Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மூன்றாம் அத்தியாயம்—வருகையின் தூதில் களிகூர்தல்

    1842-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மிஸ்டர் மில்லர் போர்ட்லாந்தில் இரண்டாவது தொடர் பிரசங்கஞ் செய்தார். இந்த உபந்நியாசங்களுக்குப் போவதை எனக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியமென எண்ணினேன், ஏனெனில் நான் அதைரியங்களுக்கிடங் கொடுத்து விழுந்து பொய் இருந்தேன். என் இரட்சகரை நான் சந்திக்க ஆயத்தத்துடன் இருந்ததை எண்ணவில்லை. முந்தினதை விட இந்த இரண்டாம் தொடர் பிரசங்கம் நகரத்தில் அதிக பரபரப்பை உண்டாக்கிற்று. அவருடைய கூட்டங்களுக்கு ஜனங்கள் ஆவலுடன் கூடினார்கள்; அநேகர் வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருந்தது. ஜனங்கள் வேகும் அமைதியையும் கவனமாயுமிருந்தார்கள்.LST 17.6

    நான் கூட்டங்களுக்கு ஐக்கடி போனேன்; இயேசு வானத்தின் மேகங்கள் மேல் சீக்கிரம் வருவாரென்றும் நம்பினேன்; மேலும் அவரைச் செந்திக்க ஆயத்தப்பட்டிருப்பதே என் பெரிய கவலை. இருதய சுத்தியைப் பற்றிய விஷயமாகவே நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் இப்பெரிய ஆசிர்வாதத்தை அடையவும் தேவ என்னை முழுதுமாய் ஏற்றுக் கொண்டார் என்னும் நிச்சயத்தோடிருக்கவுமே நான் ஆசித்தேன்.LST 18.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents