Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தங்களது விசுவாசத்திற்காக சிலர் சிறைபடுத்தப்படுவர்

    கர்த்தருடைய ஓய்வுநாளை பரிசுத்தக குலைச்சலாக்க மறுப்பதினாலே, சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். — PC118 (1907).கச 109.3

    சத்தியத்தின் பாதுகாவலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒயவுநாளைக் கனப்படுத்த மறுக்கும்போது, அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள்; சிலர் நடுகடத்தப்படுவார்கள். மானிட ஞானத்துக்கு, இவையனைத்தும் இப்போது நடக்கக்கூடியது அல்ல என்று தோன்றும். ஆனால், இப்போது அனைத்தையும் தடைசெய்துகொண்டிருக்கின்ற தேவ ஆவியானவர் மனிதர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும்போது, அவர்கள் தெய்வீகக் கோட்பாடுகளை வெறுக்கின்ற சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழாக இருப்பார்கள். அப்போது, விநோதமான முன்னேற்றங்கள் அங்கு இருக்கும். தேவனுக்குப் பயப்படும் பயமும், அவர்மேல் இருக்கின்ற அன்பும் நீக்கப்படும்போது, இருதயம் மிகவும் கொடூரமானதாக மாறும். — GC608 (1911).கச 109.4

    கிறிஸ்துவினிமித்தம் உபத்திரவப்படும்படி நாம் அழைக்கப்படும் பொழுது, ஒரு சிறு குழந்தை தனது பெற்றோரை நம்புவதுபோல, நாம் ஆண்டவரில் நம்பிக்கைக்கொண்டிருந்து, சிறைக்குச் செல்வதற்கும் ஆயத்தம் உள்ளவர்களாயிருப்போம். நாம் தேவனிடத்தில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள இதுவே சரியான நேரமாகும். — OHC357 (1892).கச 109.5