Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பரிசுத்த ஆவியானவர் ஆதி முதல் கிரியைசெய்து வருகிறார்

    விழுந்துபோன இனத்தினருக்காக தம் நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு மனித ஏதுகரங்களைப் பரிசுத்த ஆவியானவர் மூலம் ஆட்கொண்டு ஆதிமுதல் தேவன் கிரியை செய்துவருகிறார். கோத்திரப்பிதாக்களின் வாழ்க்கையில் இது வெளிப்பட்டது. மோசேயின் காலத்தில் வனாந்தரத்திலிருந்த சபையில் ‘அவர்களுக்கு அறிவை உணர்த்த தம்முடைய நல்ல ஆவியைக் கொடுத்தார். அப்போஸ்தலர்களுடைய நாட்களில் பரிசுத்த ஆவியானவருடைய துணையோடே தம் சபைக்காக அவர் வல்லமையாகச் செயல்பட்டார். கோத்திரப்பிதாக்களைத் தாங்கி நடத்திய, காலே புக்கும் யோசுவாவுக்கும் விசுவாசமும் தைரியமும் கொடுத்தது போல, அப்போஸ்தலச் சபையின் ஊழியத்தைப் பயனுள்ளதாக்கினார். அதே வல்லமை பின்வரும் ஒவ்வொரு காலத்திலும் தேவனுடைய உண்மைப் பிள்ளைகளைத் தூக்கி நிறுத்தியது. இருண்ட காலங்களில் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையால்தான் வால்தேனியக் கிறிஸ்தவர்கள் சீர்திருத்தத்திற்கான வழியை ஆயத்தப்படுத்த உதவினார்கள். இதே வல்லமைதான் நவீன ஊழியப்பணிகளை நிறுவுவதற்கு முன்னோடிகளாக வழியமைத்த ஆண்கள்-பெண்களின் முயற்சிகளை வெற்றியடையச் செய்தது; மேலும் அனைத்து நாடுகளின் மொழிகளிலும் பேச்சுவழக்கு பாஷைகளிலும் வேதாகமத்தை மொழிபெயர்க்க உதவியது. 2AA, 53TamChS 335.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents