Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒரு உறுதியான அடித்தளம்! , ஏப்ரல் 29

    “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது: கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவவென்பதும், அதற்கு முத்திரையயிருக்கிறது.” - 2 தீமோத்தேயு 2:19.Mar 237.1

    எஃகைப்போன்று நேர்மையில் உண்மையாக இருக்கின்ற, கருங்கல் பாறையைப் போன்று விசுவாசத்தில் திடஉறுதியோடு இருக்கின்ற, ஒரு மக்கள் கூட்டம் ஆண்டவருக்காக இருக்கும். அவார்கள் உலகத்திலே அவரது சாட்சிகளாகவும், அவரது ஆயத்த நாளிற்காக-ஒரு மகிமையான-ஒரு சிறப்பான-வேலையைச் செய்வதற்கு அவரது உபகரணங்களாகவும் இருப்பர்கள்.Mar 237.2

    சத்தியத்தை ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் பிரசங்கித்த போதகர்கள் வழிவிலகி, சமயக் கொள்கைகளைக் கைவிட்டு, சத்துருவின் அணியிலே சேர்ந்துகொள்ளக்கூடும். இக்காரியமானது, சத்தியத்தைப் பொய்யாக மாற்றிவிடுமா? “ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது” என்று பவுலார் கூறுகின்றார் -2 தீமோத்தேயு 2:19. மனிதர்களின் உணர்வுகளும், விசுவாசமும் மாறலாம்; தேவனுடைய சத்தியம் ஒருபோதும் மாறாது. Mar 237.3

    தேவன் உயிரோடிருக்கிறார் என்ற காரியமானது எவ்வளவு நிச்சயமானதோ, அதைப்போன்று நம்மிடம் சத்தியம் இருக்கின்றது என்பதும் நிச்சயமானது. சாத்தான் தனது அனைத்து தந்திரங்களாலும், கொடிய, பயங்கர வல்லமையினாலும் தேவனுடைய சத்தியத்தை ஒரு பொய்யாக மாற்றமுடியாது. மாபெரும் பகைவனான சாத்தான், தேவனுடைய வார்த்தையைப் பயனற்றதாக்கிப் போடுவதற்கு தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்வான்; ஆனால், எரிந்துகொண்டிருகின்ற ஒரு விளக்கைப்போன்று, சத்தியம் எடுத்துக்கொண்டு செல்லப்பட வேண்டும்.Mar 237.4

    ஆண்டவர் நம்மைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெளியே கொண்டுவந்து, அவரது அற்புதமான இரக்கத்தின் குடிமக்களாக மாற்றியிருக்கிறார். சமயக் கோட்பாடுகளுக்கு கட்டுப்படாதவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான பேச்சைக்கேட்டு, நாம் மயங்கி விடுவோமா? சாத்தானோடும், அவனது சேனையோடும் நிற்பதை நாம் தெரிந்துகொள்வோமா? தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறவர்களோடு நாம் இணைந்துகொள்வோமா? ஆண்டவரே, எனக்கும் சாத்தானுக்குமிடையே பகையை உண்டாக்கும் என்பதே நமது உறுதியான ஜெபமாக இருக்கட்டும். அவனது இருளின் கிரியைகளின்பேரில் நாம் பகையோடிறாவிடில், அவன் வல்லமையோடு நம்மை மடக்கி, வளைத்துவிடுவான். எந்தக் கணத்திலும் நமது இதயத்திற்குள் செலுத்தத்தக்கதாக, அவனது கொடுக்கானது ஆயத்தமாக இருக்கிறது. அவனை ஒரு நச்சுத் தன்மையுள்ள பகைவனாக நாம் கணித்துவைத்திருக்க வேண்டும்; கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் அவனை எதிர்க்க வேண்டும். மேலும் முன்னேறிச் செல்வதே நமது வேலையாகும்... கிறிஸ்துவின் பெயரைக் கூறுகின்ற அனைவரும் நீதியின் ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளவேண்டும்; இப்பொழுது, நாம் எதை விசுவாசிக்கிறோமோ, அதை ஏன் விசுவாசிக்கிறோம் என்று காரியத்தை நமக்கு நாமே தெரிந்துகொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது... நித்திய வாழ்வை நாம் பற்றிக்கொள்ளத்தக்கதாக-வரப்போகும் காலங்களுக்கு எதிராக-ஒரு நல்ல அடித்தளத்தை நமக்காக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். நாம் ஊழியஞ்செய்ய வேண்டும்; நம்முடைய சொந்த சக்தியினால் அல்ல, உயிர்த்தெழுந்த நம்முடைய ஆண்டவரின் சக்தியினால், ஊழியஞ்செய்ய வேண்டும். இயேசுவிற்காகத் துணிந்து செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும்? ⋆Mar 237.5

    வாக்குத்தத்த வசனம்: Mar 238.1

    “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” - 1 பேதுரு 2:9.Mar 238.2