Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்தவச் சேவை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிக்குரிய பெலவீன நிலை

    தேவமக்கள்மேல் பெருக்கமான வெளிச்சம் வீசப்பட்டுள்ளது. ஆனால், அநேகர் அந்த வெளிச்சத்தைப்பின்பற்றாமல் இருக்கிறார்கள். அதனால், மிகப்பெரிய ஆவிக்குரிய பெலவீனம் காணப்படுகிறது. தேவமக்கள் இப்போது அறிவில்லாமையால் மடிந்துகொண்டிருக்கவில்லை. வழியும் சத்தியமும் ஜீவனுமானவரை அறியாததால் அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. தாங்கள் அறிந்துகொள்ளும்படி கிடைத்த சத்தியத்தையும், ஆத்துமாமேல் வீசப்பட்ட வெளிச்சத்தையும் புறக்கணித்தது அல்லது நிராகரித்ததுதான் அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும். வெளிச்சத்தையே பெறாதவர்கள் ஆக்கினைக்குள்ளாவதில்லை. தேவனுடைய திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத வேறு எதைச் செய்யவேண்டியுள்ளது? வெளிச்சம், விலையேறப்பெற்ற வெளிச்சம் தேவமக்கள் மேல் வீசுகிறது; ஆனால் அது அவர்களை இரட்சிக்காது; ஆனால், அந்த வெளிச்சத்தால் இரட்சிக்கப்பட அவர்கள் சம்மதிக்கவேண்டும். அதன்படி முற்றிலும் வாழவேண்டும். இருளிலுள்ளோருக்கு அதைப் பிரகாசிக்கவேண்டும். 12T, p 123TamChS 56.3