Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய போராட்டம் நமக்கு முன்பாக இருக்கிறது!, மே 3

    “...மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குத் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. ”- அப்போஸ்தலர் 5:29.Mar 245.1

    ஒரு மாபெரும் நெருக்கடி நேரம் தேவனுடைய மக்களுக்காகக் காத்திருக்கிறது. இந்த உலகத்திற்கு ஒரு இக்கட்டான நிலை காத்துக்கொண்டிருக்கிறது. யுகங்கள் அனைத்திற்குமாக மாபெரும் விளைவுகளை உண்டாக்கவல்ல ஒரு போராட்டம் நமக்கு முன்பாக இருக்கிறது...நாடு முழுவதற்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த-ஆர்வத்தை எழுப்பக்கூடிய- ஞாயிறு ஆசரிப்பை நடை முறைப்படுத்தக்கூடிய-கடுஞ்சிக்கலான காரியம் ஒன்றிருக்கிறது. இந்த விளைவு, என்னவாயிருக்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம்; ஆனால், இக்காரியத்திற்காக நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? மக்களுக்குமுன்பாக இருக்கும் ஆபத்தைக்குறித்த எச்சரிப்பைக் கொடுப்பதற்காக, தேவன் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கின்ற அந்தக் கடைமையை நாம் உத்தமமாக நிறைவேற்றி இருக்கிறமா?...Mar 245.2

    வேதாகம ஓய்வுநாள்தான் (Sabbath) மெய்யான ஓய்வுநாள் என்று உரிமைகோரத் தெரியாமலும், அதை விளங்கிக்கொள்ளாமலும், ஒரு பொய்யான அடித்தளத்தின்மீது ஞாயிறு ஆசரிப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளாமலும் அநேகர் இருக்கின்றனர். மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டத்திற்கும் ஆதரவாக எந்த இயக்கம் ஏற்பட்டாலும், அது உண்மையிலேயே பாப்பானவரின் ஆதிக்கத்திற்காகக் காட்டப்பட்ட சலுகையின் செயலாகவே இருக்கம். பாப்பானவரின் இந்த அதிகாரமானது, மனசாட்சியின் சுதந்திரத்திற்கு எதிராக, நீண்டகாலம் உறுதியோடு போரிட்டுவந்திருக்கிறது. ஞாயிறு ஆசரிப்பானது நிலைபெற்று, ஒரு கிறிஸ்தவ அமைப்பாக அழைக்கப்படுவதற்கு, அக்காரியமானது, ” அக்கிரமத்தின் இரகசியத்திற்கு” கடமைப்பட்டிருக்கிறது. ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றால், அதின் பொருள் ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகளின் மூலைக்கல்லாக இருக்கும் கொள்கைகள், நடைமுறையில் மெய்யாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். நமது நாடு (U.S.A) ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக, தனது அரசாங்கத்தின் கொள்கைகளை விட்டுவிடும்பொழுது, புரோட்டஸ்டாண்டு மார்க்கமானது, அந்தச் செயலிலே பாப்பு மார்க்கத்தோடு கரங்களை இணைத்துக்கொள்ளும். நீண்ட காலமாக ஆர்வத்தோடு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதாவெனக் காத்திருந்த கொடுமைக்கு உயிர்கொடுத்து, அது தன்னிச்சையாக ஆளுகைசெய்வதற்கு, மீண்டும் குதித்து எழும்பச் செய்கிறது என்று சொல்வதைத்தவிர வேறு எதுவுமில்லை…Mar 245.3

    பாப்புவின் அதிகாரம் அல்லது அதின் கொள்கைகள் அதிகாரம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக சட்டம் இயற்றுப்படுமானால், யார் பிரபலமான பிழைகளுக்காக சத்தியத்தையும் மனச்சாட்சியையும் தியாகஞ்செய்யமலிருப்பார்களோ, அவர்களுக்கு எதிராக உபத்திரவத்தின் நெருப்புகள், மீண்டும் தூண்டிவிடப்படும். இந்தத்தீமையானது நடைமுறைக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. Mar 246.1

    நமக்கு முன்பாக இருக்கும் ஆபத்துகளைக் கட்டத்தக்கதான வெளிச்சத்தை தேவன் கொடுத்திருக்கும்போது, அதை மக்களுக்கு முன்பாகக் கொண்டுவரத்தக்கதாக நமது சக்தியைப் பயன்படுத்தி, அனைத்து முயற்சிகளையும் செய்யாமல், நாம் அலட்சியஞ் செய்வோமானால், நாம் அவருடைய பார்வையிலே குற்றமற்ற நிலையில் எப்படி நிற்கமுடியும்? மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தத்தக்க இந்தக் காரியத்தைக்குறித்து எச்சரிக்காமல் விட்டுவிடுவதில் நாம் நிம்மதியோடிருக்க முடியுமா?... Mar 246.2

    இந்த பூமியை ஆளுகைசெய்பவர்களால் கொண்டுவரப்படும் சட்டங்கள், அண்டசராசர்த்தின் ஆளுநரான மகாதேவனின் சட்டங்களுக்கு, எதிராகக் கொண்டுவரப்படும்பொழுது, தேவனுடைய விசுவாசமுள்ள குடிமக்கள் அவருக்கு உண்மையாக இருப்பார்கள்.⋆Mar 246.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 246.4

    “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” - ஏசாயா 41:10.Mar 246.5