Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வீடுவீடாகச் சென்று போதித்தல்! , ஏப்ரல் 6

    “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி…..” - அப்போஸ்தலர் 20:20.Mar 191.1

    நமது சபை அங்கத்தினர்களுக்கு மத்தியிலே, வீடுவீடாகச் சென்று அச்சடித்த பிரதிகளைக் கொடுத்து, வேத பாடங்கள் கொடுக்கும் ஊழியமானது அதிகமாக இருக்கவேண்டும்….எல்லா தண்ணீர்களுக்கும் அருகிலும் நாம் விதைக்கும்பொழுது, “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” என்ற காரியத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.Mar 191.2

    கிறிஸ்துவின் பிள்ளைகளென்று உரிமைபாராட்டிக் கொண்டிருப்பவர்களால், கிறிஸ்துவின் முன்மாதிரி பின்பற்றப்படவேண்டும். உங்களது சக மனிதர்களுடைய சரீர சம்பந்தமான தேவைகளை நிறைவேற்றுங்கள்; அப்பொழுது, அவர்களது நன்றி உணர்வானது தடைகளை உடைத்து, அவர்கள் இதயத்தைச் சென்றடைய உங்களுக்கு உதவிசெய்யும்…பெண்களும் மற்றும் ஆண்களும் இந்த வேலையில் ஈடுபடலாம்…உள்ளான அவர்களது ஜீவியத்தைச் சென்றடையக்கூடிய ஒரு வேலை, அதாவது ஆண்களால் செய்யக்கூடாத ஒரு வேலையை, இவர்கள் இணைந்து குடும்பங்களிலே செய்யக்கூடும். ஆண்களால் சென்றடையமுடியாத இதயங்களுக்கு அருகிலே இவர்கள் (பெண்கள்) வரமுடியும். பெண்கல் செய்கின்ற வேலை அவசியமாக இருக்கின்றது. காலமறிந்து செயலாற்றுகின்ற தாழ்மையான பெண்கள், மக்களை அவர்களது வீடுகளிலே சந்தித்து, சத்தியத்தை விளக்கிகூறுகின்ற ஒரு நல்ல வேலையைச் செய்யமுடியும். தேவனுடைய வார்த்தையானது இவ்வாறு விளக்கப்படும்பொழுது, புளிப்பேற்றும் பணியாகிய, ஊடுருவி உள்ளிருந்து செய்யும் அதின் வேலையைச் செய்யமுடியும்…. அனைத்துக் குடும்பங்களும் மனமாற்றத்தை அடையும்.Mar 191.3

    குடும்பத்தினரிடையே, உங்களது அண்டை வீட்டுக்காரரின் கணப்படுப்பிற்கருகே, பிணியாளியின் படுக்கைக்குப் பக்கத்திலே ஒரு அமைதியான முறையில் வேதவாக்கியங்கிளை நீங்கள் வாசித்து, இயேசுவிற்காகவும் சத்தியத்திற்காகவும் ஒரு வார்த்தை பேசலாம். அருமையான விதைகள் முளைத்தெழும்பி, பலன் கொடுக்குமாறு இவ்வாறு விதைக்கப்படலாம்.Mar 192.1

    வாய்ப்பு நம்பிக்கையற்ற அநேக இடங்களில், எந்த வழி முறைகளில் வேலைசெய்யவேண்டும் என்ற எண்னமே, நமக்கு இல்லாதிருந்ததோ, எந்த வகுப்பாருக்காக வேலைசெய்யவேண்டும் என்று நாம் திட்டமிடவில்லையோ, அந்த வகுப்பாரை நாம் சென்றடையத்தக்கதாக, இறைப்பணியின் ஆவி நம்முடைய ஆத்துமாக்களை இறுகப்பற்றி ஊக்குவிக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. சுவிசேஷ விதை விதைக்கத்தக்கதாக, ஆண்டவருக்கு அவரது திட்டம் உண்டு. அவரது சித்தத்திற்கேற்ப விதைக்கும் பொழுது, அந்த விதையை நாம் ஏராளமாகப் பெருகப் செய்வோம்; இவ்வாறு, அவரது வார்த்தை, சத்தியத்தை ஒருபோதும் கேட்டிராத அநேகமாயிரம்பேரைச் சென்றடையலாம்.Mar 192.2

    கிறிஸ்துவின் வருகைக்கு ஒரு மக்கள் கூட்டம் ஆயத்தமாக்கப் படத்தக்கதாக, தேவன் அபரிமிதமாகக் கொடுத்திருக்கின்ற வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக, நமது சபைம் அங்கத்தினர்களோடு சேர்ந்து பணிபுரிய ஆயிரம், பதினாயிரமாக தேவதூதர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.Mar 192.3

    நமது சகோதரிகள், வாலிபர்கள், நடுவயதினர் மற்றும் வயது முதிந்தோர் உலகம் முடிவடையும் தருவாயில் இருக்கும் இந்தக் காலத்திற்கான பணியில் ஒரு பங்கை வகிக்கலாம். சந்தர்ப்பம் வருகிறபொழுது, இதைச் செய்வதின்மூலமாக தங்களுக்காக மிகவும் உயர்ந்த மதிப்புடைய அனுபவத்தைப் பெற்றுக் கொள்வார்கள். சுயத்தை மறந்த அந்த நிலையில்தான், அவர்கள் கிருபையிலே வளருவார்கள்.⋆Mar 192.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 192.5

    “…ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.” - யோவான் 12:26. Mar 192.6