Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கடைசிகாலச் சம்பவங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இருதயத்தில் உண்மையுள்ளோர் நீண்டகாலம் தயக்கம் காட்டுவதில்லை

    நல்லவர்கள் அநேகர் தங்களது நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கான காரியத்தை இப்பொழுது காணாதிருக்கின்றனர். ஆனால் இக்காரியங்கள் அவர்களது ஜீவியங்களில் செல்வாக்கினை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். இந்தத் தூது உரத்த சத்தத்துடன் செல்லும்போது. அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தமாய் இருப்பார்கள். நீண்ட காலத்திற்கு அவர்கள் தயக்கங்காட்டமாட்டார்கள்; அவர்கள் வெளியே வந்து, தங்களது நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளுவார்கள். — Ev 300, 301 (1890).கச 154.1

    பூமியின்மீது குடியிருக்கின்ற அனைவர்மீதும், கடைசி சோதனை வெகுசீக்கிரமாக வர இருக்கின்றது. அந்நேரத்திலே செயல்புரிவதற்கு ஆயத்தமான தீரிமானங்கள் எடுக்கப்படும். வேத வார்த்தைகளைக் கேட்டு மனந்திரும்புகின்ற அனைவரும், தாங்களாகவே இம்மானுவேலாகிய இளவரசரின் இரத்தக்கறைபடிந்த கொடியின் கீழாக அணிவகுத்து வந்தடைவார்கள். - 9T 149 (1909).கச 154.2

    உண்மையும் நேர்மையுமான ஆத்துமா ஒவ்வொன்றும் சத்திய ஒளியினிடத்திற்கு வந்தடையும். — GC 522 (1911).கச 154.3

    தேவ ஆவியானவரின் ஆழமான உணர்த்துதலாலேயே தூது கொண்டுசெல்லப்படுமே ஒழிய, அதிகமான வாக்குவாதத்தினால் அல்ல. வாக்குவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. விதை விதைக் கப்பட்டிருக்கின்றது; இப்போது அது முளைத்தெழும்பி கனிகளைக் கொடுக்கும். மிஷனெரி ஊழியம் செய்தவர்களால் விநியோகிக்கப்பட்ட புத்தகங்கள் தங்களது மேலையை செய்திருந்தபோதும், அதனால் உணர்த்தப்பட்ட அநேக மனங்கள் சத்தியத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்வதிலிருந்தும் அல்லது அதற்குக் கீழ்ப்படிய ஒப்புக் கொடுப்பதிலிருந்தும் தடுக்கப்படிருந்தன. வெளிச்சத்தின் ஒளிக் கதிர்கள் தற்போது எல்லா இடத்திலும் ஊடுருவிச் சென்று, சத்தியம் அதனுடைய தெளிவில் காணப்படுகின்றது. தேவனுடைய நேர்மையான பிள்ளைகள், தங்களைக் கட்டியிருந்த கயிறுகளைஅறுத்தெறிந்து அதிலிருந்து விடுபடுவார்கள். குடும்ப பந்தங்கள் மற்றும் சபை பிணைப்புகளெல்லாம் இப்பொழுது அவர்களைப் பிடித்துவைக்க வல்லமையற்றதாகிவிட்டன. மற்ற எல்லாவற்றைவிடவும் சத்தியம் அவர்களுக்கு விலையுயர்ந்ததாயிருக்கும். சத்தியத்திற்கெதிரான சக்திகள் ஒன்றுதிரண்டிருந்தாலும்கூட, ஒரு திரள்கூட்டமான ஜனங்கள் கர்த்தரின் பக்கமாகத் தங்களது நிலைப்பாட்டைத் தெரிந்தெடுப்பார்கள். — GC 612 (1911).கச 154.4