குள் அவன் முழுவதுமாக இருந்தான். ஆழமான குழிக்குள் அவனை முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று உள்ளே தள்ளி, தப்பிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு, பசியினால் அழியும்படி அவனை விட்டுவிட்டு, அவர்கள் போஜனஞ் செய்யும்படி உட்கார்ந்தார்கள்.PPTam 248.1

    ஆனால் சிலர் நிம்மதியாக இல்லை. தங்களுடைய பழிவாங் கும் செயல் வழியாக எதிர்பார்த்திருந்த திருப்தியை அவர்கள் உணரவில்லை. விரைவில் ஒரு கூட்டமான பயணிகள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அது யோர்தானுக்கு அப்புறத்திலிருந்து, வாசனைப்பொருட்களோடும் மற்ற பொருட் களோடும் எகிப்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த இஸ்மவே லரின் கூண்டு வண்டிகள். மரிக்கும்படி தங்களை சகோதரனை அங்கே விடுவதற்குப் பதிலாக இந்த அந்நிய வியாபாரிகளிடம் விற்றுவிடுவதைக் குறித்து யூதா ஆலோசனை கூறினான். அவன் அவர்களுடைய வழியிலிருந்து முடிவாக அகற்றப்படுவதோடு, அவர்களும் அவனுடைய இரத்தத்தைக்குறித்து குற்றமற்றிருப் பார்கள் அவன் நம்முடைய சகோதரனும், நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். இந்த ஆலோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். யோசேப்பு தீவிரமாக குழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான்.PPTam 248.2

    வியாபாரிகளை கண்டபோது, பயங்கரமான உண்மை அவ னுக்குப் புரியவந்தது. ஒரு அடிமையாக இருப்பதென்பது மரணத் தைக் காட்டிலும் அதிகம் பயப்பட வேண்டிய ஒரு முடிவு . பயத்தின் வேதனையில் தன்னுடைய சகோதரர்களிடம் ஒருவன்பின் ஒரு வரிடமாக வீணாகவே அவன் மன்றாடினான். சிலர் பரிதாபத்தினால் அசைக்கப்பட்டார்கள். ஆனால் ஏளனம் செய்யப்படுவோம் என்கிற பயம் அவர்களை மெளனமாக்கிற்று. தாங்கள் திரும்பி வரக்கூடாத தூரம் சென்றுவிட்டதாக அனைவரும் உணர்ந்தார்கள். யோசேப்பு விட்டுவிடப்படுவானானால், சந்தேகத்திற்கிடமின்றி தன் தகப்பனிடம் இவைகளை அறிவிப்பான். அவர், தன்னுடைய விருப்பமான மகனுக்குச் செய்யப்பட்ட கொடுமையை காணாதவர் போல இருக்கமாட்டார். அவனுடைய மன்றாட்டுகளுக்கு எதிராக தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தி, அந்த அந்நிய வியாபாரிகளின் கைகளில் அவனை ஒப்புக்கொடுத்தனர். கூண்டு வண்டிகள் பார்வையை விட்டு விரைவாக நகரத்துவங்கின.PPTam 248.3

    ரூபன் குழியினிடத்திற்குத் திரும்பி வந்தான். ஆனால் யோசேப்பு அங்கே இல்லை. அபாய அறிவிப்போடும் தன்னை நிந்தித்தவனாகவும் தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு தன் சகோதரர்களைத் தேடி இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்று புலம்பினான். யோசேப்பினுடைய முடிவைக் குறித்து கேள்விப்பட்டபோது, அவனை மீண்டும் கொண்டுவருவது இப்போது சாத்தியமல்ல என்று அறிந்து, ரூபனும் இந்த குற்றத்தை மறைக்கும் முயற்சியில் மற்றவர்களோடு சேர்ந்து கொள்ள தூண்டப் பட்டான். ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்று யோசேப்பின் அங் கியை அதன் இரத்தத்தில் தோய்த்து, அதைத் தங்கள் தகப்பனிடம் கொண்டு சென்று அதை வயல்களில் கண்டுபிடித்ததாகவும், அது தங்கள் சகோதரனுடைய அங்கி என்று பயப்படுவதாகவும் செ ரன்னார்கள். இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும். இந்த காட்சியை பயத்தோடு அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். என்றாலும், அவர்கள் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருந்த வருத்தத்தின் முழுமைக்கும் இருதயத்தை கிழிக்கும் வேதனைக்கும் அவர்கள் ஆயத்தமாக இல்லை. இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் யாக்கோபு புலம்பினான். அவனுடைய குமாரர்களும் குமாரத்தி களும் அவனை ஆறுதல் படுத்த வீணாகவே முயற்சித்தார்கள். தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக்கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்கா கத்துக்கித்துக்கொண்டிருந்தான். காலம் அவனுடைய வருத்தத்தை எவ்விதத்திலும் குறைக்கவில்லை. நான் துக்கத்தோடே என் குமார னிடத்தில் பாதாளத்தில் இறங்கு வேன் என்பது அவனுடைய விரக் தியான அழுகையாக இருந்தது. தாங்கள் செய்ததைக் குறித்து திகைத்தவர்களாக, அதே நேரம் தகப்பனுடைய நிந்தனைக்கும் பயந்தவர்களாக அந்த வாலிப மனிதர்கள் தங்களுடைய குற்றத் தைக்குறித்த அறிவை தங்கள் இருதயங்களில் இன்னும் மறைத்து வைத்திருந்தனர். அது அவர் களுக்கும் மிகப் பெரியதாகத் தோன்றியது .PPTam 249.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents