Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீதிமான்களுக்காக கிரீடங்கள் ஆயத்தஞ்செய்யப்படுகின்றன!, அக்டோபர் 28

    “நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவரும் அதைத் தந்தருளுவார்.” - 2 தீமோத்தேயு 4:7,8.Mar 601.1

    ஆண்டவர் தமது சம்பத்தை சேர்க்கும்பொழுது, உண்மையான-நேர்மையான-கபடமில்லாத பிள்ளைகளை மகிழ்ச்சியோடு நோக்கிப்பார்ப்பார். அப்படிப்பட்டவர்களுக்காக கிரீடங்களை உண்டாக்கும்படி தூதர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கிரீடங்களை, தேவனுடைய சிங்காசனத்திலிருந்து வருகிற ஒளி பிரதிபலிக்கும்.Mar 601.2

    பரலோகக் காரியங்களைக்குறித்துப் பேசுங்கள்; இயேசுவைக் குறித்துப் பேசுங்கள்; அவருடைய இனிமையான பண்பு, மகிமை, உங்கள்மேல் அவர் வைத்திருக்கின்ற வற்றாத அன்பு இவைகளைக்குறித்துப் பேசுங்கள். உங்களை இரட்சிப்பதற்காக மரித்த அவரிடத்தில், நன்றியோடும் அன்போடும் உங்களது இதயங்கள் பொங்கிவழியட்டும். அங்கள் ஆண்டவரை சமாதானத்துடன் சந்திக்க ஆயத்தமாகுங்கள். ஆயத்தமாயிருக்கிறவர்கள், வாடாத ஜீவ கிரீடத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் தேவனுடைய இராஜ்யத்திலே, கிறிஸ்துவோடும், அவருடைய தூதர்களோடும் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்க்கப்பட்டவர்களோடும் நித்திய காலமாக வாழுவார்கள்.Mar 601.3

    மீட்பரின் வருகைக்காககாத்திருக்கின்ற-அவரை நேசிக்கின்ற-அவருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற-நமக்கு ஒரு மகிமையின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவருக்காக காத்திருக்கிறவர்கள் மட்டுமே மகிமையினாலும், கனத்தினாலும், சாவாமையினாலும் முடிசூட்டப்படுவார்கள். இந்த உலகத்தின் மேன்மைகளைக் குறித்தோ அல்லது இவ்வுலகத்தின் மாபெரும் மனிதர்களின் பெருமைகளைக் குறித்தோ நீங்கள் பேசவேண்டிய அவசியமில்லை. இவையனைத்தும் மாயையே. ஆண்டவருடைய விரல் மாத்திரம் அவர்கள்மேல் பட்டாலே அவர்கள் மண்ணுக்குப் போய்விடுவார்கள். என்றென்றும் நிலைக்கிற கனத்தையே நான் விரும்புகிறேன். ஒருபோதும் அழிந்துபோகாத கனத்தையே-ஒருபோதும் அழியாமையுள்ள கனத்தையே-நிலைத்து நிற்கும் கனத்தையே-நான் வாஞ்சிக்கிறேன். இவ்வுலக இராஜாக்களுடைய சிரசுகளை அலங்கரித்த எந்த ஒரு கிரீடத்தைக் காட்டிலும், உயர்ந்த-விலைமதிப்புள்ள கிரீடத்தையே நான் விரும்புகிறேன்.Mar 601.4

    அந்நாளிலே மீட்க்கப்பட்டவர்கள் பிதாவின் மகிமையோடும், அவரது குமாரனின் மகிமையோடும் ஜொலிப்பார்கள். வானதூதர்களும், கிறிஸ்துவிற்காக உறுதியாக நின்று ஜெயித்தவர்களும், ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தங்கள் வஸ்திரங்களைத் தோத்தவர்களும் ஏகமாய் நின்று, தாங்கள் பொன் சுரமண்டலங்களை மீட்டி, இராஜாவை வரவேற்பார்கள். ஒரு வெற்றியன் கீதம் பாடப்பட்டு, பரலோகம் முழுவதையும் நிறைக்கும். கிறிஸ்து வெற்றி சிறந்தார்; அவருடைய வேதனைகளும் தியாகபலியும் வீணாகவில்லை என்பதற்க்கன சாட்ச்சிகளான மீட்க்கப்பட்டவர்களோடுங்கூட கிறிஸ்து பரலோக மன்றங்களில் பிரவேசிக்கிறார்.⋆Mar 602.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 602.2

    “பந்தயத்திற்க்கு போராடுகிற யாவரும் எல்லாவற்றிலயும் இசையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.” - 1 கொரிந்தியர் 9:25Mar 602.3