Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தான் தெய்வமாக்கப்படுவான்

    இந்த யுகத்தில் அந்திக் கிறிஸ்து உண்மையான கிறிஸ்துவைப் போலவே தோற்றமளிப்பான். அப்போது நமது உலகத்திலுள்ள தேசங்களிலே, தேவனுடைய பிரமாணம் முழுவதுமாக ஒன்றுமில்லாததாக ஆக்கப்படும். தேவனுடைய பரிசுத்தப் பிரமாணத்திற்கு விரோதமான கலகம். முழுமையான உச்சநிலைக்கு வரும். ஆனால், இந்தக் கலகத்திற்கெல்லாம் உண்மையான தலைவன், ஒளியின் தூதனுடைய ஒரு வேஷத்தைத் தரித்திருக்கின்ற சாத்தானே உயர்த்தி, அவனைத் தெய்வமாக்குவார்கள். ஆனால் சர்வ வல்லமையுள்ளவர் அப்போது குறுக்கிடுவார். சாத்தானை உயர்த்திப்பிடிக்கத்தக்கதாக ஒன்றுகூடிக் கொண்ட மருளவிழுந்த அனைத்து சபைகள்மீதும், “ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளில் வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்” (வெளி. 18:8) என்ற தீர்ப்பு கூறப்படும். — TM 62 (1893).கச 122.4

    நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கும்போது, சாத்தானின் ஏதுகரங்கள் அடிமட்டத்தினின்று எழும்புகின்றன. சாத்தான் ஒரு மனிதனைப்போலத் தோன்றுவது மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்துவைப்போலவும் தோன்றுவான். அப்போது சத்தியத்தை ஏற்க மறுத்த உலகம், அவனை ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் ஏற்றுக்கொள்ளும். 5BC 1105, 1106 (1900).கச 122.5