Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்தமடையாத ஊழியக்காரர்கள் களைபிடுங்கப்படுவார்கள்

    நமக்கு மிக அருகிலிருக்கின்ற மாபெரும் பிரச்சனை, (ஞாயிறு ஆசரிப்புச் சட்ட வலியுறுத்தல்) தேவன் நியமிக்காத அனைவரையும் களைந்து நீக்கிப்போடும். அதற்குப் பின்பாக, பின்மாரியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாயிருக்கின்ற தூய்மையான, உண்மையான, பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு ஊழியத்தை தேவன் பெற்றிருப்பார். — 3SM 385 (1886).கச 130.1

    சாத்தானுடைய மிகவும் மோசமான தீவட்டியிலிருந்து தூண்டப் பெற்றதான, பொய்யான தீர்க்கதரிசன தீவட்டியைத் தங்கள் கரங்களில் பிடித்தவர்களாக அநேகர் நமது பிரசங்க மேடைகளில் நிற்பார்கள்..கச 130.2

    இனி ஒருபோதும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்லாத சிலர் நம் மத்தியிலிருந்து வெளியேறிவிடுவார்கள். ஆனால், சத்தியம் பரவுவகைத் தடுக்கும்வண்ணம் இவர்களால் சுவர்களை எழுப்ப முடியாது. ஏனெனில், சத்தியம் முடிவுபரியந்தமும் முன்னோக்கியும், மேல்நோக்கியும் சென்றுகொண்டே இருக்கும். —TM 409, 411 (1898).கச 130.3

    வேதவாக்கியம் சொல்லுகின்றபடியும், தமது ஊழியக்காரிக்கு (எலன் உவைட்) தேவன் அளித்துள்ள தூதுகள் அறிவிக்கின்றபடியும். அநேக ஊழியக்காரர்களும் மருத்துவர்களும், விசுவாசத்தைவிட்டு விலகிப்போகக்கூடும். — 7MR 192 (1906).கச 130.4