Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    முன்னேற்றம் மட்டிடப்படவில்லை

    கிறிஸ்தவன் அடைய வேண்டுமென்று தேவன் அவனுக்குக் குறிப்பிட்டிருக்கும் திட்டத்தை அடைவதற்கு அவன் படும் பிரயாசங்களில் யாதோன்றைப் பற்றியும் அவன் சோர்வடைய வேண் டியதில்லை. கிறிஸ்துவின் கிருபையினாலும் வல்லமையினாலும் குண சம்பத்து சகலருக்கும் வாக்களிக்கப் பட்டிருக்கின்றது. இயேசு வல்லமைக்கும் ஜீவனுக்கும் ஊற்றியிருக்கிறார். அவர் நம்மைத் தமது வார்த்தையினிடம் கொண்டுவந்து பாவ நோய்ப்பட்ட ஆத்துமாக்களின் ஆரோக்கியத்திற்கான ஜீவ விருட்ச இலைகளை நமக்குத் தருகிறார். அவர் நம்மைத் தேவனுடைய சிங்காசனத்திற்குக் கூட்டிச் சென்று, நமது வாயில் ஓர் ஜெபத்தைப் போட்டு அதின் மூலமாய் அவர் நம்மைத் தம்மோடு ஐக்கியப் படுத்துகிறார். நமது னிமித்தம் அவர் பரலோகத்திலுள்ள சர்வ வல்லமையுள்ள தூதாட்களை ஏவல் கொள்கிறார். ஒவ்வொரு அடிச் சுவட்டிலும் உயிருள்ள அவருடைய வல்லமையை நாம் தொடுகிறோம். “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய வேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட” விரும்புகிறவர்களின் முன்னேற்றத்தை தேவன் மட்டிடவிலை. ஜெபத்தின் மூலமாயும், விழிப்பின் மூலமாயும், அறிவிலும் விவேகத்திலும் வளருகிற வளர்ச்சியின் மூலமாயும் அவர்கள் மகிமையான அவருடைய வல்லமையின் படி எல்லா வல்லமையிலும் பலப்படுத்தப்பட வேண்டியவர் களாயிருக்கிறார்கள். இவ்விதம் அவர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த மாக்கப்பட்ட நராத்துமாக்கள் அவருக்கு உதவியாட்களாய் இருக்க வேண்டுமென்பது இரட்சகரின் நோக்கம். --- A. A. 478.LST 163.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents