Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புரொட்டஸ்டாண்டுகளாலும் கத்தோலிக்கர்களாலும் கொடுக்கப்படும் உபத்திரவங்கள்!, ஜூலை 5

    “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.” - மத்தேயு 10:22.Mar 371.1

    நாம் உபத்திரவத்தைச் சகிக்கமுடியாது என்று நினைப்பதற்கு அவசியமில்லை. நாம் பயங்கரமான காலங்களைக் கடந்துசெல்ல வேண்டியதிருக்கும்.Mar 371.2

    ரோமன் கத்தோலிக்க சபை புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தை (முன்பு) உபத்திரவப்படுத்தியது. அதன் விளைவாக, இயேசு கிறிஸ்துவின் மார்க்கம் ஏறக்குறைய நிர்மூலமாகிவிட்டது; ஆனால், பாப்பு மார்க்கமும், புரொட்டஸ்டாண்டு மார்க்கமும் இணைந்து செயல்படும்பொழுது, எதிர்ப்பு மேலும் அதிகமாக — கடுமையாக இருக்கும்.Mar 371.3

    தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும் மக்கள் மிகவும் கடுஞ்சோதனையான நிலையில் வைக்கப்படுவார்கள்; ஆனால், வெளிச்சத்திலே நடந்தவர்கள், வெளிச்சத்தைப் பரப்பியவர்கள் அவர்கள் சார்பிலே தேவன் குறுக்கிடுவதை தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அனைத்துமே மிகவும் அச்சுறுத்துவதைப்போன்று தோற்றங்கொடுத்தாலும், ஆண்டவர் தம்மிடம் உத்தமமாக இருப்பவர்களுக்குத் தமது வல்லமையை வெளிப்படுத்துவார். எந்த நாட்டின்மீது தேவன் தமது வல்லமையின் கேடகத்தை விரித்துப் பிடித்திருக்கிறாரோ, அந்த நாடு புரொட்டஸ்டாண்டு கொள்கைகளை ஒதுக்கித்தள்ளும்பொழுது, தனது சட்டசபையின் முலமாக, மார்க்க சம்பந்தமான சுதந்தரத்தை வரையறைக்குள் கொண்டுவந்து, ரோமன் கத்தோலிக்கருக்கு முகங்கொடுத்து ஒத்துழைக்கும்பொழுது, ஆண்டவர் தமக்கு உண்மையாக இருக்கிற மக்களுக்கு, தமது வல்லமையின்மூலமாகச் செயல்படுவார். ரோமாபுரியின் கொடுங்கோலாட்சி நடைமுறைப்படுத்தப்படும்; ஆனால், கிறிஸ்துவே நமது அடைக்கலாமாக இருப்பார்.Mar 371.4

    அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப் பெரிய சபைகள், தங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற முக்கியக் கொள்கையின் மூலமாக, இணைந்து கொள்ளும்பொழுது, தங்களது நிறுவன அமைப்புகளைக் காப்பாற்றத்தக்கதாக, தங்களது சட்டங்களை, செயற்படுத்தும்படி, தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தும். இவ்வாறு புரொட்டஸ்டாண்டு அமெரிக்கா, ரோமாபுரியின் ஆட்சி அமைப்பிற்கு ஒரு சொரூபத்தை உருவாக்கிவிடும். அதை மறுத்து நிற்பவர்களுக்கு, அரசாங்கம் தண்டனைகள் வழங்குவது, தவிர்க்கமுடியாத விளைவாக இருக்கும்.Mar 372.1

    பாப்பதிகாரமானது, இழந்துபோய்விட்ட மேலாண்மையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் என்றூம், புரொட்டஸ்டாண்டு உலகம் என்ற பெயரால், தன்னை அழைத்துக்கொண்டிருக்கும் வல்லமையானது, நேரத்திற்கு ஏற்றபடி நோக்கம் நிறைவேற சலுகைகாட்டி, அதன்மூலமாக உபத்திரவத்தின் நெருப்புகளை மீண்டும் தூண்டிவிடும். இந்த ஆபத்தின் நேரத்திலே, நம்மிடம் சத்தியமும் தேவனுடைய வல்லமையும் இருப்பதினால்மாத்திரமே நாம் நிற்கமுடியும்… தனி மனிதனுக்குரிய ஆபத்திலும் துன்பத்திலும் கொண்டு வரப்பட்டு விடுவோமோ என்ற எதிர்பார்த்தலினால், உங்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்த் தேவையில்லை; அதற்குப்பதிலாக, தேவனுடைய மக்களுடைய ஆற்றலும் நம்பிக்கையும் ஊக்கமடைய வேண்டும். அவர்களது ஆபத்தின் நேரமே, அவர்களுக்குத் தமது வல்லமையின் தெளிவான வெளிப்படுத்தல்களை வழங்கும் தேவனுடைய நேரமாகும்!⋆Mar 372.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 372.3

    “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” - 1பேதுரு 2:9.Mar 372.4