Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒரு கள்ளத்தீர்க்கதரிசியுடன் ஏற்பட்ட அனுபவம்

    கடந்த இரவில் எங்கள் அனைவருக்கும் அறிமுகம் இல்லாத ஒரு இளம் வாலிபன், (ஆஸ்திரேலியாவிலுள்ள) விக்டோரியா என்ற இடத்திலிருந்து வருவதாகக் கூறிக்கொண்டு, சகோதரி உவைட் அவர்களைக் காணவேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டான். அது ஒரு மாலை நேரமாக இருந்தது. எனவே அவனைக் காண நான் மறுத்துவிட்டேன். ஆயினும், அன்று இரவு எங்களோடு தங்கவும், பிற்பாடு காலை உணவை உட்கொள்ளவும், அவனை நாங்கள் அழைப்பித்தோம். எங்களது வழக்கமான காலை ஆராதனைக்குப் பிறகு, எங்களுடைய பல்வேறுபட்ட அலுவல்களுக்குக் கடந்துபோக முற்பட்ட சமயத்தில், இந்த இளம் வாலிபன் எழுந்து நின்று, கட்டளைத் தோரணையுடன், எங்களை உட்காரும்படி கேட்டுக்கொண்டான். “உங்களிடம் ஏதாவது பாடல் புத்தகம் இருக்கின்றதா? நாம் ஒரு பாடலைப் பாடுவோம். பிறகு நான் ஒரு செய்தியை உங்களுக்குக் கொடுக்கவிருக்கின்றேன்” என்று கூறினான். “உன்னிடம் ஒரு செய்தி இருக்குமானால் அதைத் தாமதமின்றிக் கொடு. எங்களுக்கு வேறு ஒரு அவசர வேலை இருப்பதனால் இழப்பதற்கு நேரமில்லை” என்று நான் கூறினேன். அப்போது அவன், தான் எழுதியிருந்த மற்ற காரியங்களுக்கு மத்தியில், உயிரோடிருக்கின்றவர்கள் மீதான நியாயத்தீர்ப்பு தற்போது துவங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருந்ததை அவன் வாசித்தான்...கச 14.2

    அவன் சொல்லச் சொல்ல நான் கவனித்தேன். கடைசியாக: “என் சகோதரனே, நீ சரியான மனநிலையில் இல்லை. உன்னுடைய செய்தி எவ்வாறு எங்களுக்கு ஏற்றதாக இருக்கின்றது என்பதைத் தெளிவாகக் கூறு. தயவுசெய்து, உடனே எங்களுக்குத் தெரியப்படுத்து. உன் மனம் பதற்றத்தில் இருக்கின்றது. உன் வேலையை நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய். நீ கூறியவற்றில் அநேகக் காரியங்கள் வேதத்தோடு இசைந்திருக்கின்றன. அதின் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். ஆயினும், நீ மட்டுமீறிய உற்சாகத்தில் இருக்கின்றாய். எங்களுக்காக நீ என்ன வைத்திருக்கின்றாய் என்பதை தயவுசெய்து கூறு” என்று நான் கூறினேன்.கச 14.3

    நல்லது, நம் உடமைகளைக் கட்டிக்கொண்டு, உடனே பேட்டில் கிரீக்கிற்கு நாம் செல்ல வேண்டும் என்று அவன் கூறினான். அதற்கான காரணங்களை அவனிடம் நான் கேட்டேன். “உயிரோடிருக்கின்றவர்கள் மீதான நியாயத்தீர்ப்பு துவங்கிவிட்டது என்ற இந்தத் தூதினைக் கொடுப் பதற்காக” என்று அவன் பதிலளித்தான். “நாங்கள் செய்யும்படியாக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கின்ற வேலை இன்னும் முடிவடையவில்லை. இங்கு எங்கள் வேலை இன்னும் முடிவடையும்போது, எங்கள் கர்த்தர் எங்களுக்குத் தெரியப்படுத்துவார் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்திக்கின்றோம்” என்று நான் அவனுக்குப் பதிலளித்தேன்... சகோதரர் ஸ்டார் அவனோடு மேற்கொண்டு பேசட்டும் என்று விட்டுவிட்டு, எனது எழுத்துப்பணியைத் தொடருவதற்காக நான் சென்றுவிட்டேன்.கச 14.4

    சகோதரி உவைட், தன்னிடம் மிகவும் கனிவோடும், அதே சமயத்தில் அத்தனை அதிகாரத்தோடும் பேசியபோதுதான், தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், தன்னை மிகவும் பலமாய் அசைத்திருந்த கருத்துக்கள், நிலையற்றவையாகவும், அவன் சகோதரர் ஸ்டாரிடம் கூறினான். பத்து அங்கத்தினர்கள் மட்டுமல்லாமல், அத்துடன் மூன்று விருந்தினர்களையும் கொண்ட பெரிய குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தபோதிலும், இந்த இளம் வாலிபன் சிலகாலம் எங்களுடன் தங்கட்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். கடினமாய் நடத்தி, குற்றப்படுத்திவிடக்கூடிய ஜனங்களோடு அவனை அனுப்பிவிட நாங்கள் துணியவிலை; தனது “வெளிப்பாடுகளை” அவன் திரும்பத்திரும்ப எடுத்துக்கூறுவதை நாங்கள் விரும்பவுமில்லை. அவனோடு பழகி, கூடுமானால் அவனை பாதுகாப்பான நிச்சயமான வழிகளில் நடத்துவதற்காக, சில காலம் அவனை எங்களுடன் தங்கவைத்துக்கொள்ளலாம் என்று முடிவு தெய்தோம். - Letter 66, 1894.கச 15.1