Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பத்தொன்பதாம் அத்தியாயம்—இடுக்கமான வழியாய் பிரயாணம் போதல்

    நான் 1868 ஆகஸ்டில் மிசிகனில் உள்ள பாற்றில் கிரீக்கில் இருக்கையில் பெருங் கூட்டமான ஜனங்கலோடிருப்பதாகச் சொப்பனம் கண்டேன். இக்கூட்டத்தில் ஒரு பாகம் தகுந்த ஆயத்தத்துடன் பயணப் பட்டது.. அதிக பாரம் ஏற்றின வண்டிகள் எங்களிடம் இருந்தன. போகப் போக ராசத எற்றமாய்த் தெரிந்தது. இந்த ராச்தாவின் ஓர் பக்கம் செங்குத்தான கேபயாய் இருந்தது. அடுத்த பக்கத்தில் உயரமான வழுக்குள்ள வெள்ளைச் சுவர் இருந்தது.LST 90.1

    போகப் போக ரஸ்தா இடுக்கமாயும் செங்குதாயும் இருந்தது. சில இடங்களில் பார வண்டிகளுடன் செல்லக் கூடாத படிக்கு அது அவ்வளவு இடுக்கமாய் காணப்பட்டது. பிறகு நாங்கள் அவைகளைக் கட்டவிழ்த்து வண்டியில் இர்ருந்த சாமான்களில் சிலவற்றை எடுத்துக் குத்ஹிரைகளின் மேல் ஏற்றிக் கொண்டு அவைகளின் மேலேரஈப் பிரயாணம் போனோம்.LST 90.2

    பின்னும் போகப் போக பாதை அதிக நெருக்கமாகவே இருந்தது. இடுக்கமான வழியை விட்டுக் கீழே செங்குத்தான கேபிக்குள் தவறி விழுந்து விடாத படிக்கு நாங்கள் சுவரை ஒட்டிக் கொண்டு போக வேண்டியதாய் இருந்து. அப்போது குதிரைகளின் மேலிருந்த சாமான் மூட்டைகள் சுவரின் மேல் பட்டு நாங்கள் கெபிக்குள்சாயும்படி செய்தது. அதானல் நாங்கள் கெபிக்குள் விழுந்து பாறைகளின் மேல் மோதி சின்ன பின்னமாய் போவோம் என்று நடுங்கினோம். பிறகு நாங்கள் குதிரைகளின் மேலிருந்த சாமான் மூட்டைகளை அறுத்தோம். அவைகள் கீழே கெபிக்குள் விழுந்தன. நாங்கள் பின்னும் குதிரையின் மேலேறிச் செல்கையில் நெருக்கமான இடங்களில் வரும்போது நிதானம் தப்பி விழுந்து விடுவோம் என்று மிகவும் பயந்தோம். அப்படிப்பட்ட சமயங்களில் ஓர் கரம் கடிவாளத்தை பிடித்து அந்த மோசமான வழியில் எங்களை நடத்திச் செல்வதாகக் காணப்பட்டது.LST 90.3

    பாதை போகப் போக பின்னும் அதிக நெருக்கமாய்த் தோன்றவே, நாம் இனி குதிரையின் மேல் பத்திரமாய்ப் போக முடியா தென்று தீர்மானித்து, குதிரைகளை விட்டிறங்கி ஒருவர் பின் ஒருவராய் அடி மேல் அடி வைத்து நடந்து சென்றோம். இவ்விடத்தில் அந்த சுத்த வெண்மையான சுவர் மேலிருந்து சிறு கயிறுகள் கீழே தொங்கவிடப் பட்டிருந்தன. பாதையில் நாங்கள் அசையாமல் போவதற்கு இவைகளை ஆவலைப் பிடித்துக் கொண்டோம். நாங்கள் போக போக கயரும் எங்களோடு கூட வந்தது. பாதை கடைசியாக அவ்வளவு அத்ஹிக நெருக்கமாய் இருந்தபடியினால் நாம் பாத இரட்ச்ஹைகளை கலைந்து விட்டு அதிக பத்திரமாய் பிரயாணம் செய்யலாம் என்று தீர்மானித்தோம். ஆகவே நாங்கள் அவைகளை களைந்து விட்டு மே ஜோட்டுடன் கொஞ்ச தூரம் போனோம். பினுபு சீக்கிரத்தில் மெ ஜோடில்லாமலே வெகு பத்திரமாய் போகக் கூடும் என்று தீர்மானித்து அவைகளையும் நீக்கி விட்டு வெறும் காலோடு பிரயாணம் பண்ணினோம்.LST 90.4

    பிறகு நாங்கள் கஷ்ட நஷ்டங்கள் இன்னதென்று அறியாதிருந்தோரைப் பற்றிய் யோசித்தோம். அப்படிப்பட்டவார்கள் இப்பொழுது எங்க போனார்கள்? அவர்கள் அக்கூட்டத்தில் இல்லை. கஷ்டமான ஒவ்வொரு திருப்பிலும் சிலர் பின் அடைந்தனர். அனால் கஷ்டங்களை சகித்து அனுபோக பட்டவர்கள் மாத்திரம் நிலைதிருன்தனர். வழ்ஹியில் ஏற்பட்ட கஷ்டங்கள் தான் இவர்களை முடிவு மட்டும் இன்னும் ஆவலுடன் முன்னேறிச் செல்லும்படி செய்தன.LST 91.1

    வழியை விட்டு தவறி விடும் ஆஅது வர வர அதிகரித்தது. வெள்ளை சுவரை ஒட்டிக் கொண்டிருந்தாலும் பாதை மேல் எங்கள பாதங்களை பூரணமாய் வைக்க முடியாதிருந்தது. ஏனெனில் அது அவ்வளவு நெருக்கமாய் இருந்தது. பிறகு நாங்கள் கயிறுகளை பிடியது தொங்கிக் கொண்டு “பரத்தின் பிடி அகப்பட்டது. பரத்தின் பிடி அகப்பட்டது” என்று கூவினோம். இடுக்கமான பாதையில் இருந்த கூட்டத்தில் உள்ள அனைவரும் அதே வார்த்தைகளை சொன்னார்கள்.LST 91.2

    கீழே கெபியிலிருந்து வந்ததாய் தோன்றின கொண்டாட்டமான எக்களிப்பின் சத்தங்களை நாங்கள் கேட்ட போது திகில் அடைந்தோம். தூஷணமான ஆணையையும் இழிவான பரிகாசத்தையும் கேவலமான் நீசப் பாட்டுகளையும் நாங்கள் கேட்டோம். யுத்தப் பாட்டையும் களி ஆட்டப் பாட்டையும் நாங்கள் கேட்டோம். சாபமும் வேதனையும் உள்ள கூக்குரலும் கொடிய புலம்பலும் கலந்த அட்டகாசங்களையும் கீத வாத்திய ராகங்களில் நாங்கள் கேட்டோம். நாங்களோ ஆதிக கஷ்டமான பதை வழியாய் செல்வதற்கு முன்னை விட அதிக ஆதிரமுள்ளவாகளாய் இருந்தோம். வெகு நேரம் கயிறுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் படி கட்டாயப் படுத்தப் பட்டோம்.. நாங்க தொங்க தொங்க கயிறுகள் பெரிதாயின..LST 91.3

    அந்த அழகான வெள்ளை சுவர் இரத்ததினால் கறைப்பட்டு போனதை நான் கவனித்தேன். அச்சுவர் அவ்விதம் கறைப்பட்டதை பார்க்க எனக்கு விசனம் உண்டாயிற்று. எங்கிலும் விசனம் க்ஷனபொழுதில் மாரித்ரூ. ஏனெனில் சீக்கிரத்தில் அச்சுவர் எல்லாம் அங்ஙனம் தா இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.பின் வருகிறவர்கள் தங்களுக்கு முன்னால் கஷ்டமானதும் நெருக்கமானதுமான பாதைல் மற்றவர்கள் பொய் இருக்கிறார்கள் என்பதை அறீந்து கொள்வதுடன் மற்றவர்கள் அவ்வழியாய் முன்னேறி போயிருக்க கூடுமானால் தாங்களும் அப்படியே முன்னேறி செல்லக் கூடும் என்று தீர்மானித்து கொள்ளுவார்கள். அன்றியும் நோவுள்ள அவர்களின் பாதங்களில் இருந்து ரத்தம் பீறிப் பாயும் போது அவர்கள் அதைரியப் பட்டு சோர்வடைந்து போகாமல் சுவாரின் மேல் பட்டிருக்கும் இரத்தத்தைகண்டு மற்றவர்களும் அப்படியே வேதனை அடைந்திருக்கிறார்கள் எட்ன்று அறிந்து கொள்வார்கள்.LST 92.1

    கடைசியாக நாங்கள் ஒரு பெரும் பிளப்புக்கு எதிர் வந்தோம்.அவ்விடத்தில் எங்கள் பாதை முடீவு அடைந்தது. அங்கே எங்கள் பாதங்களுக்கு துணையோ அவைகளுக்கு ஆதாரமோ ஒன்றும் கிடையாது. நாங்கள் முழுவதும் அக்கயிருகளின் பேரிலேயே சார்ந்திருக்க வேண்டும். அவைகள் வர வர எங்கள் சாரீரங்கள் அவ்வாழ்வு பருமன் ஆயின. இங்கே எங்களுக்கு சற்று நேரம் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாயிற்று. “கயிறு எதோடு சேர்த்து கட்டப்பட்டு இருக்கிறது?” என்று ஒருவரை ஒருவர் பயத்துடான் ரகசியமாய் வினவினோம். என் புருஷன் எனக்கு சற்று முன்னால் தான் இருந்தார். அவருடைய புருவத்தில் இருந்து வியர்வையின் பெருந்துளிகள் விழுந்தன. அவரின் கழுத்திலும் நெற்றியிலும் உள்ள நரம்புகள் இரு மடங்கு அதிக பருமனாகி பின்பு தணிந்தன. அவருடைய உதடுகளில் இருந்து வ்யாகூலத்தின் பேரு மூசுகள் புறப்பட்டன. என் முகத்திலிருந்து வியர்வை சொட்டு சொட்தாய் வடிந்ததது. நான் முன் ஒருபோதும் அடையாத அவ்வளவு வேதனை அடைந்தேன். எங்கள் முன் ஒரு பயங்கர போராட்டம் இருந்தது. நாங்கள் பிரயாணத்தில் பட்ட கச்ஷ்டங்கள் எல்லாம் வீணை போகும் படி இங்கே தவறி போக வேண்டுமோ LST 92.2