Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வஞ்சிப்பதிலே ஆவிமார்க்கத்தின் பங்கு!, ஜூன் 7

    “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” - 1 யோவான் 4:1.Mar 315.1

    ஆவிமார்க்கமானது வெறும் மானிட வஞ்சகம் தான் என்ற நம்பிக்கையின்மூலமாக, அநேகர் கண்ணியில் அகப்படுகிறார்கள். இந்த வெளிப்பாடுகள் நேருக்கு நேராகக் கொண்டுவரப்படும் பொழுது, அவைகளை தெய்வீக ஆற்றல் என்று கருதுவதைத் தவிர, வேறு எதையும் அவர்கள் நினைப்பது இல்லை. இவர்கள் ஏமாற்றப்படுவார்கள். அதை ‘தேவனின் மாபெரும் வல்லமை’ என்று ஏற்றுக்கொள்ளும்படி வழிநடத்தப்படுவார்கள்.Mar 315.2

    ஆவிமார்க்கத்தின் போதனைகள் சபைகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மாம்ச சம்பந்தமுள்ள இதயத்தின்மீது ஒப்படைக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. இதுவும் மார்க்கந்தான் என்று சொல்லிக்கொள்ளும் நிலையானது, கீழ்த்தரமான அக்கிரமத்தை மறைக்கின்ற ஒரு உடையைப்போலாகின்றது. ஆவிமார்க்கதின் வெளிப்பாடுகள் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசின் கொள்கைகளுக்கும் கதவைத் திறந்துவைத்துவிடுகின்றது. இவ்வாறு, தீய தூதர்களின் செல்வாக்கு சபைகளில் உணரப்படும்.Mar 315.3

    மக்களின் சுவைக்கு ஏற்ப நடத்தப்படும் ஊழியமானது, ஆவிமார்க்கத்தை வெற்றியுடன் எதிர்த்து நிற்கமுடியாது. ஆவி மார்க்கத்தின் துயரம் தரத்தக்க செல்வாக்கினின்று, தங்களது மந்தைகளை எதைக்கொண்டும் காப்பற்றத்தக்கதான வழி அந்தச் சபைகளுக்கு இல்லை. ஆவிமார்க்கத்தின் வருந்தத்தக்க விளைவுகள் அனைத்தும் இந்தக் காலத்திலுள்ள போதகர்கள் மீதே தங்கியிருக்கிறது; ஏனெனில், அவர்கள் சத்தியத்தைப் பாதங்களின் கீழ்போட்டு மிதித்துப்போட்டார்கள். அதற்குப் பதிலாக, கட்டுக்கதைகளை விருப்பத்தோடு தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.Mar 315.4

    சாத்தான் இந்த உலகத்தையே ஏமாற்றுவதற்கான தனது இறுதி முயற்சிக்காக, நீண்டகாலமாக ஆயத்தஞ்செய்துவந்திருக்கிறான். ஏதேனில் ஏவாளிற்கு கொடுத்த உறுதிமொழியில்தான், அவனது அடித்தளமே போடப்பட்டிருக்கிறது. “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது-ஆதி. 3:4,5. கொஞ்சங்கொஞ்சமாக ஆவிமார்க்கத்தை முன்னேற்றுவிக்கின்ற, அந்த வஞ்சகத்தின் தலையாய படிப்பிற்காக, வழியை ஆயத்தஞ்செய்திருக்கின்றான். அவனது திட்டத்தின் முழு நிறைவேறுதலையும் இன்னும் அடையவில்லை. இறுதிக்கட்டத்தின் மீதியான நேரத்தில், அந்தக் காரியம் நிறைவேறுதலை அடையும். “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள இராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் செர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது” என்று தீர்க்கதரிசி கூறுகிறார்-வெளி. 16:13,14. தேவனுடைய வார்த்தையிலே விசுவாசத்தை வைத்து, அவரது வல்லமையினாலே காப்பாற்றப்பட்டாலொழிய, முழு உலகமும் இந்த வஞ்சகம் எனப்படும் அணிக்குள் அடித்துச்செல்லப்பட்டுவிடும். சாவைச் சந்திக்கின்ற ஒரு பாதுகாப்பிற்காக, மக்கள் விரைவாகத் தாலாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவ கோபாக்கினை சொரியப்படுவதால் மாத்திரமே அவர்கள் விழிப்படைவார்கள்.⋆Mar 316.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 316.2

    “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிரங்கி அவர்களை விடுவிக்கிறார்” - சங்கீதம் 34:7.Mar 316.3